NEW
Font size
Worksheetsதமிழ் வரிவடிவ வளர்ச்சி
Total questions: 9
Worksheet time: 5mins
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து …………………… என அழைக்கப் படுகிறது.
கோட்டெழுத்து
வட்டெழுத்து
சித்திர எழுத்து
ஓவிய எழுத்து
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் …………………….
பாரதிதாசன்
தந்தை பெரியார்
வ.உ. சிதம்பரனார்
பெருஞ்சித்திரனார்
மொழியை நிலைபெறச் செய்ய ……………………… உருவாக்கினான்.
கூட்டத்தை
எழுத்துகளை
பாறைகளை
அறிவை
மனிதன் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களை ……………………… ஆகப் பொறித்து வைத்தான்.
இசையாக
பாடலாக
குறியீடுகளாக
செம்மொழியாக
ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ……………………… நிலை என்பர்.
ஒலி எழுத்து
ஒளி எழுத்து
வடிவ எழுத்து
பேச்சு எழுத்து
…………………… கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
செப்பேடுகள்
ஓவியங்கள்
கல்வெட்டுகள்
எழுத்துகள்
கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை …………………… வகையாகப் பிரிக்கலாம்.
மூன்று
ஐந்து
நான்கு
இரண்டு
கண்ணெழுத்துகள் பற்றிக் குறிப்பிடும் நூல் ……………………..
திருக்குறள்
மணிமேகலை
சீவகசிந்தாமணி
சிலப்பதிகாரம்
தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் ……………………………..
வீரமாமுனிவர்
பெரியார்
பாரதியார்
கம்பர்
