NEW
Font size
Worksheetsஇரட்டைக் கிளவி (ஆசிரியர் மோகன்)
Total questions: 15
Worksheet time: 8mins
திருமண மண்டபத்தில் _________வென ஓடி, திருமண வேலைகளைக் கவனித்தார் அமுதன்.
மளமள
குடுகுடு
தரதர
திருடும்போது கையும் களவுமாகப் பிடிபட்ட ஆடவர் ____________வென விழித்தான்.
கலகல
சிடுசிடு
திருதிரு
பிடிபட்ட அத்திருடனை காவல் அதிகாரி ______________வெனக் காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றார்.
சரசர
தரதர
குடுகுடு
இளைய கலைவாணரின் நகைச்சுவையைக் கேட்டு வேலன் __________வெனச் சிரித்தான்.
கலகல
மடமட
கடுகடு
டென் வீட்டின் பின்புறம் இருக்கும் ஆற்றில் நீர் _____________வென ஓடியது.
சரசர
சலசல
தகதக
மாலா தன் வீட்டு வேலைகளை __________வென முடித்துக் கொண்டு தொலைக்காட்சியின் முன் அமர்ந்தாள்.
கிலுகிலு
மினுமினு
மளமள
காலைக் கதிரவனின் ஒளிபட்டு, கடல்நீர் _____________வெனக் காட்சியளித்தது.
தகதக
மடமட
மினுமினு
இராமன் மீது கோபம் கொண்ட இராவணன், தன் பற்களை ___________வெனக் கடித்துக் கொண்டே போருக்குத் தயாரானான்.
சரசர
நறநற
சிடுசிடு
வாசு கோபத்தின் காரணமாகக் காலையிலிருந்து அனைவரிடமும் ______________வெனப் பேசினார்.
சிடுசிடு
கலகல
கடுகடு
தாயார் வாங்கி வந்த வெள்ளிப்பாத்திரங்கள் __________வென மின்னின.
மினுமினு
பளபள
பளீர்பளீர்
காய்ந்த இலைகளின் ஊடே பாம்பு ஊர்ந்து செல்லும் போது ___________வென்று ஓசை கேட்டது.
நறநற
மடமட
சரசர
தன் அறைக்கதவை யாரோ _________வென்று தட்டும் ஓசை கேட்டு மலர்விழி திடுக்கிட்டாள்.
மடமட
மளமள
தடதட
அக்கட்டடம் சில நொடிகளுள் __________வென இடிந்து விழுந்தது.
தடதட
மடமட
சிடுசிடு
எதிர்த்துப் பேசிய மகனைப் ___________ என்று அறைந்தார் தந்தை.
பளீர்பளீர்
பளார்பளார்
கடுகடு
இரவு வேளையில் வானத்தில் விண்மீன்கள் __________த்துக் கொண்டிருந்தன.
தகதக
பளபள
மினுமினு
