Worksheetsகேள்விகளுக்கு விடையளிக.
Total questions: 5
Worksheet time: 7mins
'ஞாலம்' எனும் சொல்லின் பொருள் என்ன?
பெரியது
உலகம்
நன்றி
நேரம்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
____________________________________
இகழ்வாரை நோவது எவன்
ஞாலத்தின் மாணப் பெரிது
கீழ்க்காணும் திருக்குறளின் பொருள் என்ன?
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்...
ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாகக் கருதப்படும்.
நன்றி மறவாமல் செயல்படக் கூடாது.
கீழ்க்காண்பவற்றுள் இன்றைய பாடவேளைக்கான திருக்குறளை உணர்த்தும் வாக்கியம் யாது ?
திரு முகிலன் தனது நண்பன் பணக் கஞ்டத்தில் இருக்கின்றார் எனத் தெரிந்தும் அவர் உதவிக்கரம் நீட்டவில்லை.
செழியன் தன் அட்டை வீட்டாருக்கு உடல் நலம் சரியில்லாத போது உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தார்.
கோரணி நச்சினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குச் செல்வி உணவுப் பொருட்களைத் தானமாக வழங்கினார்.
கீழ்க்காணும் சூழல் இன்றைய திருக்குறளுக்குப் பொருத்தமானதா?
திரு.நகுலனின் மகன் கல்வியில் சிறந்து விளங்கினார். எனவே, திரு. நகுலன் தன் மகனை வெளிநாட்டில் படிக்கவைக்க ஆசைப்பட்டார். ஆனால், அவரிடையே திடீரென்று பணத்தட்டுபாடு ஏற்பட்டது. அவரின் தொழிலில் அதிக நஷ்டம் ஏற்பட்டது. இதனால், அவர் தன் மகனின் எதிர்காலத்தை எண்ணி வருந்தினார். ஆனால், எதிர்பார்க்காத வகையில் அவருடைய தம்பி திரு.குணா அவர்களுக்குப் பண உதவி செய்தார். திரு. குணாவின் உதவியால் இன்று திரு.நகுலனின் மகன் சிறந்த மருத்துவரானார்.
ஆம்
இல்லை
