NEW
Font size
WorksheetsPU1H1 2024
Total questions: 15
Worksheet time: 8mins
வளவன் சிறுவனாக இருக்கும் போதே அவனது தந்தை இறந்து விட்டதால் பல்வேறு உதவிகளைச் செய்து _____ அவனது மாமாவை வளவன் நன்றியோடு நினைவுகூர்ந்தான்
அகலக்கால் வைத்த
அலைக்கழித்த
குரல்கொடுத்த
கைதூக்கவிட்ட
தன் உயிர்த் தோழி தன்னைப் புரிந்துகொள்ளாமல் பிரிந்து சென்றதை நினைத்து _______ கொண்டு நின்ற அகிலாவை அவளது அக்கா ஆறுதல் கூறித் தேற்றினாள்
கண்ணைக் கசக்கிக்
கண்ணை உறுத்திக்
காதில் பூச்சிற்றிக்
கரைபுரண்டு
துரித உணவுகளை ஒதுக்கி பாரம்பரிய உணவுகளை மக்கள் விரும்பி உண்பதால் சிறுதானிய உற்பத்தியாளர்களின் ______
ஆட்டங்கண்டுள்ளது
கை ஓங்கியுள்ளது
கை சுத்தமாகியுள்ளது
கரைபுரண்டுள்ளது
உலகப் பொருளாதாரம் _______ தொடங்கினால் மக்கள் வாழ்க்கை இன்னும் மோசமாகும் நிலை உருவாகலாம்
ஆட்டங்காணத்
அகலக்கால் வைக்கத்
கண்ணாயிருக்கத்
கரைபுரளத்
குடும்ப நல்வாழ்வைக் கருதி நீட்டிக்கப்பட்ட மகப்பேறு விடுப்பை வழங்கும் அரசாங்கத்தின் முடிவுக்குத் தாய்மார்கள் பலரும் _______
காதில் வாங்கினர்
கைதூக்கிவிட்டனர்
குரல் கொடுத்தனர்
கரைபுரண்டனர்
தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்யவேண்டும் என்று ஆசிரியர் கூறிய அறிவுரைகளை ______ அபிநயா இறுதித்தேர்வில் தோல்வி அடைந்தாள்
காதில் வாங்காத
காதோடு காதாக
கண்ணாயிருக்காத
கரைபுரண்டனர்
முல்லையைத் திருமணம் செய்துகொள்வதில் கோபாலனுக்கு ஆர்வம் இல்லாதபோதும் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி _____ திருமணத்திற்குச் சம்மதித்தான்
குரல்கொடுத்து
காதோடு காதாக
காதில் வாங்காது
அரைமனதோடு
ஓர் இக்கட்டில் மாட்டிக் கொண்ட எனக்கு உதவுவதாக உறுதியளித்த ரவி என்னை ______ இறுதியில் உதவாமல் கைவிரித்து விட்டான்
அலைக்கழித்துவிட்டு
கைதூக்கிவிட்டு
காதில் வாங்கிவிட்டு
காதில் பூச்சுற்றிவிட்டு
_____ சொல்ல வேண்டிய செய்திகளை ஊரார் பார்க்க நிழற்படங்களோடு சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது
கண்ணை உறுத்தி
கைதூக்கிவிட்டு
அரைமனதாக
காதோடு காதாக
நான் சொகுசான வீட்டில் வசிப்பது எனது உறவினர்களின் "________'', என்று சொல்லி வருந்தினான் செல்வம்
கண்ணை உறுத்தியது
கண்ணைக் கசக்கியது
கரைபுரண்டது
கைதூக்கிவிட்டது
குறைவான சம்பளத்தில் பணியாற்றும் செல்வம் தன் மகனை ________ வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைப்பதால் குடும்ப செலவிற்கே தவித்துக் கொண்டிருக்கிறார்
காதில் வாங்கி
அகலக்கால் வைத்து
குரல்கொடுத்து
கைதூக்கிவிட்டு
சில நாடுகள் தேர்தலின்போது மக்களின் ______ வாக்குறுதிகளை அள்ளிவீசி தேர்தலில் ஓட்டு வாங்கிவிடுகின்றனர்
கண்ணாயிருந்து
காதில் பூச்சுற்றி
ஆட்டங்கண்டு
கைதூக்கிவிட்டு
________ உடையவரைத்தான் காசாளராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே வங்கிகளின் முடிவாகும்
கைசுத்தம்
அரைமனது
கை ஓங்கி
கைதூக்கிவிடும்
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்கள் ______ வெள்ளமெனத் திரண்டனர்
குரல் கொடுத்து
அலைக்கழித்த
கை ஓங்கிய
கரைபுரண்ட
ஆண்டிறுதித் தேர்வுக்கு இரவும் பகலும் ______ படித்த முத்தமிழன் அத்தேர்வில் உச்சத் தேர்ச்சி அடைந்தான்
குரல் கொடுத்து
கண்ணாயிருந்து
அகலக்கால் வைத்து
கரைபுரண்டு
