wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொடர் இலக்கணம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சொன்னவன் முருகன்- இத்தொடரில் இடம் பெற்றுள்ளது _______ பயனிலை.

a)

பெயர் பயனிலை

b)

வினாப் பயனிலை

c)

வினைப்பயனிலை

d)

எதுவுமில்லை

2.

பயனிலை,எழுவாய்,செயப்படுபொருள் - என்ற வரிசையில் அமைந்த தொடரைக் கண்டறி.

a)

நான் பாடத்தைப் படித்தேன்.

b)

பாடத்தை நான் படித்தேன்.

c)

படித்தேன் நான் பாடத்தை.

d)

நான் படித்தேன் பாடத்தை.

3.

விரைந்து ஓடினான் - இத்தொடரில் ______வகை அடை பயின்று வந்துள்ளது.

a)

சொல்லடை

b)

பெயரடை

c)

வினையடை

d)

எழுவாய் அடை

4.

செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை __________ .

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

c)

தன்வினை

d)

பிறவினை

5.

எழுவாய் ஒரு வினையைச் செய்தால் ________ .

a)

தன்வினை

b)

பிறவினை

c)

செய்வினை

d)

கூட்டுவினை

6.

எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது _________ எனப்படும்.

a)

தன்வினை

b)

பிறவினை

c)

செய்வினை

d)

கூட்டுவினை

7.

சொல்லின் முதலில் நின்று பகாபதமாக அமைவது ______.

a)

பகுதி

b)

விகுதி

c)

சந்தி

d)

சாரியை

8.

பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டுவது ________ எனப்படும்.

a)

சந்தி

b)

சாரியை

c)

இடைநிலை

d)

விகாரம்

9.

முருகன் தேர்வெழுதவில்லை - எவ்வகைத் தொடர்?

a)

செய்வினைத் தொடர்

b)

செயப்பாட்டுவினைத் தொடர்

c)

உடன்பாட்டுவினைத் தொடர்

d)

எதிர்மறைவினைத் தொடர்

10.

விரைந்தோடு - எவ்வகைத்தொடர்

a)

செய்தித் தொடர்

b)

கட்டளைத்தொடர்

c)

வினாத்தொடர்

d)

தன்வினைத் தொடர்

11.

" பறந்தது " இச்சொல்லிலுள்ள விகுதி _______.

a)

ஆண்பால் வினைமுற்று விகுதி

b)

பெண்பால் வினைமுற்று விகுதி

c)

ஒன்றன்பால் வினைமுற்று விகுதி

d)

பலவின்பால் வினைமுற்று விகுதி

12.

நல்ல மாணவி என்பது குறிப்பது ---------

a)

பெயரடை

b)

வினையடை

13.

ஆசிரியர் பாடம் கற்பித்தார் என்பது குறிப்பது ----

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

14.

இனிய மலர்கள் எவ்வளவு அழகு ! என்பது குறிப்பது -------

a)

வினா வாக்கியம்

b)

உணர்ச்சி தொடர்

15.

கவிதா படம் பார்த்தாள் என்பது குறிப்பது ----------

a)

செய்தி வாக்கியம்

b)

கட்டளை வாக்கியம்