NEW
Font size
Worksheetsஒலி வேறுபாடு_2
Total questions: 20
Worksheet time: 7mins
____________ கருத்துக் காணப்பட்டது. அதனால், நான் என் குடையை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றேன்.
வாணம்
வானம்
திருமதி சாந்தி கடையிலிருந்து அப்பளங்கள் வாங்கி வந்தார். அவர் அப்பளங்களைப் ____________ உணவுடன் பரிமாறினார்.
பொரித்து
பொறித்து
அதிர்ஷ்டக் குலுக்கில் முத்துவுக்கு முதல் பரிசு என்று அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்டதும் அவன் ஒரு ____________ திகைத்துப்போய் நின்றான்.
கணம்
கனம்
அன்று எனக்குக் கடுமையான காய்ச்சல். என் நண்பர்கள் என் மீது காட்டிய ____________ கண்டு என் மனம் நெகிழ்ந்தது.
அக்கரையை
அக்கறையை
தேன்மொழி கடிதத்தை எழுதி முடித்தாள். அவள் அதை ஓர் ____________ வைத்து ஒட்டினாள்.
உரையில்
உறையில்
பலதரப்பட்ட நூல்களை வாசிப்பது நல்ல பழக்கமாகும். இப்பழக்கம் பல தகவல்களை நாம் ____________ வைத்திருக்க உதவும்.
அறிந்து
அரிந்து
மாணவர்கள் சிலர் பள்ளி முடிந்து சாலையைக் கடந்துகொண்டிருந்தார்கள். அதைக் கண்ட திரு ராமு தம் வாகனத்தின் வேகத்தைக் ____________ ஓட்டினார்.
குரைத்து
குறைத்து
____________ முடிந்து திரு இளங்கோ பசியோடு வீடு திரும்பினார். அதை உணர்ந்த அவருடைய மனைவி அவருக்கு உடனே உணவு பரிமாறினார்.
வேலை
வேளை
மீனா ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்தாள். பள்ளி முதல்வர் அவளுக்கு வாழ்த்துக் கூறித் தங்கப்பதக்கம் ஒன்றையும் ____________.
அழித்தார்
அளித்தார்
மரத்தில் மாம்பழங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. என் மாமா மரத்தில் ____________ அவற்றைப் பறித்தார்.
ஏரி
ஏறி
நாய் நன்றியுள்ள பிராணி. அது தன்னை வளர்ப்பவரைக் கண்டதும் மகிழ்ச்சியோடு ____________ ஆட்டும்.
வாலை
வாளை
என் அண்ணன் கடந்த இருபது ஆண்டுகளாக ஆசிரியராகப் ____________ புரிகிறார். அண்மையில், அவருடைய சிறப்பான சேவையைப் பாராட்டி அவருக்கு விருது வழங்கப்பட்டது.
பணி
பனி
குணா தன் நண்பனின் வீட்டுக்குச் செல்லத் தீர்மானித்தான். ஆனால், அவன் அங்கே செல்வதற்கு ____________ தெரியாமல் தடுமாறினான்.
வழி
வலி
நான் ஒவ்வொரு நாளும் _______________ மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். அதனால், நான் உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறேன்.
அறை
அரை
எங்கள் பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில் எங்கள் ____________ தலைமையாசிரியர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
முன்னால்
முன்னாள்
மைதிலி மேடையில் நடனம் ஆடி முடித்ததும் அரங்கில் பலத்த கரவொலி எழுந்தது. அந்த ____________ அவள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.
கனம்
கணம்
“அறை ஒரே இருட்டாக இருக்கிறது. சன்னல் ____________ சற்று விலக்கினால் வெளிச்சமாக இருக்கும்,”என்று என் அன்னை கூறினார்.
திரையை
திறையை
“ஆசிரியர் கல்விச் சுற்றுலாவைப் பற்றிக் கூறியதும் அதைப் பற்றிய ____________
அலைகளில் மூழ்கிவிட்டாயா ரமேஷ்? நான் அழைத்ததைக்கூட நீ கவனிக்கவில்லையே!” என்று ரகு கேட்டான்.
என்ன
எண்ண
கல்பனா நடனப்போட்டியில் முதல் பரிசு பெற்றாள். அதனால், அவள் ____________ மகிழ்ச்சி அடைந்தாள்.
பெறும்
பெரும்
திருவள்ளூவர் மக்களுக்குப் பல அறக்கருத்துகளைக் கூறியுள்ளார். அவருடைய ____________ படித்து நாம் அனைவரும் பயன் பெற வேண்டும்.
குறளை
குரலை
