wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மொழியணிகள் (படிவம் 1)

Total questions: 20

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

ஆசிரியர் கற்பித்த செய்யுளை மாணவன் மனனம் செய்து __________வென ஒப்புவித்தான்.

a)

கிடுகிடு

b)

வெடவெட

c)

நசநச

d)

கடகட

2.

நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் ________வென ஆட்டங்கண்டன.

a)

வெடவெட

b)

கிடுகிடு

c)

நசநச

d)

கடகட

3.

கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு வியர்வை வெளியாகி என் உடல் ___________வென்றிருந்தது.

a)

நசநச

b)

கடகட

c)

வெடவெட

d)

கிடுகிடு

4.

அடைமழை பொழிந்தாலும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் எவ்வித ___________இன்றி சிறப்பாக நடைப்பெற்றது.

a)

அகமும் புறமும்

b)

உயர்வு தாழ்வு

c)

கள்ளங் கபடு

d)

தங்கு தடை

5.

செல்வந்தரான இலக்கியன் _____________ பாராமல் ஏழை எளியோருக்குப் பல உதவிகளைச் செய்தார்.

a)

நோய் நொடி

b)

அகமும் புறமும்

c)

உயர்வு தாழ்வு

d)

கள்ளங் கபடு

6.

சரியான உணவும் உடற்பயிற்சியும் ஒரு மனிதனை _____________இன்றி நெடு நாள் வாழ வழி வகுக்கும்.

a)

அகமும் புறமும்

b)

உயர்வு தாழ்வு

c)

நோய் நொடி

d)

கள்ளங் கபடு

7.

கோமதியும் வாணியும் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை இணைப்பிரியாமல் _______________ பழகி வருகின்றனர்.

a)

தாயைக் கண்ட சேயைப் போல

b)

பசுமரத்தாணி போல

c)

மணியும் ஒலியும் போல

d)

இலைமறை காய் போல

8.

பெற்றோர் தம் பிள்ளைகளுக்குச் சிறு வயது முதல் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்தால் அப்பழக்க வழக்கங்கள் நாளடைவில் அவர்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும்.

a)

இலைமறை காய் போல

b)

மணியும் ஒலியும் போல

c)

பசுமரத்தாணி போல

d)

தாயைக் கண்ட சேயைப் போல

9.

கீழ்க்காணும் உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

a)

அதிக இனிப்புச் சுவை

b)

பழமும் பாலும் உண்ணல்

c)

இன்பத்துக்கு மேல் இன்பம்

d)

துன்பத்துக்கு மேல் இன்பம்

10.

அக்கோயில் திருவிழாவில் செங்குட்டவன் குடும்பத்திற்குத்தான் ___________________ பரிவட்டம் கட்டி மரியாதைச் செய்வது வழக்கம்.

a)

ஏட்டிக்குப் போட்டி

b)

வாழையடி வாழை

c)

வெட்டிப் பேச்சு

d)

தோள் கொடுத்தல்

11.

முத்து எப்பொழுதும் தன் தம்பியுடன் விதண்டாவாதம் செய்வதே வேலையாகிவிட்டது.

a)

வெட்டிப் பேச்சு

b)

ஏட்டிக்குப் போட்டி

c)

அரைப்படிப்பு

d)

வாழையடி வாழை

12.

கொடுக்கப்பட்டுள்ள மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

a)

வாழையடி வாழை - விதண்டாவாதம்

b)

அரைப்படிப்பு - நிரம்பாக் கல்வி

c)

தோள் கொடுத்தல் - வீண் பேச்சு

d)

வெட்டிப் பேச்சு - முழுமையற்ற படிப்பு

13.

__________________ மாதவி பிறருடைய உதவியை எதிபார்க்காமல் தானே சுயமாகத் தனது வேலைகளைச் செய்து முடித்து விடுவாள்.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

d)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

14.

_________________என்பதற்கொப்ப சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு வாசன் சிறு தொழில் ஒன்றினைத் தொடங்கினான்.

a)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

b)

தன் கையே தனக்கு உதவி

c)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

d)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

15.

படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

தன் கையே தனக்கு உதவி

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

d)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

16.

கீழ்க்காணும் திருக்குறளை நிறைவு செய்க

__________________________________________________

இழுக்கா இயன்றது அறம்

a)

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

b)

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

c)

அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொல் நான்கும்

17.

திருக்குறளுக்குப் பொருத்தமான கருத்தைத் தெரிவு செய்க

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்

a)

ஒருவரின் பண்புநலன்களை ஆராய்ந்து எத்தகையோர் எனத் தீர்மானம் செய்யலாம்

b)

ஒருவரின் பண்புநலன்களை ஆராய்ந்து எத்தகையோர் என முடிவு செய்யலாம்

c)

ஒருவரின் குணநலன்களை ஆராய்ந்து எத்தகையோர் எனத் தீர்மானம் செய்யலாம்

d)

ஒருவரின் குற்றத்தை ஆராய்ந்து எத்தகையோர் எனத் தீர்மானம் செய்யலாம்

18.

திருக்குறளில் விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

___________________எனக்கேட்ட தாய்

a)

ஆன்றோன்

b)

ஈன்றோன்

c)

சான்றோன்

d)

கேட்டோன்

19.

கீழ்க்காணும் செய்யுளில் விடுப்பட்ட அடியைத் தெரிவு செய்க

விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மானனிச் சோதியன்

_____________________________________________

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

a)

உறவு கலவாமை வேண்டும்

b)

பெரியவர் கேண்மை பிறைபோல் நாளும்

c)

சென்ற இடமெல்லாம் சிறப்பு

d)

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

20.

கீழ்க்காணும் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

a)

சிறப்புற

b)

பிழையற

c)

உயர

d)

சிறப்பில்லை