wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 20

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை? அவை யாவை?

a)

3 (எ,ஏ,யா)

b)

5 (எ, ஏ, யா, ஆ, ஓ)

c)

5 (அ, ஏ, எ, ஓ, ஆ)

2.

வினா எழுத்து எத்தனை வகைப்படும்? அவை யாவை?

a)

1 (அகவை வினா)

b)

2 (அகவை வினா, புறவை வினா)

c)

2 (அகவினா, புறவினா)

3.

இயற்சொல்லைத் தேர்வு செய்க.

a)

அலமாரி

b)

சாவி

c)

கல்

4.

சேர்த்தெழுதுக.


இ+யாழ்=

a)

இயாழ்

b)

இவ்யாழ்

c)

இய்யாழ்

5.

விண்வெளியின் சூழல் எவ்வாறு இருக்காது?

a)

காற்று கிடையாது

b)

எடை கொண்ட தன்மை நிலவும்

c)

இருண்டு போய் கருமையாக இருக்கும்

d)

புவி ஈர்ப்பு விசை கிடையாது.

6.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் வலிமிகா இணையைத் தேர்வு செய்க.

a)

கூரையிலிருந்து + குதித்தான்

b)

அரை + படிப்பு

c)

கடைக்கு + சென்றான்

7.

கால்களைக் கழுவி விட்டு உள்ளே வா.


மேற்கண்ட வாக்கியத்தின் வகை என்ன?

a)

செய்தி வாக்கியம்

b)

வினா வாக்கியம்

c)

கட்டளை வாக்கியம்

8.

கீழ்காணும் திருக்குறளின் பொருளைத் தேர்வு செய்க.


சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

a)

ஒரு செயலைச் செய்து முடித்துவிடுவதாகச் சொல்வது எல்லாருக்கும் சுலபமானது. ஆனால், அதனைச் சொன்னபடி செய்வதுதான் கடினமானது.

b)

இந்தத் தொழிலை இன்னின்ன காரணத்தால் இவன் செய்து முடிக்கத்தக்கவன் என்பதை ஆராய்ந்தறிந்து அத்தொழிலை அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

c)

ஒருவரின் திறமையறிந்து ஒரு பணியை மேற்கொள்ளும் பொறுப்பை வழங்க வேண்டும்.

9.

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்

வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்

____________________________________________________

தானே சிறியார் தொடர்பு


விடுப்பட்ட வரியைத் தேர்ந்தெடுக.

a)

சுடரொழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

b)

இடரொழி நீங்குகவே யென்று

c)

வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே

10.

விறு விறு என்ற இரட்டைக்கிளவிக்கேற்ற வாக்கியங்களைத் தேர்வு செய்க.


i) மாலா இருட்டு வழியில் விறு விறுவென நடந்தாள்.

ii) பல நாட்களுக்குப் பிறகு தன் அம்மாவைக் கண்டவுடன் தீபன் விறுவிறுவென அழுதான்.

iii) மழை பெய்யத் தொடங்கியதும் அகிலன் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான்.

iv) தீப்பற்றிய வீட்டிலிருந்து அனைவரும் விறு விறுவென வெளியேறினர்.

a)

ii மற்றும் iii

b)

i மற்றும் iii

c)

i மற்றும் iv

d)

i, ii மற்றும் iv

11.

__________________த்தைப் பின்பற்றி ஒழுக்கமாக நடந்துகொண்ட பவானியைப் பாராட்டி பரிசு கொடுக்கப்பட்டதும், அவள் ________________________ மகிழ்ந்தாள்.

a)

உள்ளும் புறமும், ஆடிப்பாடி

b)

சட்ட திட்டம், ஆடிப்பாடி

c)

உள்ளும் புறமும், நாணிக் கோணி

12.

நுனிப்புல் மேய்ந்தாற் போல என்ற உவமைத்தொடரின் பொருள் என்ன?

a)

கூட்டமாக

b)

மிகவும் தெளிவாகத் தெரிதல்

c)

ஒன்றைப் பற்றி மேலோட்டமாக மட்டும் தெரிந்து கொள்ளுதல்

13.

பொதுக்கூட்டத்திற்கு மக்கள் அனைவரும் _______________________________ திரண்டு வந்திருந்தனர்.


மேற்கண்ட வாக்கியத்திற்கு ஏற்ற உவமைத்தொடரைத் தேர்வு செய்க.

a)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

b)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

c)

புற்றீசல் போல

14.

_________________________ மரியாதையின்றி பேசிய மகன் அவன் தாயாரிடம் ______________________.

a)

எள்ளளவும், பாட்டு வாங்கினான்

b)

எள்ளளவும், உச்சிக் குளிர்தல்

c)

அளவுளாவுதல், உச்சிக் குளிர்தல்

15.

நம் நாட்டு விண்வெளி வீரர் யார்?

a)

கல்பனா சாவ்லா

b)

யூரி ககாரின்

c)

டாக்டர் சைட் முஸாபார் ஷுக்கோர்

16.

முதல் விண்வெளி வீரர் யார்?

a)

யூரி ககாரின்

b)

கல்பனா சாவ்லா

c)

டாக்டர் சைட் முஸாபார் ஷுக்கோர்

17.
மேடையில் பேசிக் கொண்டிருந்த தலைமையாசிரியர் திடீரென __________ விழுந்தார்.
a)
மயங்க
b)
மயங்கும்
c)
மயங்கிய
d)
மயங்கி
18.
பெற்றோரின் __________ யை உணராத வனஜா பிற்காலத்தில் வாழ்க்கையில் மிகவும் துன்பப்பட்டாள்.
a)
குறை நிறை
b)
எலும்பும் தோலும்
c)
ஆடல் பாடல்
d)
அருமை பெருமை
19.

எது புறவினா?

a)

எங்கு

b)

எச்செயல்

c)

யாவர்

d)

என்ன

20.

எவை சரி?

a)

அ + யானை = அவ்யானை

b)

அ + யானை = அய்யானை

c)

இ + யாழ் = இய்யாழ்

d)

இ + யாழ் = இவ்யாழ்