wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலிவேறுபாடுகள் (P6)2

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

என் பெரியப்பா வெளிநாட்டில் வாழ்கிறார். அவர் அங்கே ஒரு விஞ்ஞானியாக __________ புரிகிறார்.

a)

பனி

b)

பணி

2.

திரு. கதிரேசன் ஓர் அழகான ஓவியத்தை வாங்கினார். அவர் அதை மாட்டுவதற்குச் சுவரில் ஓர் _____________ அடித்தார்.

a)

ஆனி

b)

ஆணி

3.

அந்தக் காட்டுக்கு யாரோ தீவைத்து விட்டு ஓடிவிட்டனர். அதனால் காடு தீப்பற்றி ________________.

a)

எரிந்தது

b)

எறிந்தது

4.

ரவியும் பாலனும் கடைக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் விளையாட அழகான ________________ வாங்கினர்.

a)

கோலிகளை

b)

கோழிகளை

5.

அத்தை இருண்ட அறைக்குள் போனார். மறு __________ அவர் தடுக்கிக் கீழே வழிந்தார்

a)

கனம்

b)

கணம்

6.

இந்தியாவின் ஒரு பகுதியில் பழங்காலத்துக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் __________ எழுத்துகள் தமிழ் எழுத்துகள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

a)

பொரிக்கப்பட்ட

b)

பொறிக்கப்பட்ட

7.

நீண்ட தூரம் ஓடிய ரகுவின் முகத்தில் வியர்வை ____________ தொடங்கியது. அதை அவன் தனது துண்டால் துடைத்தான்.

a)

வலிய

b)

வழிய

8.

சந்தியா தன் பணப்பையை தேடிக்கொண்டிருந்தாள். அது அறையின் _________________ கிடப்பதை அவள் தாயார் பார்த்தார்.

a)

மூலையில்

b)

மூளையில்

9.

மதிய வேளையில் வெகு நேரம் நடந்ததால் முதியவருக்குத் தாகம் எடுத்தது. அவர் உடனே நீர் அருந்தித் தன் தாகத்தை ____________ கொண்டார்.

a)

தனித்து

b)

தணித்து

10.

என் அண்ணனின் திருமணம் _________________ மாதத்தில் நடைபெறவுள்ளது. நாங்கள் அனைவரும் மிக ஆவலோடு அந்நாளை எதிர்பார்த்து இருக்கிறோம்.

a)

ஆனி

b)

ஆணி

11.

இன்று காலையிலிருந்து வானம் _____________ காணப்பட்டது. மதிய வேளையில், இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது.

a)

கருத்து

b)

கறுத்து

12.

மருத்துவர் பால் அருந்துவதன் முக்கியதுவத்தை எடுத்துரைத்தார். ஒரு குழந்தையின் ___________ வளர்ச்சிக்குப் பால் அருந்துவது மிக முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.

a)

மூலை

b)

மூளை

13.

“விமலன்! நீ முதலில் இந்த மிளகாயை ______________. பிறகு நீ அந்தத் தக்காளியை வெட்டலாம்,” என அம்மா சொன்னார்

a)

அரை

b)

அறை

14.

என் பெரியப்பா ஒரு ___________ பேராசிரியராகப் பணி புரிந்து வருகிறார்.

a)

கலகத்தில்

b)

கழகத்தில்

15.

தீபாவளியன்று கோயிலில் __________ வழிபாடு

நடந்தது. பின் ஏழை எளியவர்க்கு உணவு

பரிமாறப்பட்டது.

a)

இரை

b)

இறை

16.

சோமாலியா நாட்டில் பலரும் __________ உடையின்றி திண்டாடுகின்றனர். இதனால் பல அண்டை நாடுகள் அந்நாட்டு மக்களுக்கு உதவி வருகின்றன.

a)

ஊன்

b)

ஊண்

17.

தேமல் ஒரு ______________ நோய். நாம் தினமும் நன்றாகக் குளித்து நம் உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

a)

தோல்

b)

தோள்

18.

அத்தை சமைத்த மீன் கறி சுவையாக இல்லை. அவர் அதில் ___________ சேர்க்காததே காரணமாகும்.

a)

புலி

b)

புளி

19.

பள்ளி இடைவேளைக்குப் பிறகு எல்லா மாணவர்களும் மண்படத்தில் கூடினர். _______________ மாணவர்களும் அமைதியாக இருந்த பின்னரே, ஆசிரியர்கள் அவர்களை வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றனர்.

a)

அனைத்து

b)

அணைத்து

20.

அக்காலத்தில் இந்தியாவை மூவேந்தர்கள் ஆண்டு வந்தனர். அவர்களுக்குச் சிற்றரசர்கள் _______________ செலுத்தி வந்தனர்.

a)

திரை

b)

திறை