Worksheetsமரபுத்தொடர்கள் பற்றிய வினாக்கள்
Total questions: 54
Worksheet time: 3hrs 32mins
குமரன் தன்னிடமிருந்த செல்வத்தில் பாதியை முதியோர் இல்லத்திற்கு அள்ளிக்கொடுத்தார்.
பாலாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அவளது அப்பா காசை அள்ளியிறைத்திருந்தார்
நாதன் அதிக இடங்கொடுத்து மகனை வளர்த்ததால் அவன் ஒழுக்கமின்றி வளர்ந்தான்.
தவறு செய்த மாணவர்களை ஆசிரியர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும்படி இடித்துரைத்தார்.
ஒற்றுமையாக இருந்த மாறனின் குடும்பம், அவனது மாமாவின் வருகையால் இரண்டுபட்டது.
ஒற்றுமையாக இருந்த மாறனின் குடும்பம், அவனது மாமாவின் வருகையால் இரண்டுபட்டது. விடுமுறையில் இருந்த மாறனும் ரவியும் அதிகமாக்க் கூச்சலிட்டு வீட்டை இரண்டு��டுத்தினர்.
இரண்டுபடுதல்
பிளவு படுதல்/ அதிக சத்தமிடுதல்
மாலதி தனக்கு கொடுக்கப்பட்ட ஒப்படைப்பு வேலையைச் செய்து முடிக்காமல் இன்று நாளை என்று இழுக்கடித்தாள்.
இழுக்கடித்தல்
நேரம் கடத்துதல், அலையவைத்தல்
கோபத்தில் தன் தந்தையிடம் எடுத்தெறிந்து பேசியதற்கு உமா மன்னிப்புக் கேட்டாள்.
எடுத்தெறிதல்
மதிக்காமல் பேசுதல்
உடல்நலம் சரியில்லாத தன் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது, வீட்டுவேலைகளை கவனிப்பது என்று பாலன் அனைத்து வேலைகளையும்
ஓடியாடிப்பார்த்தல்
வேகமாக வேலை செய்தல்
உடல்நலம் சரியில்லாத தன் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது, வீட்டுவேலைகளை கவனிப்பது என்று பாலன் அனைத்து வேலைகளையும் ஓடியாடிப் பார்த்துக் கொண்டான்.
புகழேணியின் உச்சிக்குச் சென்ற குமாரின் ஆணவம் அவனுடைய கண்ணை மறைத்ததால் உடன் பணிபுரிந்தவர்களை மதிக்கவில்லை.
பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது என்று கண்மூடித்தனமாக எண்ணிய காலம் மலையேறிவிட்டது
உடனுக்குடன் வேலைகளைச் செய்து முடிக்காததால் இறுதியில் வேலைப்பளுவால் கண்பிதுங்கி நின்றாள் கலா.
பொங்கல் பண்டிகைக்காக வேண்டாத பொருட்களை கழித்துக் கட்டிவ
உடனுக்குடன் வேலைகளைச் செய்து முடிக்காததால் இறுதியில் வேலைப்பளுவால் கண்பிதுங்கி நின்றாள் கலா.
பொங்கல் பண்டிகைக்காக வேண்டாத பொருட்களை கழித்துக் கட்டிவிட்டு வீட்டைச் சுத்தப்படுத்தினாள் திலகா.
வகுப்பில் புதிதாகச் சேர்ந்த மாதவனை மற்ற மாணவர்கள் கிள்ளுக்கீரையாக எண்ணியதால் அவனைத் தங்கள் குழுவில் சேர்த்துக்கொள்ளவில்லை.
பலமுறை அறிவுறுத்தியும் மீண்டும் மீண்டும் திருட்டுத் தொழிலில் ஈடுபட்ட சுதாகரனை அவனுடைய தாயார் கைகழுவினார்.
நம்மை மதிக்காதவர் வீட்டில் கை நனைக்கக் கூடாது என்பது ஆன்றோர் வாக்காகும்.
மூத்தவர்களை மதிக்காமல் செயல்படும் மதனின் நட்பி
நம்மை மதிக்காதவர் வீட்டில் கை நனைக்கக் கூடாது என்பது ஆன்றோர் வாக்காகும்.
தலை முழுகுதல் உறவை வெட்டிவிடுதல்
தலைமேற்கொள்ளுதல் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல்
தலையெடுத்தல் முன்னேற்றம் அடைதல்
நட்டாற்றில் விடுதல் முழுமையாக உதவிசெய்யாமல் இருத்தல்
முகங்கொடுத்தல்
மாதவனைத் தெரியாத தொழிலில் முதலீடு செய்யவைத்ததோடு மட்டுமின்றி அவனுக்கு எந்த உதவியும் செய்யாமல் நட்டாட்றில் விட்டார் அவனுடைய நண்பன் ரவி.
மாதவி பெரியவர்களிடம் பேசும்போது முகங்கொடுத்து பேசும் இயல்புடையவள். அதனால், அவளை அனைவருக்கும் பிடிக்கும்.
அதிக முதலீடு செய்து தொடங்கிய தன் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தாததால், ராமன் நொடித்துப் போனார்.
தனக்கு வியாபாரத்தில் இழப்பை ஏற்படுத்திய கதிரவனை பழிவாங்கத் துடித்தான் மாதவன்.
சிலர் தீய எண்ணம் கொண்ட வசதிபடைத்தவர்களை மட்டும் வலைவீசி கோடிக்கணக்கில் ஏமாற்றுகிறார்கள்.
வெட்டிப்பேச்சு பே
சிலர் தீய எண்ணம் கொண்ட வசதிபடைத்தவர்களை மட்டும் வலைவீசி கோடிக்கணக்கில் ஏமாற்றுகிறார்கள்.
வெட்டிப்பேச்சு பேசி நேரம் கழிப்பது இன்றைய இளையர்கள் சிலருக்குப் பொழுதுபோக்காக உள்ளது.
குமரன் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் பலநாட்கள் சிகிச்சைபெற்றதால் இளைத்து களைத்து காணப்பட்டான்.
ஊரும் பேரும் தெரியாத இடத்தில் அருண் பணத்தைக் கொடுத்து அதைத் திரும்பப்பெற முடியாமல் தவித்தான்.
கவிதாவும் சவிதாவும் இரட்டைச் சகோதரிகள் என்றாலும், குணத்தில் இருவரும் எதிரும் புதிருமாக இருந்தார்கள்.
கவிதாவும் சவிதாவும் இரட்டைச் சகோதரிகள் என்றாலும், குணத்தில் இருவரும் எதிரும் புதிருமாக இருந்தார்கள்
பாலா மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பதால் யாரிடமும் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசமாட்டான்
கண்டது கேட்டது எல்லாம் பொய்யாய் இருக்கலாம். தீர விசாரித்தே உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்
வாழ்க்கைப் பயணம் மேடுபள்ளங்களை உடையது என்பதை உணர்ந்து அவற்றைச் சமாளித்து வெற்றிபெற முயலவேண்டும்.
வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த கணவன் திடீரென்று வந்ததால், அது கனவோ நனவோ என்று மலைத்து நின்றாள் கமலா.
தவறு செய்யும்போதே பிடிபடுதல்
வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த கணவன் திடீரென்று வந்ததால், அது கனவோ நனவோ என்று மலைத்து நின்றாள் கமலா.
போலியான பொருட்களை அதிக விலைக்கு விற்றுவந்த கடைக்காரரை காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்து சிறையில் அடைத்தனர்.
சாடை மாடையாகப் பேசாமல், நேரிடையாகப் பேசினால், எப்பேர்ப்பட்ட பிரச்சினைக்கும் தீர்வு காணலாம்.
வறுமையில் வாடினாலும் மாறன் தம்பதியினர் தங்கள் மகளைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர்.
அன்பன் தன் மகளுக்குச் சீரும் சிறப்புமாய்த் திருமணம் செய்து வைத்ததால் அனைவரும் அவனைப் பாராட்டினர்.
திடீரென்று பணக்காரனான சங்கரின் நடை உடையில் மாற்றம்
அன்பன் தன் மகளுக்குச் சீரும் சிறப்புமாய்த் திருமணம் செய்து வைத்ததால் அனைவரும் அவனைப் பாராட்டினர்.
திடீரென்று பணக்காரனான சங்கரின் நடை உடையில் மாற்றம் ஏற்பட்டது.
இரு நாடுகளுக்கு இடையே இருந்த போரும் பூசலும், இளவரசரின் திருமணத்தால் நீங்கியது.
சங்கரன் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் சாதுவாக இருப்பவன்.
சிறு வரவு செலவு கணக்குகளைப் பிள்ளைகளிடம் ஒப்படைத்தால் அவர்களும் கற்றுக் கொள்வார்கள்.
