wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர் இணைமொழிகள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அதிக சுதந்திரம் என்ற பெயரில் சிலர் துப்பாக்கிகளைக் கையிலேந்தி

________________ சிறு குழந்தைகளைச் சுட்டுக் கொல்லும் போக்கினை உலக நாடுகள் வன்மையாகக் கண்டிக்கின்றன.

a)

விருப்பு வெறுப்பின்றி     

b)

ஈவிரக்கமின்றி

c)

கங்கு கரையின்றி

2.

யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க சில கருத்துகளை நேரடியாக கூறாமல் _____ கூறுவது நல்லது

a)

சீரும் சிறப்புமாக

b)

கண்டதையும்

கேட்டதையும்

c)

சாடை மாடையாய்

3.

ஒருவர் எவ்வளவு பெரிய செல்வந்தரானாலும் பிறரிடம் எப்போதுமே __________ பேச வேண்டும்.

a)

அடக்க ஒடுக்கத்துடன்

b)

இன்பத் துன்பத்துடன்

c)

மேடு பள்ளத்துடன்

4.

சிலர் வாழ்க்கையில் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்று _____________ பேசுவார்களே தவிர அதற்காக எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

a)

ஒருகை பார்த்து

b)

வெட்டிப் பேச்சு

c)

சாக்குப் போக்குகள்

5.

தொழிலாளர்கள் பல முறை போராடியபோதும் அவர்களின் ஊதியத்தை அதிகரிக்க முடியாது என்று முதலாளிகள் _______ கூறிவிட்டனர்.

a)

சீரும் சிறப்புமாக

b)

அழுத்தம் திருத்தமாக

c)

ஆற அமர

6.

மனிதனுக்கு மனிதன் சமம் என்றாலும் இன்னும் பல இடங்களில் ஒருவன் மற்றொருவனைவி உயர்ந்தவன் என்ற ________ இருக்க தான் செய்கிறது.

a)

ஏற்றத் தாழ்வு

b)

நெளிவு சுளிவு

c)

சட்ட திட்டம்

7.

இரண்டு மணி நேரம் மெதுவோட்டம் ஓடிய மாணவர்கள், அதன் முடிவில் _____ காணப்பட்டனர்.

a)

ஒட்டி உலர்ந்து

b)

வற்றி வரண்டு

c)

வாடி வதங்கி

d)

இளைத்து களைத்து

8.

இன்றைய இளைய தலைமுறையினர் பலர் ____ உடலைப் பெற

      விரும்பித் தவறான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றத் துவங்குகின்றனர்.

a)

ஒட்டி உலர்ந்த

b)

இளைத்து களைத்த

c)

வாட்ட சாட்டமான

9.

______ இருந்த ரவியும் குணாவும் தற்போது இணைந்து பல சாதனைகளைப் புரிந்து வருகின்றனர்

a)

ஈடு இணையாக

b)

ஊரும் பேருமாக

c)

எதிரும் புதிருமாக

10.

வாழ்க்கை ____ நிறைந்தது என்பதை அறிந்து நாம் அவற்றைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

a)

சொத்து சுகம்

b)

நெளிவு சுளிவு

c)

மேடு பள்ளம்

11.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, தகாத செயல்களில் ஈடுபடுபவர்களைச் சீருடை அணியாத காவலர்கள் ________________  பிடித்துக் கைது செய்வர்.

a)

வாட்ட சாட்டமாக

b)

விட்டுக்கொடுத்து

c)

கையுங்களவுமாக

12.

சில வேளைகளில் நாம் வெளிநாடுகளுக்குச் சென்று சிரமங்களை எதிர்கொள்ளும் போதுதான் நம் நாட்டின் ________________ உணர்கிறோம்.

a)

இன்ப துன்பங்களை

b)

அருமை பெருமைகளை

c)

நெளிவு சுளிவுகளை

13.

தம்மிடம் இருப்பவற்றை இல்லை என்று சொல்லாமல் மற்றவருக்குக் கொடுத்த தமிழ் மன்னர்கள் _______ பெயர் பெற்றவர்கள்.

a)

வம்பு தும்பிற்கு

b)

ஏற்ற தாழ்விற்கு

c)

தான தர்மத்திற்கு

14.

குடும்பத்திலுள்ள பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் ____________ வாழத் தவறுவதால் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிப்புக்குள்ளாகி விடுகிறது.

a)

இடங்கொடுத்து

b)

ஓட்டம்பிடித்து

c)

விட்டுக்கொடுத்து

15.

ஆனந்தி தன் பிள்ளைளுடன் வீட்டின் _______________ பகிர்ந்துகொள்வதால் அவர்களும் பணத்தின் அருமையைப் புரிந்துகொண்டு செலவு செய்கிறார்கள்.

a)

வரவு செலவுகளை

b)

நன்மை தீமைகளை

c)

ஏற்றத் தாழ்வுகளை

16.

சமூக மன்றத்தின் திறப்பு விழாவுக்கு வந்த அமைச்சரை மக்கள் _____ முழங்க வரவேற்றனர்

a)

கூச்சல் குழப்பம்

b)

மேள தாளம்

c)

மேடு பள்ளம்

17.

திரைப்படங்களில் எப்போதுமே ____________ நடிக்கும் நடிகர்கள் உண்மையில் நல்ல நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

a)

விட்டுக்கொடுத்து

b)

எதிரும் புதிருமாக  

c)

நகமும் சதையுமாக

18.

பெற்றேர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கடுமையாக நடந்துகொண்டாலும் அவர்களின் கருத்துகளுக்கும் _____________ மிகவும் அவசியம்.

a)

இடங்கொடுப்பது

b)

விட்டுக்கொடுப்பது

c)

ஈடுகட்டுவது

19.

ஓட்டப் பந்தயத்தில் இம்முறை முதல் நிலையில் வரவில்லை என்றாலும் அடுத்த முறை ______________ விடுவதாக பரத் தன் நண்பர்களிடம் சவால் விட்டான்.

a)

இட்டுக்கட்டி

b)

ஈடுகட்டி

c)

ஒரு கை பார்த்து

20.

தன் வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்தித்தாலும் ரவி _____ அவற்றைக் கடந்து வந்தான்.

a)

வாட்ட சாட்டமாக

b)

முட்டி மோதி

c)

ஏனோ தானோ