wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 4

Total questions: 54

Worksheet time: 27mins

Name
Class
Date
1.

அண்ணனின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான். அதனால், மனம் வருந்தினான்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

2.

கயல்விழி பழைய நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள். ஆனால், அதிலுள்ள சில படங்களும் செய்திகளும் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத் தன் தாயார் கூற அறிந்து வருந்தினாள்.

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

3.

சிறு _____________ பல் குத்த உதவும் .

a)

துரும்பும்

b)

கரும்பும்

c)

எறும்பும்

4.

சிகையலங்காரம் செய்யும் கலையை மதுமிதா முறையாகப் பயின்று பட்டம் பெற்றாள். சுயமாகக் கடை ஒன்றையும் வைத்து அக்கலையைச் சிறப்பாகச் செய்து வருகிறாள்.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

5.

அறிவியலில் சிறந்து விளங்கிய விமலன், தனது புத்தாக்க ஆற்றலைக் கொண்டு பல உருவாக்கங்களை உருவாக்கி, வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டான்.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

c)

சிக்கனம் சீரளிக்கும்

6.

வீண் செலவு செய்யாமல் பணத்தைச் சேமித்து வைத்த விமலாவிற்கு அப்பணம் அவளின் தம்பியின் அறுவை சிகிச்சைக்குப் பேருதவியாக இருந்தது.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

சிக்கனம் சீரளிக்கும்

c)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

7.

சாகில் தோட்ட மக்கள் அனைவரும் கொரோனா தொற்று நோயை விரட்டுவதில் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வெற்றி பெற்றனர்.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

8.

சிறுவயது முதலே சேமிக்கும் பழக்கம் கொண்ட மலர்விழி தன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்படிருந்த சுற்றுலாவில் கலந்து கொள்ள தன் சேமிப்பு பணத்தைப் பயன்படுத்தியதால் ஆசிரியரின் நன்மதிப்பைப் பெற்றாள்.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

சிக்கனம் சீரளிக்கும்

c)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

9.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதன் பொருள் என்ன ?

a)

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும்.

b)

எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெற முடியும்.

c)

எல்லாரும் ஒன்றினைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.

10.

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும் என்ற கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சிக்கனம் சீரளிக்கும்

11.

தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகச் செலவு செய்து சேமித்து வாழ்ந்தால் சிறப்புற வாழலாம் என்ற கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

12.

இப்படத்திற்குப் பொருத்தமான பழமொழி எது ?

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

c)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

13.

மேற்கண்ட கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

14.

' உலக அளவில் மிக நீளமான ஓவியங்களை வரைந்த தனி நபர்’ என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார், பரிமளகாந்த். 660 மீட்டர்- அதாவது 2166 அடி நீளத்திற்கு இவர் வரைந்த ஓவியங்கள் கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சென்னையை சேர்ந்தவரான பரிமளகாந்த் முழு நேர ஓவியர் அல்ல. கல்லூரி படிப்பின்போது பொழுதுபோக்காக ஓவியம் வரைவதில் ஈடுபட்டவர், வேலைக்கு சென்ற பிறகும் அதைத் தொடர்ந்து செய்தார். கின்னஸ் சாதனையாளராக அவருக்கு ஓவியம் வரைவதில் நாட்டம் உருவானது. நிறைய ஓவியங்களை வரைந்த நிலையில், பரிமளகாந்துக்கு வித்தியாசமாக ஓவியத்துறையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டிருக்கிறது. அந்த உந்துதலே கின்னஸ் சாதனையாக உருவாகியிருக்கிறது.


இச்சூழலுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

15.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின் என்ற குறளை எழுதியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

c)

ஒளவையார்

d)

பாரதிதாசன்

16.

பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.


வேலை + ஐ =

a)

வேலைஐ

b)

வேஐ

c)

வேலைக்கு

d)

வேலையை

17.

பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.


கவிதை + இன் =

a)

கவியின்

b)

கவிதயின்

c)

கவிதையின்

d)

கவிதைஇன்

18.

பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.


குடும்பம் + ஓடு =

a)

குடும்பமோடு

b)

குடும்பத்தோடு

c)

குடும்பம்ஓடு

d)

குடும்போடு

19.

கோடிப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமையைக் குறிப்பிடுக.


மனைவி கணவனால் போற்றப்பட்டாள்

a)

கணவன் + ஆல்

b)

கண்வன் + ஆள்

c)

கணவ + நால்

d)

கணவன் + அல்

20.

கோடிப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமையைக் குறிப்பிடுக.


இடையன் ஆடுகளை மேய்த்தான்.

a)

ஆடு + இலை

b)

ஆடு + களை

c)

ஆடுகள் + ஐ

d)

ஆடுகள் + லை

21.

கோடிப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமையைக் குறிப்பிடுக.


கயல்விழி துணி துவைத்தாள்.

a)

1-வேற்றுமை உருபு

b)

2-வேற்றுமை உருபு

c)

3-வேற்றுமை உருபு

d)

4-வேற்றுமை உருபு

22.

"எந்தக் காலத்திலும்" என்னும் விளக்கத்தைக் குறிக்கும் இணைமொழி யாது?

a)

அன்றும் இன்றும்

b)

ஆதி அந்தம்

c)

அல்லும் பகலும்

d)

பழக்க வழக்கம்

23.

பின்வரும் விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக.


" வாழ வேண்டிய அறநெறியில் வாழ்ந்தால் உலகம் நம்மை மதிக்கும்"

a)

அகர முதல

b)

வையத்துள் வாழ்வாங்கு

c)

ஞாலங் கருதினுங்

d)

நன்றி மறப்பது நன்றன்று

24.

சரியான வேற்றுமை உருபுகளைக் கண்டறிக.


அண்ணன் தங்கையை அழைத்தார்.

a)

1-வேற்றுமை உருபு

b)

2-வேற்றுமை உருபு

c)

3-வேற்றுமை உருபு

d)

4-வேற்றுமை உருபு

25.

"காலத்தைத் தவறவிட்டால் மீண்டும் பெறுவதென்பது இயலாத ஒன்றாகும்" என்ற கூற்றுக்கு ஏற்ற பொன்மொழி என்ன?

a)

காலம் பொன்னானது

b)

காலம் மண்ணானது

c)

காலம் மின்னானது

26.

மூன்றாம் உருபுகள் யாவை?

a)

உருபு இல்லை

b)

c)

கு

d)

ஆல், ஆன், உடன், ஓடு, ஒடு

27.

இரண்டாம் உருபுகள் யாது?

a)

b)

கு

c)

உம்

d)

இருந்து

28.

ஒவ்வொரு வருடமும் இங்கு வசிக்கும் __________அழைத்து இப்பண்டிகையைக் கொண்டாடுவதில் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சிதான்.

a)

அன்றும் இன்றும்

b)

அண்டை அயலாரை

c)

மக்களை

d)

எலும்புத் தோலும்

29.

உயிரெழுத்துகள் எத்தனை?

(a)  

30.

மெய்யெழுத்துகள் எத்தனை?

(a)  

31.

குற்றெழுத்துகள் எத்தனை?

(a)  

32.

நெட்டெழுத்துகள் எத்தனை?

(a)  

33.

திணை எத்தனை வகை உண்டு?

(a)  

34.

தமிழில் பால் எத்தனை வகைப்படும்?

(a)  

35.

1. பெரியோர் சொன்ன நகைச்சுவையைக் கேட்ட பாலன் _________ எனச் சிரித்தான்.

a)

கல கல

b)

சல சல

c)

பள பள

36.

மொழி அறிவையும் கணித அறிவையும் மாணவர்கள் முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும்.

a)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

b)

எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்

c)

ஔவியம் பேசேல்

37.

நல்வழி

a)

ஆனமுதலி ல் அதிகஞ் செலவானால்

b)

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

c)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

38.

வலிமிகும் விதிகள்

a)

இரண்டாம் வேற்றுமை

b)

படி

c)

சில , பல

d)

நான்காம் வேற்றுமை

39.

சந்தச் சொல்

a)

காடு , மான் , நாடு

b)

சந்தம், தந்தம் , பந்தம்

c)

பணிவு, துணிவு, வாணி

40.
a)

யானைக் குட்டிகள்

b)

யானை மந்தைகள்

c)

யானைக் கூட்டம்

41.

ஒரே பொருள் தரும் சொற்கள்

1 அம்மா

11 அப்பா

111 தாய்

1 v ஈன்றவள்

a)

1. 11

b)

1, 111, 1v

c)

1,11,111,

42.

சேர்த்தெழுதுக


அந்த + பையன்

a)

அந்த பையன்

b)

அந்தப் பையன்

c)

அப்பையன்

43.

தொழிற்பெயர்

a)

பாடுதல்

b)

படம்

c)

எழுதுதல்

d)

தூங்குதல்

44.

பழமொழி

எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெறமுடியும்

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

45.

_____________த் தொடரின் அழகை இரசித்தேன் .

a)

மலை

b)

மழை

c)

மாலை

46.

குளத்தில் ______ மலர்கள் பூத்திருந்தன.

a)

அல்லி

b)

அள்ளி

c)

அலி

d)

ஆளி

47.

மார்கழி மாதத்தில் _____ அதிகமாக இருக்கும் என்பர்.

a)

பணி

b)

பனி

c)

பாணி

d)

பயணி

48.

அக்காள் தக்காளிப் பழத்தை _____ப் பாகமாக

வெட்டினார்.

a)

அரை

b)

அறை

c)

அரி

d)

அறி

49.

சரியான சொற்றொடர்

a)

சிவப்பு மிலகாய்

b)

சமையல் அறை

c)

வெலலை முயல்

d)

பழுத்தப் பழம்

e)

கறைந்த காகம்

50.

சரியாக வலிமிகுந்தவை

a)

இங்குக் கொடு ..

b)

கேட்கும்படிச் சொன்னான் .

c)

அந்த காடு .

d)

அவனைப் புகழ்ந்தான் .

51.

வெற்றி வேற்கை

a)

கல்விக் கழகு கசடற மொழிதல்.

b)

பெருமையும் சிறுமையும் தான் தர தருமே

c)

தொன்று தொட்டு

d)

முழு மூச்சு

52.

வலிமிகா விதிகள்

a)

இது

b)

எந்த

c)

சில

d)

படி

53.

பண்புப்பெயர்

a)

நன்மை

b)

நீலம்

c)

மேசை

d)

வீடு

e)

அழகு

54.

உயிர்நெடிலில் தொடங்கும் சொல்

a)

ஆந்தை

b)

சேய்

c)

செடி

d)

அம்மி