wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

காற்பந்தாட்டம் முடிந்தவுடன் ரசிகர்கள் அரங்கத்தை விட்டு ............... வென வெளியேறினர்.

a)

சட சட

b)

திமு திமு

c)

விறு விறு

d)

பர பர

2.

மிகச் சரியான இணையைத் தெரிவு செய்க

a)

நாணிக்கோணி - மிகவும் அன்புடன்

b)

ஆடிப்பாடி - மகிழ்ச்சியின்மை

c)

வாடிவதங்கி - உலர்ந்து

d)

உயர்வுதாழ்வு - உயர்ந்த நிலமும் தாழ்ந்த நிலமும்

3.

முறையான உணவோடு சரியான உடற்பயிற்சியும் இருந்தால், நாம் .................................... இல்லாமல் வாழலாம்.

a)

சட்டத்திட்டம்

b)

நோய்நொடி

c)

கள்ளங்கபடு

d)

அகமும் புறமும்

4.

நம் வீட்டின் ............................... என்றென்றும் தூய்மையாக இருப்பதை நாம் எப்போதும் உறுதி செய்து கொள்ள வேண்டும்

a)

தங்கு தடை

b)

கள்ளங்கபடு

c)

உள்ளும் புறமும்

d)

உயர்வு தாழ்வு

5.

தன்னைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையின் முன் கலா ....................... வந்து நின்றாள்.

a)

தங்கு தடை

b)

வாடி வதங்கி

c)

ஆடிப்பாடி

d)

நாணிக்கோணி

6.

எஸ்.பி.எம். தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற யமுனாவுக்கு, காரோட்டும் தேர்விலும் தேர்வடைந்தது .................................. இருந்தது.

a)

நுனிப்புல் மேய்ந்தாற்போல

b)

இலவு காத்த கிளி போல

c)

பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல

d)

கும்ம்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

7.

தன் குறையையும் இயலாமையையும் சொல்லத் துணிவு இல்லாமல், அதற்காக மற்றவரையும் மற்றவற்றையும் குறை கூறுவர்.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

c)

தன் கையே தனக்கு உதவி

d)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

8.

படிவம் மூன்றோடு தன் கல்வியைப் பாதியோடு விட்ட கபிலனின் கருத்தை யாரும் கேட்பதில்லை

a)

தோள் கொடுத்தல்

b)

அரைப்படிப்பு

c)

ஏட்டிக்குப்போட்டி

d)

வாழையடி வாழை

9.

இடித்துரைத்தல் என்றால்.............

a)

உறுதியாக இருத்தல்

b)

மதிப்புத் தருதல்

c)

நிறைவேறாத எண்ணம்

d)

கண்டித்துக் கூறுதல்.

10.

தன்னைத்தான் ............................. சினம்காக்கும் காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்

a)

பார்க்கின்

b)

தாக்கின்

c)

காக்கின்

d)

நோக்கின்