Font size
Worksheetsநீதிநெறி விளக்கம்
Total questions: 10
Worksheet time: 9mins
நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் யார்?
குமரகுருபர சுவாமிகள்
பாரதியார்
உலகநாதப் பண்டிதர்
ஔவையார்
மெய்வருத்தம் என்பதன் பொருள் யாது?
தூக்கம்
பசி
உடல் நோய்
காலத்தின் அருமை
ஒருசெயலை முடித்திடும் மனவுறுதி கொண்டவர்கள் எதனைப் பொருட்படுத்த மாட்டார்கள்?
பசி
தூக்கம்
உடல்நோய்
மனம்
கீழ்க்காணும் வரியைப் பூர்த்தி செய்க.
எவ்வெவர் ________________________________-__________
பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்
'கண்துஞ்சார்' எனும் சீரின் பொருள் யாது?
உண்ண மாட்டார்
உறங்க மாட்டார்
உழைக்க மாட்டார்
மனந்தளர மாட்டார்
கீழ்க்காணும் வரியின் பொருள் யாது?
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
வெற்றி பெற விரும்புபவர் கால நேரத்தைப் பொருட்படுத்த மாட்டார்.
வெற்றி பெற விரும்புபவர் பிறர் தனக்குச் செய்யும் தீங்கைப் பொருட்படுத்த மாட்டார்.
வெற்றி பெற விரும்புபவர் உடல் நோயையும் பசியையும் தூக்கத்தையும் பொருட்படுத்த மாட்டார்.
வெற்றி பெற விரும்புபவர் தனது செயலிலே கருத்தூன்றி இருப்பார்.
கீழ்க்காணும் வரியின் பொருள் யாது?
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
வெற்றி பெற விரும்புபவர் கால நேரத்தைப் பொருட்படுத்த மாட்டார்.
வெற்றி பெற விரும்புபவர் பிறர் தனக்குச் செய்யும் தீங்கைப் பொருட்படுத்த மாட்டார்.
வெற்றி பெற விரும்புபவர் உடல் நோயையும் பசியையும் தூக்கத்தையும் பொருட்படுத்த மாட்டார்.
வெற்றி பெற விரும்புபவர் தனது செயலிலே கருத்தூன்றி இருப்பார்.
கீழ்க்காணும் வரியின் பொருள் யாது?
செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
வெற்றி பெற விரும்புபவர் கால நேரத்தைப் பொருட்படுத்த மாட்டார்; பிறர் தனக்குச் செய்யும் தீங்கைப் பொருட்படுத்த மாட்டார்.
வெற்றி பெற விரும்புபவர் கருமத்தைத் தவிர வேறு எதையும் கருதார்.
வெற்றி பெற விரும்புபவர் உடல் நோயையும் பசியையும் தூக்கத்தையும் பொருட்படுத்த மாட்டார்.
வெற்றி பெற விரும்புபவர் தனது செயலிலே கருத்தூன்றி இருப்பார்.
கீழ்க்காணும் வரியின் பொருள் யாது?
கருமமே கண்ணாயி னார்
வெற்றி பெற விரும்புபவர் கால நேரத்தைப் பொருட்படுத்த மாட்டார்.
வெற்றி பெற விரும்புபவர் பிறர் தனக்குச் செய்யும் தீங்கைப் பொருட்படுத்த மாட்டார்
வெற்றி பெற விரும்புபவர் உடல் நோயையும் பசியையும் தூக்கத்தையும் பொருட்படுத்த மாட்டார்.
வெற்றி பெற விரும்புபவர் தனது செயலிலே கருத்தூன்றி இருப்பார்.
இந்த நீதிநெறி விளக்கத்தின் சாரம் யாது?
கடுமையாக முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.
நம்மால் இயன்ற வரையில் மட்டுமே முயற்சி செய்து வெற்றியை அடைய வேண்டும்.
ஒரு செயலைச் செய்து முடிக்கும் வரையில் அதில் மட்டுமே கருத்தூன்றி இருக்க வேண்டும்.
