wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10th Tamil Unit 5 Online Test

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்து என்னும் சின்னமனூர் செப்பேடு குறிப்பு உணர்த்தும் செய்தி

a)

சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

b)

காப்பிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

c)

பக்தி இலக்கிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

d)

சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

2.

ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர்

a)

மு.கு.ஜகந்நாத ராஜா

b)

மணவை முஸ்தபா

c)

அ.முத்துலிங்கம்

d)

அப்துல் ரகுமான்

3.

சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை புலப்படுத்தும் சான்று

a)

உத்திரமேரூர் கல்வெட்டு

b)

உறையூர் செப்பேட்டு குறிப்பு

c)

மண்டகப்பட்டுக் கல்வெட்டு

d)

சின்னமனூர் செப்பேட்டுக்குறிப்பு

4.

அருந்துணை என்பதைப் பிரித்தால்

a)

அருமை+ துணை

b)

அரு+ துணை

c)

அருமை + இணை

d)

அரு+ இணை

5.

" அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை"- என்ற இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

a)

தமிழ்

b)

அறிவியல்

c)

கல்வி

d)

இலக்கியம்

6.

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி -இவ்வடியில் பயின்று வரும் தொடை

a)

எதுகை

b)

மோனை

c)

இயைபு

d)

முரண்

7.

இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்_______

இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்_______

a)

அமைச்சர் ,மன்னன்

b)

அமைச்சர், இறைவன்

c)

இறைவன், மன்னன்

d)

மன்னன், இறைவன்

8.

கபிலரின் நண்பர் யார்?

a)

பரஞ்சோதி முனிவர்

b)

இடைக்காடனார்

c)

குசேலன் பாண்டியன்

d)

ஒட்டக்கூத்தர்

9.

திருவிளையாடற் புராணத்தின் ஆசிரியர் யார்?

a)

சமண முனிவர்

b)

அகத்தியர்

c)

பரஞ்சோதி முனிவர்

d)

இடைக்காடனார்

10.

திருவிளையாடற் புராணம் படலங்களின் எண்ணிக்கை

a)

64

b)

96

c)

30

d)

18

11.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை யாருக்கு கவரி வீசினான்?

a)

பரஞ்சோதி

b)

கபிலர்

c)

இடைக்காடனார்

d)

மோசிகீரனார்

12.

சொல்லின் வடிவாக இறைவனின் இடப்புறம் வீற்றிருப்பவள்

a)

பார்வதி

b)

திருமகள்

c)

கலைமகள்

d)

தெய்வயானை

13.

தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது

a)

அறிவினா

b)

அறியாவினா

c)

ஐயவினா

d)

ஏவல்வினா

14.

உடன் பட்டுக் கூறும் விடை

a)

சுட்டு விடை

b)

மறை விடை

c)

நேர் விடை

d)

ஏவல் விடை

15.

சதம் என்றால் __ என்று பொருள்

a)

பத்து

b)

நூறு

c)

ஆயிரம்

d)

இலட்சம்

16.

செய்குதம்பி பாவலரின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபமும் பள்ளியும் அமைந்துள்ள இடம்

a)

கன்னியாகுமரி

b)

இடலாக்குடி

c)

சென்னை

d)

மயிலாப்பூர்

17.

சதாவதானி என்று பாராட்டப்பட்டவர்

a)

உமறுப்புலவர்

b)

பனு அகமது மரைக்காயர்

c)

செய்குதம்பி பாவலர்

d)

படிக்காசு புலவர்

18.

கற்றவர் வழி அரசு செல்லும் என்று கூறுவது

a)

காப்பிய இலக்கியம்

b)

பக்தி இலக்கியம்

c)

சங்க இலக்கியம்

d)

நீதி இலக்கியம்

19.

ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் கூறியவர் யார்?

a)

ஒளவை

b)

கபிலர்

c)

திருவள்ளுவர்

d)

செய்குதம்பி பாவலர்

20.

வடம்( கயிறு), ஒட்டகம் என்ற இருபொருளுக்குரிய சொல்

a)

Camel

b)

Cow

c)

Horse

d)

Rope