wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பாவலர் நினைவு நாள்

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

பாவலர் அ.பு திருமாலனார் கூறிய முக்கூறுகள் யாவை என்பதனை தேர்ந்தெடுக்கவும்.

a)

மொழி, இனம், சமயம்

b)

மொழி, குமுகாயம், சமயம்

c)

இனம், சமயம், கல்வி

d)

சமயம், கல்வி, குமுகாயம்

2.

மொழியின் முக்கியத்துவம் யாவை ?

a)

அடையாளம், உயிர்ப்பு, நிலைத்தல்

b)

கல்வி, பேச்சு திறன், உயிர்ப்பு

c)

அடையாளம், வாழ்க்கை நடப்பு, நிலைத்தல்

d)

உயிர்ப்பு, காலம், திறன்

3.

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளுள் ஒன்றினை தேர்ந்தெடுக்கவும்

a)

புத்தகம் படித்தல்

b)

தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புதல்

c)

தமிழ் நாட்டிற்கு செல்லுதல்

d)

தூயத்தமிழில் பேசும் பிள்ளைகளை கண்டித்தல்

4.

பாவலர் அ.பு திருமாலனாரின் பிறப்பு எப்பொழுது ?

a)

08/06/1936

b)

06/08/1936

c)

08/08/1938

d)

06/06/1938

5.

பாவலர் அ.பு திருமாலனார் இயற்றிய நூல்களில் ஒன்றினை தேர்வு செய்க

a)

தமிழர் வாழ்வறத்தில் தாலி

b)

தமிழ்ச்சிட்டு

c)

தமிழ்நலம்

d)

குடும்ப விளக்கு

6.

பாவலர் அ.பு திருமாலனார் எந்த ஆண்டில் தமிழ் நெறிக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கினார்

a)

1983

b)

1940

c)

1988

d)

1987

7.

தமிழ் மொழிக்காக அ.பு. திருமாலனார் செய்த சேவைகள் என்னென்ன?

a)

அ.பு. திருமாலனார் தமிழ் எழுத்துக்களை ஒவ்வொன்றாக புதிதாக கண்டுபிடித்தார்.

b)

அவர் தமிழ் மொழிக்கு அடித்தள வேலை செய்தார், நூல்களை எழுதியதோடு மட்டுமல்லாமல் பலகாலமாக தமிழர் பண்பாட்டை மக்களிடம் எடுத்துச் சொன்னார்.

c)

அவர் தமிழ் கற்றுக்கொள்ளும் முறை முழுவதும் ஆங்கிலத்தில் கற்பித்தார்.

d)

தமிழ் வளர்ச்சியை எதிர்த்து ஒரு இயக்கத்தை தொடங்கினார்.

8.

கிழே உள்ள கவிதையை நிறைவு செய்க.

தன்னினம் காப்ப தற்கே
தகவிலான் தன்னி னத்தின்
________ நெறியைப் போற்றுந்
திறனிலான் தேர்வார் தம்மை

a)

திண்ணிய

b)

நுண்ணிய

c)

எண்ணம்

d)

வாழ்வு

9.

அ.பு.திருமாலனார் சமயம் என்ன செய்ய வேண்டும் என்று நம்பினார்?

a)

மனிதர்களைப் பிரிக்க வேண்டும்

b)

பயத்தை ஏற்படுத்த வேண்டும்

c)

மனிதர்களை இணைக்க வேண்டும்

d)

சண்டையை வளர்க்க வேண்டும்

10.

திருமாலனார் மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை எப்படிப் பார்த்தார்?

a)

ஆதரித்தார்

b)

எதிர்த்தார்

c)

தவிர்க்காமல் ஒப்புக்கொண்டார்

d)

நிலைபெற்றவை என்றார்

11.

எத்தகைய சமயத்தை திருமாலனார் ஆதரித்தார்?

a)

பயம் கொடுக்கும் சமயம்

b)

சடங்குகள் நிறைந்த சமயம்

c)

உண்மை, நீதி கொண்ட சமயம்

d)

தனியோருக்கான சமயம்

12.

பாவலர் ஐயா அவர்கள் தமது உலகியல் பார்வையை எவ்வாறு குறிப்பிடுவார்? எது தவறானது?

a)

யாதும் ஊரே யாவரும் கேளிர்

b)

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்…

c)

தாம் இன்புறுவது உலகம் இன்புற வேண்டும்

d)

மொழி இனம் சமயம்

13.

திருமாலனாரின் கூற்றின்படி சமயம் என்ன செய்யக் கூடாது?

a)

மனிதர்களை ஒன்றுபடுத்துதல்

b)

அறிவை வளர்த்தல்

c)

நலமுடன் வழிகாட்டுதல்

d)

மனிதர்களைத் தாழ்த்தல்

14.

பாவலர் அ.பு திருமாலனார் அவர்கள் திருக்குறளினை (a)   நூலாகப் கருதினார்.

15.

இயங்குதல் என்றால் என்ன?

a)

அறத்தோடும் மனிதநேயத்தோடும் செயல்படுவது

b)

மொழி இனம் சமயத்தை பின்பற்றுவது

c)

பாவலர் சொல்படி நடப்பது

d)

இயக்க நிகழ்வுக்கு துணைப்புரிவது

16.

அவரது எழுத்துக்களில் காணப்படும் முக்கியமான சிந்தனை என்ன?

a)

அவரது எழுத்துக்களில் முக்கியமான சிந்தனை "சாதி ஒழிப்பு" மற்றும் "மனித நேயம்" ஆகும். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை உயர்த்தும் வகையில் அவர் தனது இலக்கியத்தை பயன்படுத்தினார்

b)

அவரது எழுத்துக்களில் முக்கியமான சிந்தனை "மக்கள்" மற்றும் "அரசியல்" ஆகும். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை உயர்த்தும் வகையில் அவர் தனது இலக்கியத்தை பயன்படுத்தினார்.

17.

அவரது சமத்துவப்பணி கல்வி மற்றும் சமூக மாற்றத்தில் எப்படி தாக்கம் செலுத்தியது?

a)

அவரது எழுத்துகள் மற்றும் பேச்சுகள், பொதுமக்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தின. இவை சாதி அடிப்படையிலான வேறுபாடுகளை எதிர்க்கும் புதிய தலைமுறையை உருவாக்க உதவினார்

b)

அவர் எழுதிய பாடல்கள் தமிழர் வீரத்தை, அர்பணிப்பை வெளிப்படுத்துவதுடன், சமூகநலனையும் பிரதிபலிக்கின்றன.

18.

பாவலர் திருமாலனார் பெண்களின் உரிமைகள் குறித்து எதனை வலியுறுத்தினார்?

a)

அவர் பெண்கள் கல்வி, சம உரிமை மற்றும் சமூக தன்னாட்சியை வலியுறுத்தினார். பெண்களும் சமத்துவம் அடைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் கூறினார்.

b)

சமூக நீதியையும், உண்மை நெறியையும் வலியுறுத்தும் அவரது பார்வை, பெண் உரிமை விடுதலையிலும் நிலையான இடம் பெற்றுள்ளது.

19.

நாம் வாழ்க்கையில் கொள்கையை அமைத்துக்கொள்ள எந்த நூலை வழிகாட்டியாக கொள்ள வேண்டும்?

a)

திருக்குறள்

b)

தொல்காப்பியம்

c)

இனப்பற்று

d)

தமிழர் வாழ்வறத்தில் தாலி

20.

சமுதாயத்தை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

a)

தனிமாந்தனை சரி செய்ய வேண்டும்

b)

குடும்பத்தை சரி செய்ய வேண்டும்

c)

நண்பரை சரி செய்ய வேண்டும்

d)

உறவினரை சரி செய்ய வேண்டும்