NEW
Font size
Worksheetsசரியான விடை
Total questions: 30
Worksheet time: 15mins
1. ஒருவர்க்கு சிறந்த அணி
அ . மாலை
ஆ .காதணி .
இ .இன்சொல்
ஈ . வன்சொல்
2. உடல் நோய்க்கு ------------தேவை
அ.ஔடதம்
ஆ . இனிப்பு
இ . உணவு
ஈ . உடை
3. நண்பர்களுடன் ------------விளையாடு .
அ. ஒருமித்து
ஆ . மாறுபட்டு
இ. தனித்து
ஈ . பகைத்து
4. நுட்பமாக சிந்தித்து அறிவது -------
அ . நூலறிவு
ஆ . நுண்ணறிவு
இ . சிற்றறிவு
ஈ . பட்டறிவு
5 . தானே இயங்கும் எந்திரம் -------
அ . கணினி
ஆ . தானியங்கி
இ . அலைபேசி
ஈ . தொலைக்காட்சி
6 . மாணவர்கள் நூல்களை -----கற்க வேண்டும் .
அ . மேலோட்டமாக
ஆ . மாசுற
இ . மாசற
ஈ . மயக்கமுற
7 . மாணவர் பிறர் ----------நடக்கக் கூடாது .
அ . போற்றும்படி
ஆ . தூற்றும்படி
இ . பார்க்கும்படி
ஈ . வியக்கும்படி
8 . நாம் -------சொல்படி நடக்க வேண்டும் .
அ . இளையோர்
ஆ . ஊரார்
இ . மூத்தோர்
ஈ . வழிப்போக்கர்
9 . கைப்பொருள் எண்ணும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ . கையில் +பொருள்
ஆ . கைப் +பொருள்
இ . கை +பொருள்
ஈ . கைப்பு +பொருள்
10 . மானம்+இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---
அ . மானம்இல்லா
ஆ . மானமில்லா
இ . மானமல்லா
ஈ . மானம்மில்லா
11 . இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------
அ.இடம் +மெல்லாம்
ஆ . இடம் +எல்லாம்
இ . இட +எல்லாம்
ஈ . இட +மெல்லாம்
12 . குற்றம் +இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ. குற்றம்இல்லாதவர்
ஆ .குற்றமல்லாதவர்
இ.குற்றமில்லாதவர்
ஈ . குற்றம்அல்லாதவர்
13 . சிறப்பு +உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது -------
அ.சிறப்பு உடையார்
ஆ . சிறப்படையார்
இ . சிறப்படையார்
ஈ . சிறப்புடையார்
14 . நின்றிருந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது நின்று ------
அ . நின் +றிருந்த
ஆ . நின்று +ருந்த
இ .நின்று +இருந்த
ஈ . நின்றி +ருந்த
15 . அவ்வுருவம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -------
அ . அவ்வு +ருவம்
ஆ . அவ் +வுருவம்
அ +வுருவம்
ஈ . அ +உருவம்
16 . மருத்துவம் +துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ----
அ.மருத்துவம்துறை
ஆ . மருத்துவதுறை
இ . மருந்துதுறை
ஈ. மருத்துவத்துறை
17 . செயல் +இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ------
அ . செயலிழக்க
ஆ . செயல்இழக்க
இ செயஇழக்க
ஈ . செயலிலக்க
18 . நீக்குதல் என்னும் சொல்லின் எதிரச்சொல் ----
அ . போக்குதல்
ஆ . தள்ளுதல்
இ . அழித்தல்
ஈ .சேர்த்தல்
19 . எளிது என்னும் சொல்லின் எதிரச்சொல் --------
அ . அரிது
ஆ . சிறிது
இ . பெரிது
ஈ . வரிது
20 . கண்டறி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ . கண்+அறி
ஆ . கண்டு +அறி
இ . கண்ட +அறி
ஈ . கண் +அறி
21.ஓய்வற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------
அ . ஒய்வு +அற
ஆ . ஓய் +அற
இ .ஓய் +வற
ஈ . ஒய்வு +வற
22 . ஏன் +என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ----------
அ ஏன்என்று
ஆ .ஏனென்று
இ . ஏன்னென்று
ஈ . ஏனன்று
23 . ஔடதம்+ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் -------
அ . ஔடதமாம்
ஆ . ஔடதம்ஆம்
இ . ஔடதாம்
ஈ . ஔடதஆம்
24. கிணறு என்பதைக் குறிக்கும் சொல் --
அ . ஏரி
ஆ . கேணி
இ . குளம்
ஈ ஆறு
25 . சித்தம் என்பதன் பொருள் ----
அ . வனம்
ஆ . மணம்
இ . குணம்
ஈ . உள்ளம்
26 . மாடங்கள் என்பதன் பொருள்
அ . கூரை
ஆ . வாயில்
இ. சாளரம்
ஈ . அடுக்குகள்
27 . கழுத்தில் சூடுவது ----------
அ . கணையாழி
ஆ .தண்டை
இ . தார்
ஈ . மேகலை
28 . நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ------ஆக இருக்கும் .
அ .மகிழ்ச்சி
ஆ .அசதி
இ . கோபம்
ஈ . வருத்தம்
29 ஏற்ற தாழ்வற்ற ------------அமைய வேண்டும் .
அ . சமூகம்
ஆ . நாடு
இ . வீடு
ஈ .தெரு
30 . செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ . செம் +பயிர்
ஆ .செம்மை +பயிர்
இ .செமை +பயிர்
ஈ . செம்பு +பயிர்
