wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி ஆண்டு 4

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெறமுடியும்

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

2.

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும்.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

3.

தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

4.

உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

5.

பல நாட்களாக பேச்சுப் போட்டிக்கு பயிற்சி எடுத்து வந்த கபிலன் அப்போட்டியில் முதல் நிலையில் வெற்றி பெற்றான்.

a)

சிறு துறும்பும் பல் குத்த உதவும்

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

c)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

6.

அறிவியலில் சிறந்து விளங்கிய விமலன், தனது புத்தாக்க ஆற்றலைக் கொண்டு பல உருவாக்கங்களை உருவாக்கி, வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டான்.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

c)

சிக்கனம் சீரளிக்கும்

7.

' உலக அளவில் மிக நீளமான ஓவியங்களை வரைந்த தனி நபர்’ என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார், பரிமளகாந்த். 660 மீட்டர்- அதாவது 2166 அடி நீளத்திற்கு இவர் வரைந்த ஓவியங்கள் கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சென்னையை சேர்ந்தவரான பரிமளகாந்த் முழு நேர ஓவியர் அல்ல. கல்லூரி படிப்பின்போது பொழுதுபோக்காக ஓவியம் வரைவதில் ஈடுபட்டவர், வேலைக்கு சென்ற பிறகும் அதைத் தொடர்ந்து செய்தார். கின்னஸ் சாதனையாளராக அவருக்கு ஓவியம் வரைவதில் நாட்டம் உருவானது. நிறைய ஓவியங்களை வரைந்த நிலையில், பரிமளகாந்துக்கு வித்தியாசமாக ஓவியத்துறையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டிருக்கிறது. அந்த உந்துதலே கின்னஸ் சாதனையாக உருவாகியிருக்கிறது.


இச்சூழலுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

8.

சிகையலங்காரம் செய்யும் கலையை மதுமிதா முறையாகப் பயின்று பட்டம் பெற்றாள். சுயமாகக் கடை ஒன்றையும் வைத்து அக்கலையைச் சிறப்பாகச் செய்து வருகிறாள்.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

9.

கயல்விழி பழைய நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள். ஆனால், அதிலுள்ள சில படங்களும் செய்திகளும் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத் தன் தாயார் கூற அறிந்து வருந்தினாள்.

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

10.

அண்ணனின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான். அதனால், மனம் வருந்தினான்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

11.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்