Search Header Logo
Unlocking the Wisdom of Thirukkural

Unlocking the Wisdom of Thirukkural

Assessment

Presentation

Education

1st - 5th Grade

Hard

Created by

Rajendran P

FREE Resource

4 Slides • 0 Questions

1

திருக்குறள்

இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூலில் உள்ள பாடல்கள் ’குறள் வெண்பா’ என்ற பா வகையைச் சார்ந்தது. முதலடியில் நான்கு சொற்களும் இரண்டாம் அடியில் மூன்று சொற்களும் இடம்பெற்றுள்ளது. அறத்துப்பால்,பொருட்பால்,இன்பத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது. 133 அதிகாரங்களும் ஓர் அதிகாரத்திற்குப் பத்துக்குறள்கள் வீதம் 1330 குறட்பாக்களையும் கொண்டுள்ளது.

2

திருக்குறள்-சிறப்புகள்

,இனம்,மதம்,மொழி என்ற வேறுபாடுகளைக் களைந்து எந்நாட்டவருக்கும் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் பாடல்கள் அமைந்துள்ளதால் இந்நூலை ‘உலகப்பொதுமறை’ என்று போற்றுகின்றனர். மேலும் இந்நூலிற்கு பொய்யாமொழி,முப்பால்,உத்தரவேதம்,தெய்வநூல்,வாயுறை வாழ்த்து எனப்பல சிறப்புப்பெயர்களையும் பெற்றுள்ளது. திருவள்ளுவமாலை என்ற நூலைப்படிப்பதன்மூலம் திருக்குறளின் சிறப்புகளை மேலும் நாம் அறிந்துகொள்ளலாம்.

media

3

ஆசிரியர் குறிப்பு

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். பொய்யில்புலவர்,தெய்வப்புலவர்,மாதானுபங்கி,செந்நாப்போதார்,நான்முகனார்,பெருநாவலர் என்ற பல சிறப்புபெயர்கள் இவருக்கு உண்டு. இயேசு கிறிஸ்துவுக்கு முப்பத்தொரு ஆண்டுகள் முன்னதாகத்தோன்றியவர் என்று பொதுவாகக் கூறப்படுகிறது.

media

4

Unlocking Thirukkural's Wisdom

  • Thirukkural: A classic Tamil text
  • Introduction: Understanding its significance
  • Structure: 1330 couplets in 133 chapters
  • Themes: Ethics, love, governance, and more
  • Timeless Wisdom: Applicable to modern life

திருக்குறள்

இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூலில் உள்ள பாடல்கள் ’குறள் வெண்பா’ என்ற பா வகையைச் சார்ந்தது. முதலடியில் நான்கு சொற்களும் இரண்டாம் அடியில் மூன்று சொற்களும் இடம்பெற்றுள்ளது. அறத்துப்பால்,பொருட்பால்,இன்பத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது. 133 அதிகாரங்களும் ஓர் அதிகாரத்திற்குப் பத்துக்குறள்கள் வீதம் 1330 குறட்பாக்களையும் கொண்டுள்ளது.

Show answer

Auto Play

Slide 1 / 4

SLIDE