WorksheetsSAINS REVISION
Total questions: 48
Worksheet time: 26mins
குளிர் காலத்தின் போது திமிங்கலம் வெப்பமான இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும். ஏன் இந்த விலங்கு சீதோஷ்ண நிலையின் மாற்றத்தின் போது இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்கிறது/
தன் இனத்தை அதிகரிக்க
உணவு பெறுவதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும்
உடலின் வெப்பத்தை அதிகப்படுத்த
உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த
தொற்றுநோய் பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய சரியான வழிமுறையைத் தெரிவு செய்க.
குழாய் நீரை அருந்த வேண்டும்
உணவுப் பொருள்களை ஈக்கள் மொய்க்காதவாறு மூடி வைக்க வேண்டும்
தொற்று நோய் கண்டவரின் துவாலையைப் பகிர்ந்து பயன்படுத்தலாம்.
தேவைப்படும்போது மட்டுமே பல் துலக்க வேண்டும்.
பின்வரும் விலங்குகளில் தனித்து வாழும் விலங்கு எது?
எறும்பு
சிங்கம்
புலி
கழுதை
பின்வருபவை யாவும் மாணவர்கள் அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், ஒன்றைத் தவிர
ஆசிரியர் அனுமதியின்றி பரிசோதனையை மேற்கொள்ளக் கூடாது.
அறிவியல் அறை எப்பொழுதும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
பரிச்சோதனைக்குப் பயன்படுத்திய கருவிகளைச் சுத்தம் செய்யக் கூடாது
கீழ்க்காண்பனவற்றுள் நுண்ணுயிர்களைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக
நுண்ணுயிர்கள் சுவாசிக்கும், நகரும், வளரும், இனவிருத்தி செய்யும்.
நுண்ணுயிர்களை நாம் கண்களால் பார்க்க முடியும்.
நுண்ணுயிர்கள் தீமையை மட்டுமே தருகின்றன.
நொதிமம் உயிர்வளியை வெளியிடுகின்றது.
நுண்ணுயிரின் நன்மையைத் தேர்ந்தெடுக.
சொத்தைப் பல் உண்டாக்குதல்
நோய் எதிர்ப்பு மருந்துகள் உருவாக்கப் பயன்படுகிறது
உணவைக் கெடச் செய்கிறது
கீழ்காணும் விலங்குகள் எஃது அழிவை எதிர்நோக்கும் விலங்காகும் ?
கீழ்காண்பனவற்றுள் எஃது உந்து விசையின் விளைவு அல்ல ?
பொருளின் வடிவத்தில் மாற்றம்
பொருளின் வேகத்தில் மாற்றம்
பொருளின் அளவில் மாற்றம்
பொருளின் நகரும் திசையில் மாற்றம்
கீழ்காணும் நடவடிக்கை அதிக வேகத்தைக் கொண்ட நடவடிக்கையைத் தெரிவு செய்க.
ஆதாம் குன்றின் உச்சியில் நிற்கிறான். அவன் குன்றிலிருந்து 1 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தன் பள்ளியைப் பார்க்க நினைத்தான். அவனுடைய பள்ளியைத் தெளிவாகப் பார்க்கப் பயன்படுத்தக் கூடிய பொருத்தமான கருஇ எது?
தொலைநோக்காடி
இணைப்பார்வை தொலைநோக்காடி
நுண்பெருக்கி
உருப்பெருக்காடி
சில விலங்குகள் தனித்து வாழ்வதன் அவசியம் என்ன?
வசிப்பிடத்திற்கான போராட்டம் அதிகரிக்கிறது.
உணவுப் போராட்டத்தைத் தவிர்த்து விடுகிறது.
மற்ற இனவகை விலங்கிடமிருந்து ஏற்படும் எதிர்ப்பு.
உயிரிழப்பு
எந்தப் பதப்படுத்தும் முறையின்வழி அந்தக் குளிர்பானம் அதிக நாள் கெடாமலிருக்கும்?
சீனி சேர்க்கப்பட்டதால்.
உப்பு சேர்க்கப்பட்டதால்.
வெப்பப்படுத்தப்பட்டு உடனடியாகக் குளிர வைத்ததால்.
உலர வைத்துக் காற்றை வெளியேற்றியதால்
கீழ்க்காணும் பிராணிகளுள் எவை வெட்டுக்கிளியைப் போல் சுவாசிக்கின்றன?
தலைப்பிரட்டை மற்றும் கரடி
கொசு மற்றும் தவளை
வண்ணத்துப்பூச்சி மற்றும் கரப்பான் பூச்சி
புழு மற்றும் பட்டுப் புழு
பின்வரும் எந்த பொருள் மட்கும்?
பூமி தன் அச்சில் சுற்றி வர _______ ஆகிறது?
1 வருடம்
2 நாள்கள்
24 மணி நேரம்
1 மாதம்
பின்வரும் நிலவின் கலைகளில் எது மதிமான நாள்காட்டியில் 15-ஆவது நாளில் தெரியும்?
கைப்பேசி ஒலிக்கும்போது எவ்வகையான சக்தி மாற்றம் ஏற்படும்?
மின்சக்தி ---> ஒளிசக்தி --> இயக்க சக்தி -->
உள்நிலை சக்தி --> ஒளி சக்தி --> வெப்ப சக்தி
இராசயன சக்தி --> ஒளி சக்தி --> ஒலி சக்தி
மின்சக்தி --> ஒலி சக்தி --> இயக்க சக்தி
கீழ்க்காண்பவற்றுள் எது pH 7-க்கு மேலான தன்மையுடைய பொருளைக் குறிக்கிறது?
ஆரஞ்சு
மருந்து
வழலைக்கட்டி
நீர்
கீழ்க்காண்பனவற்றுள் எது பூமி தன் அச்சில் சுழலதால் ஏற்படும் விளைவைக் காட்டுகிறது?
சூரியன் காலையில் மேற்கில் உதிக்கிறது
நிழலின் நிலையில் மாற்றம் ஏற்படுகிறது
பூமி தன் அச்சில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழல்கிறது
பூமி சூரியனை ஒரு முழுச் சுற்றை அடைய 12 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.
மறுசுழற்சி செய்ய வேண்டியதன் அவசியம் யாது?
கழிவுகளை அகற்றுவதற்கான செலவைக் குறைக்கிறது.
இயற்கை வளங்களைப் பாதிப்படையச் செய்ய
இயற்கை வளங்களைப் பாதுகாக்காமல் இருக்க
கழிவுகளின் பயன்பாட்டை அதிகரிக்க
கீழ்க்காணும் விலங்குகளில் எது உலகிலிருந்து சுவடே இல்லாமல் அழிந்துபோன விலங்காகும்?
முற்றழிந்த விலங்குகள் என்றால் என்ன?
பூமியில் மிக குறைவான எண்ணிக்கையில் இருக்கும் விலங்குகளாகும்.
மிருகக்காட்சிசாலையில் இருக்கும் விலங்குகள்
பூமியில் சுவடே இல்லாமல் அழிந்து போன விலங்குகள்
குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வாழும் விலங்காகும்.
- சபாவில் ஒரு குறிப்பிட்ட விலங்கக காப்பகத்தில் பாதுகாக்கப்படும் விலங்கு.
- போர்னியோ மற்றும் சுமத்தெரா காடுகளில் காணப்படும் விலங்காகும்.
பாண்டா
ஜாவா மயில்
தாப்பீர்
ஓராங் ஊத்தான்
படத்தில் காணும் விலங்கு அழிந்ததற்கான காரணம் என்ன?
பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு
காடுகளின் அழிப்பு
வேட்டையாடப்பட்டன
தும்பிக்கைக்காக வேட்டையாடப்பட்டன.
படத்தில் காணும் விலங்குகளுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன?
முற்றழிவை எதிர்நோக்கும் விலங்குகள்
முற்றழிந்த விலங்குகள்
பாதுகாக்கப்பட்ட விலங்குகள்
விலங்கக காப்பகத்தில் உள்ள விலங்குகள்
டைனசோர்கள் முற்றழிந்ததற்கான காரணம் என்ன?
வேட்டையாடப்பட்டன
எரிமீன் கற்கள் பூமியைத் தாக்கியதால்
இறைச்சிக்காக வேட்டையாடினர்.
தோலுக்காக வேட்டையாடினர்.
கீழ்க்காணும் விலங்குகளில் எது மலேசியாவில் முற்றழிவை எதிர்நோக்கும் விலங்கு அல்ல?
கீழ்க்காணும் தாவரங்களுள் எவை முற்றழிவை எதிர்நோக்குகின்றன?
மேற்காணும் சூழல் எவ்விலங்கு அழிவை எதிர்நோக்க காரணமாகின்றது?
படத்தில் காணும் விலங்கு எவ்வாறு முற்றழிவை எதிர்நோக்குகின்றது?
குப்பைகளை ஆற்றில் வீசுவதால்
முட்டைகளை மனிதர்கள் திருடுவதால்
இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதால்
விலங்குகள் முட்டையைச் சாப்பிடுவதால்
கீழ்க்காணும் வழிகளில் எவை விலங்குகளைப் பராமரிக்கும் வழியாகும்?
பாதுகாக்கப்பட்ட காடுகள்
மரங்களை மறுநடவு செய்தல்
ஆறுகளைச் சுத்தம் செய்தல்
கடலாமைகளின் முட்டைகளைச் சேகரித்தல்
படத்தில் காணும் விலங்கு சபா, சரவாக், காளிமந்தான் காடுகளில் வாழும் ஒரு வகை குரங்காகும். இவ்விலங்கு ஏன் முற்றழிவை எதிர்நோக்குகின்றது?
மூக்கிற்காக வேட்டையாடப்படுகின்றது
உரோமத்திற்காக வேட்டையாடப்படுகின்றது.
காடுகள் அழிக்கப்படுவதால்
இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின்றது.
படத்தில் காணும் பறவையினம் ஏன் எண்ணிக்கையில் வீழ்ச்சி அடைந்து வருகின்றது?
நவீன கூரை வீடுகளால் அவற்றிற்குப் புகழிடம் இல்லாமல் போகின்றது.
காற்றுத்தூய்மைக்கேட்டால் அவற்றின் உணவான புழுப்பூச்சிகள் மடிந்துவிடுகின்றன.
நாட்டு வைத்தியத்திற்காக வேட்டையாடப்படுகின்றது.
காடுகளின் அழிவால்
விலங்குகளின் எண்ணிக்கையில் ஏற்படும் சரிவிற்கு ஏன் நாம் முக்கியத்துவம் வழங்க வேண்டும்?
பூமியைச் சிறப்பாக வழிநடத்தும் பொறுப்பு மனிதனுக்கு உண்டு
சுற்றுச்சூழலின் சமநிலையைப் பாதுகாக்க
மனிதன் மாண்புமிக்கவன் என்பதனால்
விலங்குகள் பூமியைப் பாதுகாக்க துணைபுரிகின்றன.
வெட்டுமரத் தொழிலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் விளைவுகள் யாவை?
மண் அரிப்பு
நிலச்சரிவு
திடீர் வெள்ளம்
காற்றுத் தூய்மைக்கேடு
கீழ்க்காண்பனவற்றுள் எஃது உயிரினங்களைப் புணரமைக்கும் வழிகள் ஆகும்?
மறுநடவு செய்தல்
கடுமையான சட்ட திட்டங்கள்
அழிந்துவரும் தாவரங்களைத் தோட்டங்களில் நட்டு பாதுகாத்தல்.
நீர்நிலைகளைத் தூய்மை செய்தல்.
பராமரிப்பு மையத்தில் கடலாமைகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன?
முட்டைகள் சேகரிக்கப்பட்டு முட்டையிலிருந்து வரும் கடலாமைக் குஞ்சுகள் கடலில் விடப்படுகின்றன.
முட்டைகள் சேகரிக்கப்பட்டு முட்டையிலிருந்து வரும் கடலாமைக் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு கடலில் விடப்படுகின்றன.
முட்டைகள் சேகரிக்கப்பட்டு பொரிந்த குஞ்சுகள் முழுமையாக வளர்ந்த பின் கடலில் விடுதல்.
பொரிந்த குஞ்சுகளைச் சேகரித்து அவற்றைப் பரிசோதித்து கடலில் விடுதல்.
பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளில் எந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம்?
பொழுதுபோக்கிற்காக மீன்களைப் பிடிக்கலாம்.
அனுமதியோடு பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள அங்குச் செல்லலாம்.
அதிகாரிகளின் கண்காணிப்போடு சுற்றுலாத்துறை
பவளப்பாறைகள் சேகரித்தல்
இரத்தத்தில் இருக்கும் நோய்க் கிருமிகளை கண்டறிய தேவைப்படும் கருவி?
தொலைநோக்கி
நுண்ணோக்காடி
கடிக்காரம்
ரெக்டர் கருவி
அறிவியல் அறையில் நுழையும் முன்னர் ........... அனுமதியைப் பெற வேண்டும்.
தலையாசிரியர்
தலைமை மாணவன்
அறிவியல் ஆசிரியர்
பெற்றோர்
படத்திலுள்ள சுவைபானத்தின் சுவையை எந்த ஐம்புலன்களை கொண்டு அறிய முடியும்?
மூக்கு
நாக்கு
தோல்
கண்
தன்னை தற்காத்துக் கொள்ள இறந்ததுபோல் பாசாங்கு செய்யும் விலங்கு யாது?
வண்டு
நந்தை
ஆமை
கணவாய்
பின்வருவனவற்றுள் எவை மனிதனின் சுவாச செயற்பாங்கினை உட்படுத்தி உள்ளன?
வயிறு மற்றும் தோல்
மூக்கு மற்றும் நுரையீரல்
நுரையீரல் மற்றும் தோல்
சிறு குடல் மற்றும் சுவாசக்குழாய்
படம், ஒரு வாழிடத்தின் சூழலைக் காட்டுகிறது. விவசாயி அந்த வாழிடத்தில் ஆந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் என்ன நிகழும்?
i) பாம்பு மற்றும் எலிகளின் எண்ணிக்கை குறையும் ii) நெல் அறுவடை குறையும்
iii) வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
iv) ஆந்தைகளுக்கான உணவு மூலம் அதிகரிக்கும்
I மற்றும் II
I மற்றும் III
II மற்றும் IV
III மற்றும் IV
மேற்காணும் கருவியின் பயன் என்ன ?
திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க
பொருள்களைப் பிடித்துக் கொள்ள
வெப்பநிலையை அளக்க
பொருளை வெப்பப்படுத்த
__________ பகலில் நடவடிக்கையைச் செய்ய உதவும் ஒளி மூலமாகும்.
நெருப்பு
சூரியன்
கீழ்காணும் தாவரம் _____________ தூண்டலுக்கு ஏற்ப துலங்குவதைக் காட்டுகிறது.
நீர்
சூரிய ஒளி
புவி ஈர்ப்புச் சக்தி
இந்த விலங்கின் சுவாச உறுப்பு என்ன?
நுரையீரல்
சுவாசத்துளை
ஈரமானத் தோல்
செவுள்
