wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 4 மீள்பார்வை கேள்வி

Total questions: 29

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

இப்படம் உணர்த்தும் கருத்து யாது?

a)

பெண் குழந்தை பாதுகாப்பு

b)

பெண்களே உலகின் கண்கள்

c)

பெண்களுக்குக் கைகளே பாதுகாப்பு

d)

பெண்களைத் தெய்வமாகப் பாதுகாப்போம்

2.

கீழ்க்காணும் கவிதை உணர்த்தும் கருத்து யாது?

a)

நாம் என்றும் நல்லதை விதிக்க வேண்டும்

b)

சிறந்த வாழ்க்கைக்குத் தன்னம்பிக்கை அவசியம்

c)

நற்செயல்கள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்

d)

நல்ல விதைகள் நல்ல மரங்களாக வளரும்

3.

கீழ்க்காணும் நாளிதழ் செய்தியின் வாயிலாக அமைச்சர் வலியுறுத்தும் கருத்தினைத் தெரிவு செய்க.

a)

ஊடகவியலாளர்களுக்கு நன்னெறிக் கோட்பாடு இல்லை

b)

ஊடகவியலாளர்களுக்கு நன்னெறிக் கோட்பாடு உருவாக்கப்பட வேண்டும்

c)

அமைச்சர்களுக்கு நன்னெறி கோட்பாடு உருவாக்கப்பட வேண்டும்

d)

மலேசிய ஊடகவியலாளர் சங்கங்களுக்கு நன்னெறிக் கோட்பாடு அவசியம்

4.

கீழ்க்காணும் குறிப்பில் டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் மணிஜெகதீசன் அவர்களிந்திறமையின் வழி உணர்த்தப்படுவது யாது?

a)

கல்வியில் சிறந்து விளங்குவோர் விளையாட்டில் சிறந்து விளங்க முடியாது

b)

கல்வியில் சிறந்து விளங்குபவர்கள் விளையாட்டிலும் சிறந்து விளங்க முடியும்

c)

கல்வியே ஒருவர் சிறந்து விளங்க வழிவகுக்கிறது

d)

விளையாட்டே ஒருவர் கல்வியில் சிறந்து விளங்க வழிவகுக்கிறது

5.

புகைபிடிப்பது உயிருக்கு ஆபத்தானது எனக் கூறப்படுவதன் காரணம் யாது?

a)

கொடிய நோய்களையும் அதிக மரணங்களையும் ஏற்படுத்துவதால்

b)

அதிக எண்ணிக்கையிலான மரணங்களை ஏற்படுத்துவதால்

c)

அதிகமான நோய்த்தொற்றை ஏற்படுத்துவதால்

d)

நாட்டில் அதிகமானோர் புகை பிடிப்பவராக இருப்பதால்

6.

கோபாலனின் கவலைக்கான காரனத்தைத் தெரிவு செய்க

a)

'டுக்காச் சித்தா' என்ற வார்த்தை சோற்றின் மீது வெறுப்பை ஏற்படுத்தியதால்

b)

அப்பா அவன் சொல்லும் முன்னே பதிலை ஊகித்துக் கொண்டதால்

c)

எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்காததால்

d)

'கவலை படாதே, வந்து சாப்பிடு' என அப்பா கூறியதால்

7.

இச்சிறுகதையில் வரும் கோபாலனின் பண்புநலனைத் தெரிவு செய்க

a)

அம்மாவிடம் பேச விரும்பாதவன்

b)

பேச்சைக் குறைத்துச் செயலில் காட்டுபவன்

c)

எப்போதும் வெற்றியே பெற வேண்டும் என நினைப்பவன்

d)

தோல்வியைக் கண்டு எளிதில் மனமுடைபவன்

8.

'வெறுப்பை உமிழச் செய்தது' என்னும் சொற்றொடர் உணர்த்து சூழலுக்கு ஏற்ற பொருள் யாது

a)

வேலை கிடைக்காத கவலையால் உண்ன விருப்பமின்றி போனது

b)

வேலை கிடைக்காத கோபத்தில் சோற்றில் எச்சில் துப்பினான்

c)

வேலை கிடைக்காத வெறுப்பில் நீரை ஊற்றினான்

d)

வேலை கிடைக்காத காரணத்தால் தட்டிலிருந்த சோறு சுவைக்கவில்லை

9.

கவிஞர் முதல் கண்ணியில் வெளிப்படுத்தும் கருத்து யாது?

a)

மாறிய உலகில் புரிந்து கொள்ளாதிருத்தல்

b)

உலகம் மாறிவிட்டதை அறியாமல் இன்னும் உறங்கிக் கொண்டிருத்தல்

c)

உலகம் வேகமாக மாறிவரும் வேளையில் அதை இன்னும் உணராதிருத்தல்

d)

விமானப் பயணம் மூலம் உலகை விரைவாக வலம் வருதல்

10.

இரண்டாவது கண்ணியில் கவிஞர் எதனை வலியுறுத்துகிறார்?

a)

எதிர்காலம் கணிணியைச் சார்ந்திருக்கும்

b)

எதிர்காலம் கதைகள் கூறும் காலமாக இருக்கும்

c)

நமக்கென கணினி ஒன்று அவசியம் தேவை

d)

கணினி கூறும் கதைகளைக் கேட்டுத் தெளிய வேண்டும்

11.

மரபுதொடருக்குப் பொருத்தமாக அமைந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

இதுநாள் வரை தான் போட்டிருந்த ஆடையின் சாயம் வெளுத்ததால் பூமகள் புதிய ஆடை ஒன்றினை வாங்கினாள்

b)

இதுநாள் வரை தீய எண்ணத்துடன் நல்லவன்போல் நடித்த தூயனின் சுயரூபம் வெளிப்பட்டதால் அவன் சாயம் வெளுத்தது

c)

பல ஆண்டுகளுக்கு முன் பூசப்பட்ட வீட்டின் சாயம் வெளுத்ததால் இவ்வாண்டு வீடு முழுவதும் புதிய சாயம் பூச அப்பா முடிவு எடுத்தார்

d)

புதிதாக வேலையில் சேர்ந்த ராமுவுக்குக் கொடுக்கப்பட்ட சீறுடையின் சாயம் வெளுத்திருந்ததால் அதனை அவன் அணிய மறுத்தான்

12.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க

a)

நிறை குடம்

b)

கருணைக் கடல்

c)

காதில் பூ வைத்தல்

d)

தட்டிக் கொடுத்தல்

13.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க

a)

கால நேரம்

b)

சாக்குப் போக்கு

c)

அக்கம் பக்கம்

d)

அரிய பெரிய

14.

கீழ்க்காணும் சூழலில் விடுபட்ட இடத்திற்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க

a)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

b)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

c)

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

d)

நீர்மேல் எழுத்துப் போல

15.

உவமைத்தொடருக்குப் பொருத்தமாக அமைந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

அந்தப் படகு நீர்மேல் எழுத்து போல மிதந்து சென்றது

b)

உத்தமனின் வாக்குறுதி நீர்மேல் எழுத்து போல என்றும் நிலையானது

c)

பங்கு சந்தை நிலவரங்கள் நீர்மேல் எழுத்துப் போல ஏறி இறங்கும்

d)

பொய் சொல்பவர்களுக்கு நீர்மேல் எழுத்து போல துன்பம் மேல் துன்பம் வரும்

16.

குந்தித் தின்றால் குன்றும் மாளும் எனும் பழமொழி உணர்த்தும் கருத்துக்கு ஏற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டத்தினால் எழிலன் தன் செல்வத்தை எல்லாம் இழந்தான்

b)

தன் தாத்தாவின் சொத்துகளைச் சதிதிட்டம் தீட்டி அபகரிக்க முயன்ற தூயன் காவலர்களால் கைது செய்யப்பட்டான்

c)

தன் பரம்பரைச் சொத்துகளையெல்லாம் உல்லாசமாக வாழ்ந்து அழித்த சிலம்பரசன் இன்று பிறரிடம் கையேந்தும் நிலையில் உள்ளான்

d)

செல்வச் செருக்கில் பிறரிடம் ஆணவமாக நடந்த சீமான் நண்பர்களையும் சுற்றத்தாரையும் இழந்து தனி மரமாக நிற்கின்றான்

17.

கீழ்க்காணும் சூழலில் விடுப்பட்ட இடத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க

a)

கால நேரம்

b)

சாக்குப் போக்கு

c)

அக்கம் பக்கம்

d)

அரிய பெரிய

18.

கீழ்க்காணும் சூழலில் விடுபட்ட இடத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

b)

திக்கற்றவனுக்குத் தெய்வம் துணை

c)

கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு

d)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

19.

கீழ்க்காணும் விளக்கத்திற்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் செல்வமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக் கொண்டு போய்ச் சேரும்

a)

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவது அறிவு

b)

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் முடையா னுழை

c)

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு

d)

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதிலார் உடையது உடையரோ மற்று

20.

கீழ்காணும் வாக்கியங்களில் மென்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

அம்மா கறியில் சிறிது உப்புச் சேர்த்தார்

b)

பஞ்சு மெத்தையில் தூங்குவது உடலுக்கு நல்லது

c)

சிரித்த முகத்துடன் இருப்பது, முகத்திற்கு அழகு சேர்க்கும்

d)

திருமதி மதிமுகம் தனது சுவை மிகுந்த உணவைத் தயாரிக்கும் முறையைச் செய்து காட்டினார்

21.

கீழ்க்காணும் வாக்கியங்களில் சினையாகு பெயரைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

தன் தோட்டத்தில் கார்த்திகை மலர்ந்தது கண்டு மகிழ்ந்தாள் பூமகள்

b)

தனக்குப் பிடித்த சிவப்பு நிற இனிப்பு உண்டான் கோபு

c)

கத்தரிக் குழம்பில் கருவாட்டைச் சேர்ந்தான் முருகு

d)

குடும்பத்துடன் கண்காட்சிக்குச் சென்றசோழன், தலைக்குப் பத்து ரிங்கிட் கட்டணம் செலுத்தினார்

22.

சேர்த்தெழுக

நான்கு + நான்கு

a)

நன்னாங்கு

b)

நந்நான்கு

c)

நந்நாங்கு

d)

நல்நான்கு

23.

பிரித்தெழுக

தொண்ணூறு

a)

தொண் + நூறு

b)

ஒன்பது + நூறு

c)

பத்து + ஒன்பது

d)

ஒன்பது + பத்து

24.

கீழ்க்காண்பவற்றில் சரியாக வலிமிகுந்துள்ள விடையைத் தெரிவு செய்க

a)

வண்டி சக்கரம்

b)

விறகுக் கட்டினான்

c)

தம்பிச் சட்டை

d)

அழாக் குழந்தை

25.

கீழ்க்காணும் சொல்லில் வலிமிகாததற்கான காரணத்தைத் தெரிவு செய்க

பாடுபொருள்

a)

வினைத்தொகையில் வலிமிகாது

b)

ஆறாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையாய் இருப்பின் வலிமிகாது

c)

இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வலிமிகாது

d)

உம்மைத்தொகையில் வலிமிகாது

26.

கீழ்க்காணும் வாக்கியத்தில் காணப்படும் உவமைத்தொகையைத் தெரிவு செய்க

a)

சுயம்வரம்

b)

அன்னநடை

c)

அழகைக் கண்டு

d)

மயங்கினார்கள்

27.

கீழ்க்காண்பவற்றில் தனி வாக்கியத்தைப் பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்க

a)

ஓர் எழுவாய் அல்லது பல எழுவாய்கள் ஒரே பயனிலையைப் பெற்று வருவது தனி வாக்கியம்

b)

ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது தனி வாக்கியம்

c)

ஒன்றுக்கும் மேற்பட்ட தகவல்களை அல்லது செய்திகளை ஒரே வாக்கியத்தில் வருவது தனி வாக்கியம்

d)

சில தனி வாக்கியங்கள் 'என்னும்', 'என்றும்' முதலிய சொற்களைக் கொண்டிருக்கும்

28.

கீழ்க்காணும் தனிவாக்கியங்களைத் தொடர் வாக்கியமாக மாற்றுக.

a)

கம்பர் சடையப்ப வள்ளலின் ஊருக்குச் சென்றதோடு இராமாயணத்தை இயற்றினார்

b)

கம்பர் சடையப்ப வள்ளலின் ஊருக்குச் சென்று இராமாயணத்தை இயற்றினார்

c)

இராமாயணத்தை இயற்றுவதற்காகக் கம்பர் சடையப்ப வள்ளலின் ஊருக்குச் சென்றார்

d)

சடையப்ப வள்ளல் கம்பரின் ஊருக்குச் சென்று இராமாயணத்தை இயற்றினார்

29.

வினைத்தொகையைப் பற்றி சரியான இலக்கண விதிகளைத் தெரிவு செய்க.

i) முதற்சொல் வினையடியாக இருக்கும்

ii) வினையடிக்கு அடுத்து பெயர்ச்சொல் இருக்கும்

iii) காலம் காட்டும் உருபுகள் மறைந்திருக்கும்

iv) வினைத்தொகையில் வலிமிகும்

a)

i, ii, iii

b)

i, iii, iv

c)

i, ii, iv

d)

ii, iii, iv