wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை படிவம் 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உலகப் போக்கு எப்படி இருக்கின்றதோ, அந்த உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அதைக் கடைப்பிடித்து அவ்வாறு நடப்பதே அறிவாகும். இப்பொருளின் திருக்குறள் யாது?

a)

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவது அறிவு.

b)

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்.

c)

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்தோ சால்பு.

2.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு.

a)

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் செல்வமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக் கொண்டு போய்சி சேரும்.

b)

தமக்குத் துன்பம் செய்தவருக்கும் இன்பமே செய்யாவிடின் சான்றாண்மை என்ற பெருங் குணம் இருந்தும் பயனில்லை.

c)

ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல நட்பு; நட்பு என்பது ஒருவர் குற்றம் செய்யும் போது அதை எடுத்துக்காட்டி, இடித்துக்கூறி தீமையை விளக்குவதேயாகும்.

3.

இறைவன் என்பவர் ஒருவர் இல்லையென்றால் இப்பூவியில் யாரேனும் இருக்க வாய்ப்புல்லை. இக்கூற்றுக்குச் சரியான பழமொழியைத் தெரிவு செய்க.

a)

இறைவனின்றி எவரும் இல்லை.

b)

அவனன்றி ஓரணுவும் அசையாது

c)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

4.

நேற்று கடைக்குச் சென்ற மீனா தன் பழக்கூடையை ஒருவரிடம் கொடுத்துவிட்டு கழிவறைக்குச் சென்று வந்தாள். அவ்வேளையில் அந்நபர் பழக்கூடையோடு காணமல் போனால். அவரைப் பார்ப்பதற்கு மிகவும் நல்லவர் போல் இருப்பதைக் கண்டு மீனா ஏமாந்து போனாள். இக்கூற்றுக்குச் சரியான பழமொழி யாது?

a)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

b)

பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெறும்

c)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

5.

மனக்கவலை பலக் குறைவு எனும் பழமொழியின் பொருள் யாது?

a)

கவலைமிக்க மனத்தை உடையவரின் உடல் சோர்வடைவதால் ஒரு செயலை முனைப்புடன் செய்ய இயலாது. ஆகவே, மனக்கவலை உடையவர் வலுவிழந்தவராகவே கருதப்படுவர்.

b)

வெளித்தோற்றத்தைக் கண்டு ஒன்றைச் சிறந்ததென எண்ணி ஏமாந்துவிடக்கூடாது.

c)

கவலையை எண்ணிக்கொண்டு இருப்பார்கள்.

6.

கருணைக் கடல் என்றால் என்ன?

a)

ஆசை வார்த்தை கூறுவர்.

b)

இரக்கம் மிகுந்தவர் / மிகவும் பரிவுமிக்கவர்

c)

ஒன்றைப் பற்றி அறிந்து நடந்து கொள்வர்.

7.

மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

விழலுக்கு இறைத்தல்

b)

விழலுக்கு இறைத்த நீர் போல

c)

ஊமை கண்ட கனா

8.

நுனிப்பில் மேய்ந்தாற் போல எனும் உவமைத்தொடரின் பொருள் யாது?

a)

ஆதரவு இல்லாத நிலை

b)

செயல் இழந்து நிற்கும் நிலை

c)

ஒன்றைப் பற்றி மேலோட்டமாக மட்டும் தெரிந்து கொள்ளுதல்.

9.

குளிர்நிலா குளிரில் _____________ வென நடுங்கினாள்.

a)

கட கட

b)

வெட வெட

c)

நச நச

10.

சிலுசிலு என்றால் என்ன?

a)

குளிரில் நடுங்குதல்

b)

மென்குளிர் காற்று

c)

ஈரத் தன்மை கொண்டிருத்தல்