wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுள் ஆனமுதலில் ஆண்டு 4

Total questions: 16

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

ஆன முதலில் அதிகம் செலவானால்

a)

ஈட்டும் பொருளினை விட அதிகமாக செலவு செய்பவர்கள்

b)

தங்கள் மானத்தை இழப்பார்கள்

c)

அறிவினையும் இழப்பார்கள்

d)

பாவத்திற்கு ஆளாவான்

2.

மானம் அழிந்து

a)

ஈட்டும் பொருளினை விட அதிகமாக செலவு செய்பவர்கள்

b)

கௌரவம் கெட்டு

c)

அறிவை பெற்று

d)

அதிகாரம் பெற்று

3.

மதிகெட்டுப்

a)

மானத்தை இழப்பது

b)

பழிக்கு ஆளாவார்கள்

c)

அறிவிழக்க நேரிடும்

d)

புத்தியைப் பயன்படுத்துவார்கள்

4.

போன திசை எல்லார்க்கும் கள்ளனாய்

a)

அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர்.

b)

அவர்கள் எவ்வழி நடந்தாலும் மரியாதையுடன் நடத்தப்படுவர்.

c)

சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்ப்பர்

d)

நல்லவர்களாக வாழ்வர்

5.

எழ்பிறப்புந் தீயனாய்

a)

ஏழு பிறப்பிலும் நல்லவனாய் வாழ்வான்

b)

புண்ணியம் கிட்டும்

c)

ஏழு பிறப்பிலும் தொடர்ந்து வரும் பாவத்திற்கு ஆளாவான்

d)

பாவம் செய்யாதவன்

6.

நல்லார்க்கும் பொல்லானாம் நாடு

a)

மிகவும் அன்புக் கொண்டவர்

b)

அன்புக் கொண்ட அனைவருக்கும் நல்லவனாக விளங்க நேரிடும்.

c)

பகைமைக் கொண்ட அனைவருக்கும் பொல்லாதவனாக விளங்க நேரிடும்.

d)

அன்புக் கொண்ட அனைவருக்கும் பொல்லாதவனாக விளங்க நேரிடும்.

7.

நல்வழி யாரால் இயற்றப்பட்டது ?

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

c)

ஔவையார்

d)

கம்பர்

8.

செய்யுளில் கள்ளனாய் என்ற சொல்லுக்கு ஏற்ற வேறு ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

குருடனாய்

b)

திருடனாய்

c)

கோபக்காரனாய்

d)

பைத்தியக்காரனாய்

9.

ஆனமுதலில்...... என்ற செய்யுள் விளக்கும் கருத்து என்ன ?

a)

பொய் சொல்லக்கூடாது

b)

ஏமாற்றக் கூடாது.

c)

வரவுக்கு மிஞ்சி செலவு செய்யக்கூடாது.

10.

ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

________________________________ - போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. செய்யுளில் விடுப்பட்ட வரியைத் தேர்ந்தெடுக.

a)

மானம் அழிந்து மதிகெட்டுப்

b)

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

c)

தெய்வத்துள் வைக்கப்படும்

11.

செய்யுளில் மதிகெட்டுப் என்ற சொல்லின் பொருள் என்ன ?

a)

பழிச்சொல்லுக்கு ஆளாவான்

b)

அறிவிழக்க நேரிடும்

c)

பொல்லாதவனாக

d)

ஏழு பிறப்பிலும்

12.

கண்ணன் தன் வரவுக்கு மிஞ்சி செலவு செய்ததால் கௌரவம் கெட்டு அறிவிழந்து காணப்படுகிறார். இச்சூழலுக்கு ஏற்ற செய்யுள் அடியைக் கண்டுபிடிக.

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

சிறுக கட்டிப் பெருக வாழ்

c)

ஆனமுதலில் அதிகச் செலவானால்

d)

மாசில் வீணையும் மாலை மதியமும்

13.

கீழ்க்காணும் செய்யுளை நிரல்படுத்துக.

1.எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்

2.ஆனமுதலில் அதிகச் செலவானால்

3.நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

4.மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை

a)

2,4,1,3

b)

3,1,4,2

c)

1,2,3,4

d)

4,3,2,1

14.

நல்வழி எனும் நூல் எத்தனை பாடல்களைக் கொண்டது ?

a)

14

b)

41

c)

51

d)

1330

15.

ஆனமுதலில் அதிகச் செலவானால்........என்ற செய்யுள் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது ?

a)

திருக்குறள்

b)

ஐம்பெரும்காப்பியங்கள்

c)

பகவத்கீதை

d)

நல்வழி

16.

ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப்- போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்

நல்லார்க்கும் பொல்லனாம் காடு.

செய்யுளில் தவறாக எழுதப்பட்டுள்ள சொல்லைக் கண்டுபிடி.

a)

மானம்

b)

கள்ளனாய்

c)

காடு

d)

அழிந்து