wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 32

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

a)

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.

b)

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது.

இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.

c)

உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன்,

வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

2.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

a)

நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

b)

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.

c)

எழுத்துகள் எல்லாம் ‘அ’ எனும் எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

3.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

a)

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச்செய்யும்; முயற்சி; இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.

b)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

c)

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.

4.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

a)

ஒருவர் நமக்குச் செய்யும் உதவியை மறப்பது நல்லதல்ல். அவர் செய்யும் குற்றத்தை உடனே மறந்துவிடுவது நல்லது.

b)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்;

தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

c)

விருப்பு, வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி

நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

5.
திருக்குறளை இயற்றியர் யார்?
a)
ஔவையார்
b)
இராமலிங்க அடிகள்
c)
வள்ளுவர்
d)
கம்பர்
6.

நிரைவு செய்க.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு

_________ __________ __________.

a)

யாண்டும் இடும்பை இல.

b)

இடும்பை இல

c)

இல இடும்பை யாண்டு

d)

யாண்டும் இடும்பை இருக்கு

7.

மலர் விழி தன்னுடைய அன்றாட வருமானத்தை ஈட்டுவதற்குத் தோட்டத்தில் இருக்கின்ற மலர்களைச் சரமாகத் தொடுத்து விற்பாள். சிறிய இலாபம் கிடைத்தாலும் விடாமுயற்சியுடன் அதில் செயல்பட்டதால் தற்போது பெரிய மலர் கடைக்குச் சொந்தக்காரியாகத் திகழ்கின்றாள்.

a)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

b)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

c)

தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

d)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

8.

ராமு மிகவும் ஒழுக்கமான மாணவன். பள்ளியில் நன்னடத்தைப் பேணுவதோடு தன் நண்பர்களுடனும் ஆசிரியர்களுடனும் மாரியாதையாக நடந்து கொள்வான்.

a)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

b)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

c)

தீயினாற் சுட்டப்புன் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.

d)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

9.

அன்று கனத்த மழை. சிவா வேகமாகத் வாகனத்தைச் செலுத்தியதால் அவனுடைய வாகனம் விபத்துக்குள்ளாகியது. அவ்வழியாக வந்த சிவாவின் நண்பன் காயமடைந்த சிவாவை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தான்.

a)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

b)

தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

c)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப்படும்.

d)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கன் களைவதாம் நட்பு

10.

இராமுவுக்குச் சுயமாகத் கைத்தொழில் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்று ஆசை. ஆதலால், வியாபார நுணுக்கங்களை அறிந்த பின்னரே, இத்துறையில் முழுமூச்சாக ஈடுபட்டார்.

a)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

b)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

c)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்

d)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

11.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல. (4)

a)

விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி

நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

b)

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும் : முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்

c)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும். தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

d)

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.

12.

கற்க கசடற கற்பவை கற்றப்பின்

நிற்க அதற்குத் தக எனும் திருக்குறளுக்கு ஏற்றப் படங்களைத் தெரிவு செய்க

a)
b)
c)
13.
புகழ்பட என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
a)
புகழ்
b)
தம்மைத் தாமே
c)
கூறுவது
d)
புகழ் உண்டாகுமாறு
14.

8.உள்ளத்தில் பொய் இல்லாமல் மக்கள்.......................வாழலாம்

a)

உள்ளம்

b)

உண்மை

c)

அறம்

d)

ஆசை

15.

9.வாய்மை எனப்படுவது மற்றவர்க்கு ஒரு தீங்கு தராத சொற்களைச் சொல்லுதல் ஆகும் இக்கூற்று சாியா? தவறா?

a)

தவறு

b)

சாி

16.

1. அழுக்காறாமை - சொல்லி பொருள் தருக.

a)

செல்வம்

b)

பொறாமை

c)

உண்மை

d)

பொறாமை கொள்ளாமை

17.

3 . ……… செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.

a)

அ) மன்னன்

b)

ஆ) பொறாமை இல்லாதவன்

c)

இ) பொறாமை உள்ளவன்

d)

ஈ) செல்வந்தன்

18.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

_________ தொழாஅர் எனின்

a)

கற்றாள்

b)

நற்றாள்

c)

வற்றாள்

19.

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் _________

செல்வத்து ளெல்லாந் தலை

a)

அச்செல்வா

b)

அச்செல்வன்

c)

அச்செல்வம்

20.

துப்பார்க்குத் துப்பாய ____ துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

a)

துப்பாக்கித்

b)

தூப்பாக்குத்

c)

துப்பாய

21.

உள்ளத்தால் ____ தொழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்

a)

பொய்யா

b)

செய்யா

c)

கொய்யா

22.

செயற்கரிய செய்வார் _______ சிறியர்

செயற்கரிய செய்கலா தார்

a)

செய்வர்

b)

பெரியர்

c)

பெறியர்

23.

யாகாவா ராயினும் நாகாக்க _______

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

a)

செய்யாக்கால்

b)

கவக்கால்

c)

காவாக்கால்

24.

அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்என்னுடையர் ஏனும் _______

a)

உளர்

b)

பலர்

c)

இலர்

25.

உடுக்கை _________ கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

a)

இழந்தவன்

b)

உடையவன்

c)

களைந்தவன்

26.

துப்பார்க்குத் துப்பாய ____ துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

a)

துப்பாக்கித்

b)

தூப்பாக்குத்

c)

துப்பாய

27.

_________ எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

a)

தாய்மை

b)

பொய்மை

c)

வாய்மை

28.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

a)

நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

b)

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.

c)

எழுத்துகள் எல்லாம் ‘அ’ எனும் எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

29.

கல்வி தொடர்பான திருக்குறளைத் தெரிவு செய்க

a)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

b)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்

c)

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்

30.

________ தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

a)

ஒருமைக் கண்

b)

ஒருவரின் கண்

c)

மனிதன்

d)

ஒருமைக்கண்

31.

எழுமையும்

a)

ஒரு பிறப்பில்

b)

பாதுக்காப்பாக இருக்கும்

c)

ஏழு பிறப்பிலும்

32.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

______________ சுட்ட வடு.

கோடிட்ட இடத்தை நிரப்புக.

a)

நாவினாற்

b)

கண்களினாற்

c)

நாக்கினாற்

d)

கையினாற்