wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புதிர்ப்போட்டி அறிவியல் ஆண்டு 6

Total questions: 30

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

தொற்றுநோய் பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய சரியான வழிமுறையைத் தெரிவு செய்க.

a)

குழாய் நீரை அருந்த வேண்டும்

b)

உணவுப் பொருள்களை ஈக்கள் மொய்க்காதவாறு மூடி வைக்க வேண்டும்

c)

தொற்று நோய் கண்டவரின் துவாலையைப் பகிர்ந்து பயன்படுத்தலாம்.

d)

தேவைப்படும்போது மட்டுமே பல் துலக்க வேண்டும்.

2.

கீழ்க்காண்பனவற்றுள் நுண்ணுயிர்களைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக

a)

நுண்ணுயிர்கள் சுவாசிக்கும், நகரும், வளரும், இனவிருத்தி செய்யும்.

b)

நுண்ணுயிர்களை நாம் கண்களால் பார்க்க முடியும்.

c)

நுண்ணுயிர்கள் தீமையை மட்டுமே தருகின்றன.

d)

நொதிமம் உயிர்வளியை வெளியிடுகின்றது.

3.

நுண்ணுயிரின் நன்மையைத் தேர்ந்தெடுக.

a)

சொத்தைப் பல் உண்டாக்குதல்

b)

நோய் எதிர்ப்பு மருந்துகள் உருவாக்கப் பயன்படுகிறது

c)

உணவைக் கெடச் செய்கிறது

4.

கீழ்காணும் விலங்குகள் எஃது அழிவை எதிர்நோக்கும் விலங்காகும் ?

a)
b)
c)
d)
5.

ஆதாம் குன்றின் உச்சியில் நிற்கிறான். அவன் குன்றிலிருந்து 1 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தன் பள்ளியைப் பார்க்க நினைத்தான். அவனுடைய பள்ளியைத் தெளிவாகப் பார்க்கப் பயன்படுத்தக் கூடிய பொருத்தமான கருஇ எது?

a)

தொலைநோக்காடி

b)

இணைப்பார்வை தொலைநோக்காடி

c)

நுண்பெருக்கி

d)

உருப்பெருக்காடி

6.

சில விலங்குகள் தனித்து வாழ்வதன் அவசியம் என்ன?

a)

வசிப்பிடத்திற்கான போராட்டம் அதிகரிக்கிறது.

b)

உணவுப் போராட்டத்தைத் தவிர்த்து விடுகிறது.

c)

மற்ற இனவகை விலங்கிடமிருந்து ஏற்படும் எதிர்ப்பு.

d)

உயிரிழப்பு

7.

எந்தப் பதப்படுத்தும் முறையின்வழி அந்தக் குளிர்பானம் அதிக நாள் கெடாமலிருக்கும்?

a)

சீனி சேர்க்கப்பட்டதால்.

b)

உப்பு சேர்க்கப்பட்டதால்.

c)

வெப்பப்படுத்தப்பட்டு உடனடியாகக் குளிர வைத்ததால்.

d)

உலர வைத்துக் காற்றை வெளியேற்றியதால்

8.

பின்வரும் எந்த பொருள் மட்கும்?

a)
b)
c)
d)
9.

பின்வரும் நிலவின் கலைகளில் எது மதிமான நாள்காட்டியில் 15-ஆவது நாளில் தெரியும்?

a)
b)
c)
d)
10.

கீழ்க்காண்பனவற்றுள் எது பூமி தன் அச்சில் சுழலதால் ஏற்படும் விளைவைக் காட்டுகிறது?

a)

சூரியன் காலையில் மேற்கில் உதிக்கிறது

b)

நிழலின் நிலையில் மாற்றம் ஏற்படுகிறது

c)

பூமி தன் அச்சில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழல்கிறது

d)

பூமி சூரியனை ஒரு முழுச் சுற்றை அடைய 12 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

11.

மறுசுழற்சி செய்ய வேண்டியதன் அவசியம் யாது?

a)

கழிவுகளை அகற்றுவதற்கான செலவைக் குறைக்கிறது.

b)

இயற்கை வளங்களைப் பாதிப்படையச் செய்ய

c)

இயற்கை வளங்களைப் பாதுகாக்காமல் இருக்க

d)

கழிவுகளின் பயன்பாட்டை அதிகரிக்க

12.

கீழ்க்காணும் விலங்குகளில் எது உலகிலிருந்து சுவடே இல்லாமல் அழிந்துபோன விலங்காகும்?

a)
b)
c)
d)
13.

படத்தில் காணும் விலங்குகளுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன?

a)

முற்றழிவை எதிர்நோக்கும் விலங்குகள்

b)

முற்றழிந்த விலங்குகள்

c)

பாதுகாக்கப்பட்ட விலங்குகள்

d)

விலங்கக காப்பகத்தில் உள்ள விலங்குகள்

14.

ஓர் ஓட்டப்பந்தைய வீரர் 400 மீட்டர் தூரத்தை 20 வினாடிக்குள் கடந்தார். அவரின் வேகம் என்ன ?

a)

10 மீட்டர் / வினாடி

b)

15 மீட்டர் / வினாடி

c)

20 மீட்டர் / வினாடி

15.

ஒரு பேருந்து 280 km தூரத்தை அடைய 4 மணி நேரம் பயணித்தது. ஆக, அப்பேருந்தின் வேகம் என்ன?

a)

60 கிலோமீட்டர் / மணி

b)

70 கிலோமீட்டர் / மணி

c)

80 கிலோமீட்டர் / மணி

16.

நுண்ணுயிர்களில் மிகப் பெரிய நுண்ணுயிர் எது?

a)

குச்சியம்

b)

நச்சியம்

c)

புரோடோசொவா

d)

பூஞ்சைக்காளான்

17.

கீழ்க்காணும் படம் எந்த கிரகணத்தைக் காட்டுகின்றது ?

a)

சூரிய கிரகணம்

b)

சந்திர கிரகணம்

c)

நிலவின் கலை

d)

செவ்வாய் கிரகணம்

18.

மேற்காணும் நிகழ்வின் போது X என்னும் இடத்தில் என்ன நிகழும் ?

a)

வெப்பநிலை அதிகரிக்கும்

b)

வானில் சந்திரனைக் காண இயலும்

c)

அவ்விடம் வெளிச்சமாக இருக்கும்

d)

பறவைகள் இரைத் தேடச் செல்லும்

19.
படத்தில் காணப்படும் சிறுமியின் நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க என்ன செய்யலாம்?
a)
தினமும் குளிப்பாட்டலாம்
b)
அவளை தொடும் முன்னர் கைகளை வழலையால் கழுவலாம்
c)
தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்
d)
ஊசி போடலாம்
20.
கொடுக்கப்பட்டுள்ள பொருள் எந்த சக்தியின் துணையுடன் இயங்குகின்றது ?
a)
வெப்பச்சக்தி
b)
அணு சக்தி
c)
மின் சக்தி
d)
ஒசிச்சக்தி
21.

படம், தாவரச் செடி வேறொரு மரத்தில் ஒட்டிக் கொண்டு வாழ்வதைக் காட்டுகிறது. ஏன் இத்தாவரம் இப்பெரிய மரத்தின் மீது படர்ந்து வாழ்கிறது?

a)

அதிகமான காற்றைப் பெறுவதற்கு

b)

போதிய சூரிய ஒளியைப் பெறுவதற்கு

c)

சுலபமாக மர உச்சி வரை வளர்வதற்கு

d)

மற்ற விலங்குகள் உண்பதைத் தவிர்ப்பதற்கு

22.

வரிக்குதிரைகள் கூட்டமாக வாழும் விலங்குகளாகும். ஏன் இவை கூட்டமாக வாழ்கின்றன?

a)

தன் குழுவைப் பலப்படுத்த

b)

தன் குழு உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த

c)

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதை சுலபமாக்க

d)

அனைத்து உறுப்பினர்களும் எப்பொழுதும் குழுவில் இருப்பதை உறுதிபடுத்த

23.

தனித்து வாழும் விலங்குகள்

a)

இனசேர்க்கைப் பருவத்தை தவிர்த்துப் பெரும்பாலான காலங்களில் இவ்விலங்குகள் தனித்து வாழ்கின்றன

b)

ஒரே வகை மூலத்தை போராடி பெறக் கூடிய சூழல் ஏற்படும்

24.

விலங்குகளிடையே போராட்டம்

a)

வசிப்பிடம்

b)

இணை

c)

நீர்

d)

உணவு

25.

படம் திரு துரை ஒரு மரப்பலகையை இரம்பத்தால் அறுப்பதைக் காட்டுகிறது. கீழ்காணும் விடைகளுள் எது சரியான கூற்றாகும்?

a)

இந்நடவடிக்கைக்கு சக்தி தேவையில்லை

b)

தள்ளும் உந்து சக்தியைப் பயன்படுத்துகிறது

c)

இழுக்கும் உந்து சக்தியைப் பயன்படுத்துகிறது

d)

இழுக்கும் தள்ளும் உந்து சக்தியைப் பயன்படுத்துகிறது

26.

படம் பதனிடப்படுத்தப்பட்ட ஒரு வகை உணவைக் காட்டுகின்றது. இம்முறையில் உணவை பதனிடுவதால் ஏற்படும் நன்மை என்ன?

a)

உணவு விரைவாக கெட்டுவிடும்

b)

உணவின் சுவையில் மாற்றம் இருக்காது

c)

உணவின் இழையமைப்பு மாறிவிடும்

d)

உணவு நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்

27.

செல்வன் தன் மூச்சுக் காற்றைக் கண்ணாடியின் மேல் ஊதினான். கண்ணாடியின் மேற்பரப்பு ஈரமாகக் காணப்பட்டதற்கான காரணம் என்ன?

a)

நீராவி ஆவியாகுதல்

b)

நீர் நீராவியாகுதல்

c)

நீர்த் துளிகள் உறைந்துள்ளன

d)

நீராவி நீராகுதல்

28.

வீட்டில் பயன்படுத்தும் மின்சாரத்தை அளக்கப் பயன்படுத்தப்படும் சரியான தர அளவு எது?

a)

கனசதுர மீட்டர்

b)

சதுர செண்டிமீட்டர்

c)

கிலோவாட்

d)

கிலோமீட்டர்

29.

இச்சூழல் எதனை விவரிக்கிறது?

a)

உணவுத் தட்டுப்பாடு

b)

ஒரே வகையான விளங்குகளிடையே ஏற்படும் போராட்டம்

c)

வெவ்வேறு இனவகை விலங்குகளிடையே ஏற்படும் போராட்டம்

d)

விலங்குகள் தம் இனங்களைப் பாதுகாக்கின்றன

30.

மட்காத குப்பைகளை முறையற்ற நிலையில் வீசுவதால் என்ன விளைவு ஏற்படும்?

a)

தோல் நோய்

b)

தாவரங்களுக்கு உரம் கிடைக்கும்

c)

பொருளாதாரத்திற்கு மூலத்தனமாகும்

d)

திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு