NEW
Font size
WorksheetsMT&IM QNS
Total questions: 20
Worksheet time: 10mins
நடுவர் போட்டியின் விதிமுறைகளைகக் கூறி முடிப்பதற்குள் _______________ மாறன் இடையிடையே கேள்விகளைக் கேட்டது அனைவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது.
அவசரக்குடுக்கையான
ஓட்டைவாயனான
குகைக்குள் சிக்கி பல நாள்கள் உணவின்றி இருந்த ஆடவரை மீட்டபோது அவர் _______________ காணப்பட்டார்.
ஒட்டி உலர்ந்து
வாடி வதங்கி
விமலா தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை _______________ என்று செய்து வந்ததால் மேலாளர் அவளுக்கு எந்த முக்கிய பொறுப்பையும் கொடுக்கவில்லை.
ஏனோ தானோ
கனவோ நனவோ
குடும்பத்தினர் தங்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளை _______________ பேசினாலொழியக் குடும்பப்பிணைப்பு ஏற்படாது.
மனந்திறந்து
தலையிட்டு
நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் நொறுக்குத்தீனிகளை அதிகம் உண்ணாமல் _______________ பழகிக்கொள்ள வேண்டும்.
வாயைக் கட்ட
கழித்துக் கட்ட
தாய் மொழியின் _______________ உணர்ந்து அது தொடர்ந்து வாழும் மொழியாக திகழ்வதற்கு இளைஞர்கள் தம் பங்கை ஆற்ற வேண்டும்.
அருமை பெருமையை
உயர்வு தாழ்வை
பல சவால்களுக்கிடையே தன் படிப்பில் _______________ இருந்த வளவன் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தான்.
கண்ணும் கருத்துமாக
ஆணித்தரமாக
இளமைக்காலத்தில் பணத்தை _______________ ஆடம்பரமாக வாழ்ந்ததால் ராகவன் முதுமைக்காலத்தில் வறுமையில் வாடினார்.
அள்ளியிறைத்து
தட்டிப் பறித்து
_______________ வேலை செய்தும் தான் முதலாளியிடம் நற்பெயரைப் பெற இயலாததை எண்ணி ரேகா வருந்தினாள்.
ஓய்வு ஒழிச்சலின்றி
பம்பரமாய் சுழன்று
நாம் நினைத்த செயல்கள் எல்லாம் _______________ நமக்கு சரியான திட்டமிடலும் அயராத உழைப்பும் தேவை.
கைகூட
கை கொடுக்க)
மாணவர்களை _______________ அவர்களது திறமைகள் வெளிப்பட உதவுவது ஆசிரியர்களின் கடமைகளில் ஒன்றாகும்.
தட்டிக் கொடுத்து
கை கொடுத்து
நன்கு ஆராய்ந்து உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது வீண் சந்தேகத்திற்கு _______________ தவிர்க்க வேண்டும்.
இடங்கொடுப்பதை
செவி சாய்ப்பதை
_______________ தெரியாதவர்களிடம் நாம் நம்மைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது.
ஊரும் பேரும்
அக்கம் பக்கம்
பெற்றோர் வீட்டின் _______________ சரியாக திட்டமிட்டால் குடும்பத் தேவைகளைச் சமாளிக்க இயலும்.
வரவு செலவை
அருமை பெருமையை
வாழ்வில் வெற்றி பெற விரும்பும் ஒருவர் _______________ நேரத்தைச் செலவிடாமல் தம் குறிக்கோளை அடைவதில் கவனம் செலுத்த வேண்டும்.
வெட்டிப் பேச்சில்
கண்மூடித்தனமாக
நாம் ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்னர் அதனால் விளையக்கூடிய _______________ ஆராய வேண்டும்.
நன்மை தீமைகளை
இன்ப துன்பத்தை
தங்களுக்கு நேரத்தோடு சம்பளம் கொடுக்கப்படாததால் கோபம் அடைந்த தொழிலாளர்கள் தங்கள் முதலாளியை _______________.
தட்டிக் கேட்டனர்
கை கழுவினர்
தனக்குக் கொடுக்கப்படும் பணி சவால்மிக்கதாக இருந்தாலும் அதனை _______________ திறம்படச் செய்யும் பாலனைப் பலரும் விரும்பினர்.
தலைமேற்கொண்டு
இனிக்கப் பேசி
நிருபரான விமலா சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களை _______________ எழுதிய விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஒளிவுமறைவின்றி
கண்மூடித்தனமாக
மாறன் தன் மேலதிகாரியிடமிருந்து நற்பெயரைப் பெறுவதற்காக அவர் கூறியதற்கு எல்லாம் _______________ மற்ற ஊழியர்களின் வெறுப்புக்கு ஆளானான்.
ஒத்துப் பாடியதால்
செவிசாய்த்ததால்
