wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை

Total questions: 18

Worksheet time: 9mins

Name
Class
Date
1.
நாம் __________ கவனமாகக் கடக்க வேண்டும்.
a)
சாலைக்கு
b)
சாலையால்
c)
சாலையுடன்
d)
சாலையை
2.
குமுதா தன் __________________ நூலகத்திற்குச் சென்றாள்.
a)
அக்காவிடம்
b)
அக்காவுடன்
c)
அக்காவுக்கு
d)
அக்காவை
3.
அம்மா_______________________ ஓர் அழகான படத்தை மாட்டினார்.
a)
சுவருக்கு
b)
சுவரில்
c)
சுவரின்
d)
சுவரை
4.
வேகமாக சென்ற____________ஓர் அரிசி மூட்டை நழுவி கீழே விழுந்தது.
a)
வண்டியில்
b)
வண்டிக்கு
c)
வண்டியை
d)
வண்டியிலிருந்து
5.
ராமு அவனுடைய பள்ளிப்பையை ___________ வைத்தான்.
a)
மேசையில்
b)
மேசையின்
c)
மேசையால்
d)
மேசையோடு
6.
பூனை ___________ வழியாக வீட்டிற்குள் குதித்து அங்கு இருந்த மீனைத் திருடித் தின்றது.
a)
சன்னலை
b)
சன்னலின்
c)
சன்னலுக்கு
d)
சன்னலோடு
7.
ராணியும் பாலுவும் அவர்களுடைய ___________ கோவிலுக்குச் சென்றனர்.
a)
தாத்தாவை
b)
தாத்தாவின்
c)
தாத்தாவுக்கு
d)
தாத்தாவுடன்
8.
யானை ஒன்று தண்ணீர் குடிக்க _____________ சென்றது.
a)
ஆற்றங்கரையில்
b)
ஆற்றங்கரைக்கு
c)
ஆற்றங்கரையால்
d)
ஆற்றங்கரையை
9.
நான் பறித்த _______________ கொண்டு அழகான மாலை ஒன்றைக் கட்டினேன்.
a)
மலர்களோடு
b)
மலர்களை
c)
மலர்களால்
d)
மலர்களுடைய
10.
தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவியை ஆசிரியர் ______________ பாராட்டினார்.
a)
பெருமையுடன்
b)
பெருமையுடைய
c)
பெருமையின்
d)
பெருமையை
11.

கவிதா சாப்பிடாமல் இருந்ததால் _________ மயக்கம் வந்தது.

a)

அவளிடம்

b)

அவளுடைய

c)

அவளுக்கு

d)

அவளின்

12.

அக்காலத்தில் புலவர்கள் பல பாடல்களைப் பாடி ____________ பல பரிசுகள் பெற்றார்கள்.

a)

மன்னர்களுக்கு

b)

மன்னர்களில்

c)

மன்னர்களுடைய

d)

மன்னர்களிடமிருந்து

13.

மாறன் தன் ____________ பூங்காவிற்குச் சென்று மிதிவண்டி ஓட்டினான்.

a)

தங்கையுடன்

b)

தங்கையை

c)

தங்கையின்

d)

தங்கையிடம்

14.

____________ உறுதி வேண்டும் என்று பாரதியார் கூறியிருக்கிறார்.

a)

மனதோடு

b)

மனதுக்கு

c)

மனதில்

d)

மனதிலிருந்து

15.

சிதம்பரனாரின் _____________ வியாபாரத்தில் நட்டத்தை எதிர்நோக்கிய ஆங்கிலேயர்கள் அவர் மீது கடுங்கோபம் கொண்டனர்.

a)

செயலை

b)

செயலால்

c)

செயலின்

d)

செயலுக்கு

16.

சாலையைக் கடந்ததும் முதியவர் ________________ இருப்பதாகக் கூறினார்.

a)

பசிக்கு

b)

பசியால்

c)

பசியை

d)

பசியுடன்

17.

______________ அமைதி குறைந்து, துன்பம் ஏற்படுவதற்குக் காரணம் ஆசையே.

a)

மனிதர்களுடன்

b)

மனிதர்களை

c)

மனிதர்களின்

d)

மனிதர்களுக்கு

18.

முதலை விழுங்கும் கற்கள் அதன் வயிற்றினுள் இருக்கும் இரையை மாவு அரைக்கும் மின் ____________ போன்று அரைக்கும்.

a)

அரவையின்

b)

அரவையை

c)

அரவையுடன்

d)

அரவைக்கு