wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி -ஆத்திசூடி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.
கீழ்க்கண்ட உரையாடலுக்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
 
பெரியவர் : யாழினி, உன் கோபத்தைத் தணித்து கொள். __________ என்பதைப் படித்திருக்கிறாய் அல்லவா?
யாழினி : சரி ஐயா, இனிமேல் கோபப்படமாட்டேன்.  
a)
ஔவியம் பேசேல்
b)
ஆறுவது சினம்
c)
ஈவது விலக்கேல்
d)
ஐய மிட்டுண்
2.
_____________ எனும் செய்யுளின்படி நாம் எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும்.
a)
ஈவது விலக்கேல்
b)
உடையது விளம்பேல்
c)
எண்ணெழுத் திகழேல்
d)
ஆறுவது சினம்
3.
கீழ்க்கண்ட குறளுக்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்   நிற்க அதற்கு தக
a)
ஒப்புர வொழுகு
b)
ஏற்பது இகழ்ச்சி
c)
எண்ணெழுத் திகழேல்
d)
அறம் செய்ய விரும்பு
4.
எந்த வேலையும் செய்யாமல் பிறர் கொடுப்பதைக் கொண்டு வாழும் amalanai, அனைவரும் இழிவாகப் பார்த்தனர்.
a)
ஏற்பது இகழ்ச்சி
b)
ஆறுவது சினம்
c)
ஒப்புர வொழுகு
d)
ஔவியம் பேசேல்
5.
வசதியில் குறைத்திருந்தாலும் தன்னால் பிறருக்குச் செய்ய முடிந்த உதவியைச் செய்ய என்றுமே நகுலன் தயங்கவில்லை. விளக்கத்திற்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
a)
ஒப்புர வொழுகு
b)
ஐய மிட்டுண்
c)
ஊக்கமது கைவிடேல்
d)
அறம் செய்ய விரும்பு
6.
மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரு கண்கள் போன்று மிக முக்கியம். கற்க வேண்டிய காலத்தில் அலட்சியம் செய்த பிறகு வருந்தக் கூடாது.
a)
ஒப்புர வொழுகு
b)
எண்ணெழுத் திகழேல்
c)
ஊக்கமது கைவிடேல்
d)
அறம் செய்ய விரும்பு
7.
எடுத்தற்கெல்லாம் ஆத்திரம் கொள்வதை வழக்கமாகக் கொண்ட எழிலன் தற்போது மிகவும் அவதிப்படுகிறான்.
a)
ஈவது விலக்கேல்
b)
இயல்வது கரவேல்
c)
ஆறுவது சினம்
d)
ஒப்புர வொழுகு
8.
ஆத்திசூடியை இயற்றியவர் ________________________.
a)
ஔவையார்   
b)
திருவள்ளுவர்
c)
பாரதிதாசன்
d)
பாரதியார்
9.
தருமத்தையும் முயற்சியையும் வலியுறுத்தும் ஆத்திசூடிகளைத் தெரிவு செய்க.
I. ஊக்கமது கைவிடேல்
II. அறம் செய்ய விரும்பு
III. உடையது விளம்பேல்
IV. ஆறுவது சினம்
a)
 I , II
b)
I , III
c)
II , IV
d)
I , IV
10.
கீழ்காணும் கூற்றுககு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.  

   ஒளவியம் பேசேல்
 
a)
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக் கூடாது.
b)
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப்பேசக்கூடாது.
c)
நம்மிடம் உள்ள செல்வம் அல்லது கல்வியைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகப்    பேசக்கூடாது.
d)
ஊழைபின்றி பிறர் கொடுப்பதை ஏற்றுக் கொள்வது எழிவான செயலாகும்
11.
கீழ்காணும் கூற்றுககு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.  
 
வசந்தன், எப்போதும் இப்படித்தான் பிறரிடம் தன்னைப்பற்றி தற்பெருமையாகப் பேசி கொள்வான்
a)
உடையது விளம்பேல்
b)
எண்ணெழுத் திகழேல்
c)
ஊக்கமது கைவிடேல்
d)
ஆறுவது சினம்
12.
கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
பசி என்று வந்தவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல், மலர்ந்த முகத்துடன் உபசரிப்பாள் காந்திமதி. 
a)
ஒப்புர வொழுகு
b)
ஐய மிட்டுண்
c)
ஊக்கமது கைவிடேல்
d)
ஒளவியம் பேசேல்
13.
சூழலுக்கு ஏற்ற ஆத்திசூடி எது ?

நான் பெரிய பணக்காரன் என்பது உங்களுக்கு தெரியுமா?
a)
ஏற்பது இகழ்ச்சி
b)
இயல்வது கரவேல்
c)
உடையது விளம்பேல்
d)
ஈவது விலக்கேல்
14.
ஒளவையார் இயற்றிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
I. இளைத்தல் இகழ்ச்சி
II. அறம் செய்ய விரும்பு
III. ஐய மிட்டுண்
a)
I , III
b)
I , III , IV
c)
I , II , IV
d)
II , III 
15.
இப்படம் உணர்த்தும் ஆத்திசூடி எது?
இவர்கள் மலாயாப் பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெற்றனர்.
a)
ஏற்பது இகழ்ச்சி
b)
ஐய மிட்டுண்
c)
ஒளவியம் பேசேல்
d)
ஓதுவ தொழியேல்