wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Marabuthodar

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இன்றைய இளையர்கள் தங்கள் பெற்றோர்களையே _____ பேசுவதைக் காணும்பொழுத் நம் மனம் புண்படுகிறது.

a)

எடுத்தெறிந்து

b)

ஏட்டிக்குப் போட்டியாக

c)

தட்டிக் கொடுத்து

d)

இடித்துரைத்து

2.

மாணவர்களை அச்சுறுத்தி படிக்கச் செய்வதைவிட ______ படிக்கத் தூண்டினால் அதிகப் பலன் தரும்.

a)

தட்டிக் கேட்டு

b)

இனிக்கப் பேசி

c)

தட்டிக் கொடுத்து

d)

தட்டிப் பறித்து

3.

இளையர்கள் சிலர் தங்கள் கடமையை மறந்து கடைத்தொகுதிகளில் சுற்றித் திரிந்து _______ காலத்தை வீணாக்குவதை நம்மால் காண முடிகிறது.

a)

வெட்டிப்பேச்சில்

b)

பல்லவி பாடுவதில்

c)

கொட்டமடிப்பதில்

d)

இனிக்கப் பேசுவதில்

4.

உலக இலக்கியங்களுள் திருக்குறள் ___ நூலாக விளங்குகிறது என்று கூறினால் மிகையாகாது.

a)

ஒப்பு உயர்வற்ற

b)

உயர்வு தாழ்வற்ற

c)

ஈடு இணையாக

d)

சீரும் சிறப்புமிக்க

5.

தனக்குக் கொடுக்கப்படும் பணி எத்தகையதாக இருப்பினும் அதனை _____ செய்து முடிக்கும் திறன் பெற்றவள் கோமதி.

a)

ஓடியாடிப் பார்த்து

b)

தலைமேற்கொண்டு

c)

ஒரு காலில் நின்று

d)

தப்பும் தவறுமாக

6.

________________ செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

a)

சாடைமாடையாய்

b)

ஒப்பும் உயர்வற்ற

c)

தப்பும் தவறுமாக

d)

அருமை பெருமையான

7.

குழந்தைகள் ___உள்ளவர்கள் என்று கவிஞர்கள் பலர் பாராட்டிப் பாடியுள்ளனர்.

a)

வெள்ளை மனம்

b)

கள்ளங்கபடு

c)

ஈவிரக்கம்

8.

அண்மையில் எகிப்து நாட்டில் அரசியல் கலவரங்கள் ஏற்பட்டபோது சமூக விரோதிகள் மக்களின் உடைமைகளை _______.

a)

சூறையாடினர்

b)

சூளுரைத்தனர்

9.

உழைக்காமல் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் மேலதிகாரியைச் சிலர் ___ மிக விரைவில் பதவி உயர்வு பெற்றுவிடுகிறார்கள்.

a)

காட்டிக் கொடுத்து

b)

காக்கை பிடித்து

10.

நடிப்பாற்றலில் சிறந்து விளங்கிய ரமணன் தான் ஒரு திடைப்பட நடிகனாக வேண்டுமென்ற கனவு ____ மனமுடைந்து போனான்.

a)

கரையேறாததால்

b)

கை கூடாததால்

11.

நாம் ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்னர் அதனால் விளையக்கூடிய _____ ஆராய வேண்டும்.

a)

அருமை பெருமைகளை

b)

நன்மை தீமைகளை

c)

இன்ப துன்பத்தை

12.

தங்களுக்கு நேரத்தோடு சம்பளம் கொடுக்கப்படாததால் கோபம் அடைந்த தொழிலாளர்கள் தங்கள் முதலாளியை _____.

a)

கை கழுவினர்

b)

தட்டிக் கேட்டனர்

c)

கை நனைத்தனர்

d)

தட்டிப் பறித்தனர்

13.

மாறன் தன் மேலதிகாரியிடமிருந்து நற்பெயரைப் பெறுவதற்காக அவர் கூறியதற்கெல்லாம் ___ மற்ற ஊழியர்களின் வெறுப்புக்கு ஆளானான்

a)

செவிசாய்த்ததால்

b)

ஒத்துப் படியதால்

14.

தனக்குக் கொடுக்கப்படும் பணி சவால்மிக்கதாக இருந்தாலும் அதனை ______ திறம்படச் செய்யும் பாலனைப் பலரும் விரும்பினர்.

a)

கண்மூடித்தனமாக

b)

ஒளிவுமறைவின்றி

c)

தலைமேற்கொண்டு

15.

தென்கிழக்காசிய நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று உலக வரலாற்றில் ____ இராஜேந்திர சோழனின் வீரத்தைத் தமிழர்கள் போற்றுகின்றனர்.

a)

பெயர் பொறித்த

b)

ஒப்பு உயர்வற்ற

c)

சீரும் சிறப்புமிக்க

16.

மாதவன் தாம் புதிதாகத் தொடங்கிய நிறுவனத்தைச் சரியாக நிர்வகிகாததால் சில மாதங்களிலேயே அந்நிறுவனத்தின் நிதி நிலை ________

a)

கையைக் கடித்தது

b)

இழுத்தடித்தது

17.

அணுவாயுதங்களைத் தாயாரிப்பதிலிருந்து ___ மறுக்கும் நாட்டிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்று உலகத் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

a)

பின்வாங்க

b)

ஒத்துப்பாட

18.

தான் விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண்பதற்காகக் கோமதி தனது வீட்டுப்பாடங்களை ___ செய்து முடித்தாள்.

a)

அறக்கப் பறக்க

b)

பம்பரமாகச் சுழன்று

19.

திரு முகுந்தன் பணத்தை ___ தம் பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடினர்.

a)

அள்ளிக்கொட்டி

b)

ஈடுகட்டி

c)

அள்ளியிறைத்து

20.

தம்மை நாடி வந்த மக்களுக்குப் பல _______ செய்து வந்த பாண்டிய மன்னனை அனைவரும் போற்றினர்.

a)

தான தர்மங்கள்

b)

நகை நட்டுகள்