NEW
Font size
S
M
L
XL
WorksheetsSJKTJK TAMIL
Total questions: 30
Worksheet time: 2hrs 16mins
Name
Class
Date
1.
திருக்குறள் மனனப் போட்டியில் வெற்றி பெற ராமு __________.
a)
தோள் கொடுத்தான்
b)
கரைத்துக் குடித்தான்
c)
தாளம் போட்டான்
d)
கங்கணம் கட்டினான்
2.
எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுபவருக்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி
a)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
b)
நத்தை வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
c)
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
d)
பதறாத காரியம் சிதறாது
3.
சபைக் கூடலின் போது பேச்சாளர் சுத்தத்தைப் பற்றி __________ உரை, வருகையாளரின் கைத்தட்டலைப் பெற்றது.
a)
ஆற்றி
b)
ஆற்றும்
c)
ஆற்றிய
d)
ஆற்ற
4.
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
தாத்தா தோட்டத்தில் இருந்து இரண்டு வாழைத்தார் வெட்டி வந்தார்.
b)
உன் அண்ணன் இரு மொழிகளில் அறிவு பெற்றவன்.
c)
என் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.
d)
நம் நாட்டில் பலவகை இனம் வாழ்கிறது.
5.
அஃறிணையைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.
a)
புல், முரளி, நீர
b)
பறவை, கல், யானை
c)
செயலாளர், பாடகர், நடிகர்கள்
d)
இலை, பழம், திருவள்ளுவர்
6.
மாணவர்களின் படைப்பில் காணப்பட்ட __________ களை ஆசிரியர் சுட்டிக் காட்டினார்.
a)
அருமை பெருமை
b)
குறை நிறை
c)
கல்வி கேள்வி
d)
நன்மை தீமை
7.
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
நாங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறோம்.
b)
என் உடல் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்.
c)
நீங்கள் பாடங்களைத் தினமும் மீள்பார்வை செய்ய வேண்டும்.
d)
உமா நாட்டியப் பள்ளியில் சேர்ந்தாள்.
8.
மேடையில் பேசிக் கொண்டிருந்த தலைமையாசிரியர் திடீரென __________ விழுந்தார்.
a)
மயங்க
b)
மயங்கும்
c)
மயங்கிய
d)
மயங்கி
9.
ஆதாயத்திற்காக உருவான நட்பு ஆபத்தில் முடிகிறது. __________, உணர்வுப் பூர்வமாக உருவான நட்பு கடைசி வரை நீடிக்கிறது.
a)
ஆகையால்
b)
ஆனால்
c)
ஏனெனில்
d)
அல்லது
10.
பெற்றோரின் __________ யை உணராத வனஜா பிற்காலத்தில் வாழ்க்கையில் மிகவும் துன்பப்பட்டாள்.
a)
குறை நிறை
b)
எலும்பும் தோலும்
c)
ஆடல் பாடல்
d)
அருமை பெருமை
11.
சிறுகச் சிறுகச் சேமித்துப் பெருமைபட வாழ வேண்டும்.
a)
சிறு துளி பெரு வெள்ளம்
b)
சிறுகக் கட்டிப் பெருக வாழ்
c)
சிக்கனம் சீரளிக்கும்
d)
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
12.
கண், காது, மூக்கு, வாய், மெய் முதலான ஐம்புலன்களையும் நல்ல நெறியில் செலுத்தும் ஆற்றலைப் பெற்றிடு.
a)
ஓய்தல் ஒழி
b)
ஔடதம் குறை
c)
உடலினை உறுதி செய்
d)
ஐம்பொறி ஆட்சிக்கொள்
13.
சிவா சோதனைக்குப் படிக்காமல் __________ அவனால் சிறந்த புள்ளிகளைப் பெற முடியவில்லை.
a)
காது குத்தியதால்
b)
முட்டு
க்கட்டையானதால்
க்கட்டையானதால்
c)
தட்டிக் கழித்ததால்
d)
மனப்பால் குடித்ததால்
14.
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.
a)
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஆர் எனின்
நற்றாள் தொழாஆர் எனின்
b)
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
c)
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
இழுக்கா இயன்றது அறம்
d)
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
தீயினும் அஞ்சப் படும்
15.
காலதாமதமாக வீட்டுக்கு வந்த மகனைப் பார்த்துத் தந்தை __________ என்று முகத்தை வைத்துக் கொண்டார்.
a)
கடுகடு
b)
நறநற
c)
சிடுசிடு
d)
கலகல
16.
இந்தியர்கள் __________ வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். உடைகளுக்கு ஏற்ற ஆபரணங்களையே அணிகின்றனர். விழாக்காலங்களில் ஆடைகளுக்கும் நகைகளுக்கும் செலவு செய்வதில் பணத்தை __________.
a)
ஆடையும் ஆபரணமும், வாரி இறைக்கின்றனர்
b)
ஆடை அணிகலன், வாரி இறைக்கின்றனர்
c)
ஆடை அணிகலன், கரைத்துக் குடிக்கின்றனர்
d)
ஆடையும் ஆபரணமும், கரைத்துக் குடிக்கின்றனர்
17.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
a)
கப்பல்
b)
செல்வம்
c)
குடிநீர்
d)
வாசனைப் பொருள்
18.
கிரந்த எழுத்துகள் யாவை
a)
ஸர்ப்பம்
b)
பலர்
c)
புஷ்பம்
d)
காஜா
19.
ஏழ்மை நிலையில் குடும்பச் சூழலிலும் அயராது கல்வி கற்று யு.பி.எஸ்.ஆர். தேர்வில் 7 ஏக்கள் பெற்றான்.
a)
சிலை மேல் எழுத்து போல
b)
சூரியனைக் கண்ட பனி போல
c)
இலைமறை காய் போல
d)
சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல
20.
உயிர் எழுத்துகள் மொத்தம் ___________
a)
10
b)
11
c)
12
d)
14
21.
உயிர் நெடில் எழுத்துகள் __________
a)
7
b)
5
c)
6
d)
12
22.
வியாபாரத்தில் கடும் நஷ்டத்தை எதிநோக்கிய அலி மிகவும் வறுமையில் வாடினான். தக்கச் சமயத்தில் சீலன் அவனுக்குத் தன்னால் முடிந்தவரை __________.
a)
கங்கணம் கட்டினான்
b)
ஒரு கை பார்த்தான்
c)
தோள் கொடுத்தான்
d)
உச்சிக் குளிர்ந்தான்
23.
மெய் எழுத்துகள் __________ வகைப்படும்.
a)
1
b)
2
c)
3
d)
4
24.
ஆய்த எழுத்து ...........
a)
எஃது
b)
அது
c)
ஓர்
d)
இது
25.
சேய்மைச் சுட்டு சொற்கள்....
a)
இங்கு
b)
அங்கு
c)
அவன்
d)
உங்கு
26.
வினா எழுத்துகள் 5. அவை
a)
எ, ஏ, யா, ஆ, ஓ
b)
ஏ,யா, ஆ, அ, இ
c)
ஓ, ஏ, யா, ஈ, ஒ
d)
ஓ, ஒ,எ, ஏ, யா
27.
திணை என்பது ------------
a)
அப்பா
b)
வகுப்பு
c)
உயர்திணை
d)
அஃறிணை
28.
பால் என்பது பகுப்பு அல்லது பிரிவு எனப்படும்.
a)
தவறு
b)
சரி
c)
ஆமாம் , இல்லை
d)
தெரியாது
29.
பறவை வானத்தில் பறந்தது.
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
30.
சர்வ + அதிகாரி
a)
சர்வாதிகாரி
b)
சர்வதிகாரி
c)
சர்வஅதிகாரி
d)
சர்வகாரி
Reset
