wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

KUIZ TATA BAHASA BAHASA TAMIL oleh MUNIANDY RAJ

Total questions: 25

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் தவறான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. அருணன் பழத்தைப் பறித்தான்.

b)

B. சிறுவர்கள் திடலில் விளையாடுகிறான்.

c)

C. மாலதி இறைவனை வணங்குகிறாள்.

d)

D. பெரியவர் நாளிதழ் வாசிக்கிறார்.

2.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. தயவு செய்து அமைதியாக இருங்கள்.

b)

B. புத்தகத்தைக் கிழிக்காதே!

c)

C, தமிழ்மொழி செம்மொழிகளில் ஒன்றாகும்.

d)

D. நீங்கள் பல்லாண்டு நீடூழி வாழ வேண்டும்.

3.

மூனுறாம் வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. சுகுமாறன் பள்ளியிலிருந்து தாமதமாக வீடு திரும்பினான்.

b)

B. பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற அமுதனை அனைவரும் பாராட்டினர்.

c)

C. வேந்தன் தன் அம்மாவோடு கடைக்குச் சென்றான்.

d)

D. மாணவர்கள் வகுப்பறையில் கவனமாக பாடம் படித்தனர்.

4.

கீழ்க்காணும் புணர்ச்சி எவ்வகையைச் சேர்ந்தது எனக் குறிப்பிடுக.


மரம் + வேர் = மரவேர்

a)

A. கெடுதல்

b)

B. தோன்றல்

c)

C. திரிதல்

5.

கீழ்க்காணும் நேர்க்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற அயற்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.


''முகுந்தா, நேற்று நான் என் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன்,'' என நகுலன் கூறினான்.

a)

A. நகுலன் நேற்று தன் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாக முகுந்தனிடம் கூறினான்.

b)

B. நகுலன் முன்தினம் நான் என் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாக முகுந்தனிடம் கூறினான்.

c)

C. நகுலன் முன்தினம் தான் தன் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாக நகுலனிடம் கூறினான்.

d)

D. நகுலன் முன்தினம் தான் தன் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாக முகுந்தனிடம் கூறினான்.

6.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் வினையெச்சத்தைக் கொண்டிராத வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. நந்தன் காணாமல் போன தன் புத்தகத்தைத் தேடி அலைந்தான்.

b)

B. பேச்சாளர் ஆற்றிய உரையை அனைவரும் மெய்மறந்து கேட்டனர்.

c)

C. விமலா மிருகங்களின் படங்களை வெட்டி ஒட்டி திரட்டேடு செய்தாள்.

d)

D. இளஞ்செழியன் சிறுகதையை எழுதி முடித்தார்.

7.

சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடர்களைத் தெரிவு செய்க.

a)

A. கொண்டுச் சென்றாள்

b)

B. தொட்டுப் பார்த்தாள்

c)

C. செய்துப் பார்த்தார்

d)

D. வந்துப் பேசினார்

8.

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளுக்கு ஏற்ற வினைமுற்றைத் தெரிவு செய்க.


பலர்பால்

படர்க்கை

பன்மை

உயர்திணை

இறந்த காலம்

a)

A. பறந்தன

b)

B. எழுதினர்

c)

C. செல்வர்

d)

D. படித்தாள்

9.

பிழையான பெயர்ச்சொல் இணையைத் தெரிவு செய்க.

a)

A. கூரை - சினைப்பெயர்

b)

B. அணிச்சல் - பொருட்பெயர்

c)

C. வரைதல் - தொழிற்பெயர்

d)

D. கண் - சினைப்பெயர்

10.

ஆறாம் வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. பசுவினின்று சத்துள்ள பால் கிடைக்கிறது.

b)

B. ஆசிரியரைப் பார்த்த மாறன் வணக்கம் கூறினான்.

c)

C. பிறந்த நாளன்று தமிழினிக்கு நிறைய பரிசுகள் கிடைத்தன.

d)

D. குமரனது கல்வி முன்னேற்றத்தினைக் கண்டு பெற்றோர் உள்ளம் பூரித்தனர்.

11.

கீழ்க்காணும் வலிமிகும் விதியைத் தெரிவு செய்க.


செல்வதாக + சொன்னார் = செல்வதாகச்

சொன்னார்

a)

A. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தில் வலிமிகும்

b)

B. முற்றியலுகரச் சொறகளுக்குப் பின் வலிமிகும்

c)

C. ஆய், போய், என, ஆக என்று முடியும் வினையெச்சங்களின் பின் வலிமிகும்.

d)

D. அகர, இகர ஈற்று வினைசெய்யங்களின் பின் வலிமிகும்.

12.

கீழ்க்காணும் அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.


தனக்குக் கவிதை எழுதுவதில் மிகவும் விருப்பம் என குழலி கனிமொழியிடம் கூறினாள்.

a)

A. "கனிமொழி, தனக்குக் கவிதை எழுத மிகவும் விருப்பம்," என்று குழலி கூறினாள்.

b)

B. "கனிமொழி, நான் கவிதை எழுத மிகவும் விரும்புகிறேன்," என்றாள குழலி.

c)

C. "கனிமொழி, எனக்குக் கவிதை எழுதுவதில் மிகவும் விருப்பம்," என்றாள் குழலி.

13.

செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. சோம்பித் திரிதல் நன்மை பயக்காது.

b)

B. பிரதமர் எப்போது மக்களைச் சந்திப்பார் ?

c)

C. புல் தரை மீது நடக்காதீர்!

d)

D. யானையின் தந்தங்கள் அதிக மதிப்புடையவை.

14.

செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. பல அரிய வாழ்க்கை தத்துவங்கள் அடங்கிய திருக்குறள் திருவள்ளுவரால் வழங்கப்பட்டுள்ளது.

b)

B. பூங்கோதை சிறப்பாகப் பாடினாள்.

c)

C. பாரதியார் கருத்துள்ள பாடல்களைத் தந்துள்ளார்.

15.

உயிர்மெய் நெடில் எடுத்துக்காட்டினைத் தெரிவு செய்க.

a)

A. த் + இ = தி

b)

B. ட் + ஏ = டே

c)

C. ள் + உ = ளௌ

d)

D. ப் + ஒ = பொ

16.

கோடிட்ட சொல்லுக்கான விடை காட்டும் பால்வகையைத் தெரிவு செய்க.


_______________ பள்ளிக்குச் செல்கின்றனர்.

a)

A. ஆண்பால்

b)

B. பெண்பால்

c)

C. பலர்பால்

d)

D. பலவின்பால்

17.

கொடுக்கப்பட்டுள்ள சொல் காட்டும் காலத்தைத் தெரிவு செய்க.


வனைந்தார்

a)

A. இறந்த காலம்

b)

B. நிகழ்காலம்

c)

C. எதிர்காலம்

18.

கீழ்க்காணும் வாக்கியத்தில் மூன்றாம் வேற்றுமை உருபு ஏற்று வந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.


இளஞ்செழியன் தன் தம்பியோடு கடைக்குச் சென்று வந்தான்.

a)

A. இளஞ்செழியன்

b)

B. தம்பியோடு

c)

C. கடைக்குச்

19.

கீழ்க்காணும் வாக்க்கியத்திற்கு ஏற்ற சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.


மதிவாணன் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. _____________________ அவனால் நடக்க முடியாமல் போய்விட்டது.

a)

A. ஆனால்

b)

B. அதற்காக

c)

C.ஆகையால்

d)

D. ஏனெனில்

20.

சேர்த்தெழுதுக.


பூ + சோலை =

a)

A. பூச்சோலை

b)

B. பூசோலை

c)

C. பூஞ்சோலை

d)

D. பூஞ்சாலை

21.

கொடுக்கப்பட்டுள்ள அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.


அப்பா பாலாவிடம் விரைவாக மகிழுந்தைக் கழுவும்படிக் கூறினார்.

a)

A. பாலா, ''அப்பா மகிழுந்தை விரைவாகக் கழுவு,'' எனக் கூறினார்.

b)

B. ''விரைவாகக் கழுவு,'' என பாலா அப்பாவிடம் கூறினார்.

c)

C. ''பாலா, விரைவாக மகிழுந்தைக் கழுவு,'' என அப்பா கூறினார்.

d)

D. ''விரைவாக மகிழுந்தைக் கழுவுங்கள் அப்பா,'' என பாலா கூறினான்.

22.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் பெயரெச்ச வகையைத் தெரிவு செய்க.


I. தெளிந்த நீர்

II. அலைந்து திரிந்த

III. நனைந்த ஆடை

IV. வெட்டி ஒட்டிய

a)

A. I, II

b)

B. II, III

c)

C. I, III

d)

D. I, IV

23.

இவற்றுள் எஃது ஆய்த எழுத்து ?

a)

A. ஞ்

b)

B. ட்

c)

C. ஃ

d)

D. ங்

24.

படத்திற்கேற்ற சரியான பெண்பாலைத் தெரிவு செய்க.

a)

A. உழத்தி

b)

B. குயத்தி

c)

C. மனைவி

d)

D. செம்படத்தி

25.

உலகத்திலேயே மிக ______________ முருகன் சிலை பத்துமலையில் அமைந்துள்ளது. இச்சிலை வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை ________________________ கவர்கிறது.

a)

A. பெரிய, அழகாகக்

b)

B. உயரமான, வெகுவாகக்

c)

C. சிறப்பான, அருமையாகக்