NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 6 வகுப்புசார் மதிப்பீடு
Total questions: 25
Worksheet time: 13mins
கவிதா எல்லாப் பாடங்களையும் _______________ படிப்பாள்.
முழு மூச்சுடன்
ஓட்டை வாயுடன்
அங்கும் இங்குமாய்
ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக
நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்
சிக்கனம் சீரளிக்கும்
இளங்கன்று பயம் அறியாது
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
முயற்சி திருவினையாக்கும்
கொன்றை வேந்தனை நிறைவு செய்க
சூதும் வாதும் _____________________________
மந்திரம் இல்லை
வார்த்தை அமிர்தம்
திரவியம் தேடு
வேதனை செய்யும்
ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
ஐயோ! கால் வலிக்கிறதே!
மேற்காணும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
கட்டளை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
சரியான எச்சத்தைத் தேர்ந்தெடுக
உள்நாட்டு படைப்பாளர்கள் __________________சிறுகதைகளை நாம் முக்கியத்துவம் கொடுத்து வாசிக்க வேண்டும்.
எழுந்த
எழுதிய
எழுதும்
எழுத்து
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைச்சொல்லைத் தெரிவு செய்க.
பாகுபலியின் படையினர் எதிரிகளின் கோட்டைக்குள் ______________________.
பறந்தனர்
நுழைந்தனர்
பாய்ந்தனர்
வந்தனர்
இசைக் கச்சேரியில் மங்கை பாடிய பாடல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.
ஏற்ற வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு
ஐந்தாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
ஏழைக் குடும்பம் பிறந்தாலும் இளமாறன் முயற்சி படித்து நாடறிந்த பல் மருத்துவராகத் திகழ்கிறான்.
கு , ஓடு
இல் , உடன்
ஐ , ஓடு
இல் , கு
பள்ளிக்கு அதிகாரி வருகிறார் என்பதை அறிந்ததும், மாணவர்கள் ___________ என வகுப்பறையைச் சுத்தம் செய்தனர்.
சலசல
மளமள
தகதக
மடமட
திருக்குறளின் விடுபட்ட பகுதியை நிறைவு செய்க.
_____________________________________________
எண்ணுவம் என்பது இழுக்கு
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது. இக்கருத்து எந்த செய்யுளில் இடம் பெற்றுள்ளது
கொன்றை வேந்தன்
ஆத்திசூடி
புதிய ஆத்திசூடி
வெற்றிவேற்கை
சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
சிறுவயதில் தன் குடும்பத்தை பழிவாங்கிய அந்தப் பயங்கர சாலை விபத்து, சுமதியின் மனதில்_________________ பதிந்து விட்டது.
இலைமறை காய் போல
சிலை மேல் எழுத்து போல
அனலில் இட்ட மெழுகு போல
காட்டுத் தீ போல
சரியான இடைச்சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.
அமுதன் எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளராக வேண்டுமென்பதில் மனவுறுதியுடன் இருந்தான். ............................., பள்ளியில் நடைபெறும் அனைத்துப் பேச்சுப் போட்டியிலும் கலந்து கொண்டு அனுபவத்தை ஈட்டிக் கொண்டான்.
எனினும்
ஆகவே
இருந்தாலும்
இருப்பினும்
கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.
ஐயோ... நீதி தவறிவிட்டேனே.... பொற்கொல்லன் பேச்சைக் கேட்டுக் கோவலனுக்கு அநீதி இழைத்துவிட்டேன்.
! !
! ;
: ;
! .
நான் எப்படியாவது பல்கலைக்கழகத்தில் என் பட்டப் படிப்பைத் தொடர்வேன்.
முழு மூச்சு
முயல் கொம்பு
கண்ணும் கருத்தும்
கங்கணம் கட்டுதல்
கீழ்க்காண்பனவற்றுள் எஃது இணைமொழி அல்ல?
கண்ணும் கருத்தும்
கரடு முரடு
சுற்றும் முற்றும்
தான தர்மம்
கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
குறையான சொற்கள்
தீமை பயக்கும் சொற்கள்
நன்மை பயக்கும் சொற்கள்
இனிமை பயக்கும் சொற்கள்
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்.
கோடிட்ட சொல்லின் பொருள் :
துன்பம்
இன்பம்
சரியான பொருளைத் தெரிவு செய்.
"அறஞ்செய விரும்பு"
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
தருமம் செய்வதைத் தவிர்த்து விடுதல் விரும்பத்தக்க ஒன்று.
அறம் செய்வது நாம் விரும்பக்கூடாத செயல்.
அந்த + கடை
அந்த கடை
அந்தக்கடை
அந்தக் கடை
அந்தகடை
எங்கு + சென்றாய்?
எங்குச் சென்றாய்?
எங்குச்சென்றாய்?
எங்கு சென்றாய்?
எங்குசென்றாய்?
சரியான சொல்லைத் தேர்ந்தெடு.
சின்கம்
பன்டம்
தங்கம்
மஞ்ஞள்
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
அம்மா அப்பா சொன்னதைக் கேட்டு மளமளவென சிரித்தார்.
பாட்டி கதவை கலகலவென தட்டினார்.
புத்தகங்கள் தகதகவென சரிந்து விழுந்தன.
ஆற்றில் நீர் சலசலவென ஓடியது.
இது என்ன?
இரும்பு ஆணி
இருப்பு ஆணி
இறும்பு ஆணி
இறுப்பு ஆணி
