wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Bahasa Tamil Year 5

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

சாலையில் அடிப்பட்டுக் கிடந்த நாயைச் சீலன்____________ என்று இழுத்துச் சென்று சாலையின் ஓரத்தில் போட்டான்

a)

தரதர

b)

சிடுசிடு

c)

மினுமினு

2.

______________ என்று கிலு கிலுப்பையிலிருந்து வந்த ஓசையைக் கேட்டு அழுத குழந்தை சிரித்தது

a)

கிலுகிலு

b)

சிடுசிடு

c)

தரதர

3.

____________ என்று வாடிக்கையாளர்களிடம் பேசிய பணிப் பெண்ணை முதலாளி வேலை நீக்கம் செய்தார்

a)

கடுகடு

b)

சிடுசிடு

c)

கிலுகிலு

4.

யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 8 'ஏ' பெற்றதற்காக அம்மா அக்காவுக்கு வாங்கித் தந்த தங்கச் சங்கிலி ____________ த்தது

a)

தகதக

b)

மினுமினு

c)

கிலுகிலு

5.

நள்ளிரவில் தன் அறையின் கதவை யாரோ ____________ என்று தட்டும் ஓசைக் கேட்டுச் செல்வி திடுக்கிட்டாள்

a)

மினுமினு

b)

தடதட

c)

கிலுகிலு

6.

இளவரசன் விக்ரமன் முரட்டுக் குதிரையைச் சாட்டையால் ___________ என்று அடித்து அடக்கினான்

a)

பளீர் பளீர்

b)

சிடு சிடு

c)

பளார் பளார்

7.

__________________ என்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் அப்பாவைப் பார்க்க பயமாக இருந்தது.

a)

சிடுசிடு

b)

மினுமினு

c)

கடுகடு

8.

ஆசிரியர் பாடங்களை ________________ என செய்யச் சொல்கிறார்

a)

மளமள

b)

தரதர

c)

சிடுசிடு

9.

கையும் களவுமாய் பிடித்த திருடனை ஊர் மக்கள் ______________ என காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்

a)

மளமள

b)

தரதர

c)

தடதட

10.

_____________________ என மின்னிய வெள்ளிப் பாத்திரங்கள் கண்களைக் கூசச் செய்தன

a)

பளபள

b)

மினுமினு

c)

தகதக

11.

தண்டவாளத்தில் ரயில் ______________ என விரைவாக ஓடுகிறது

a)

தடதட

b)

மளமள

c)

குடுகுடு

12.

நீர்வீழ்ச்சியிலிருந்து நீர் ______________என ஓடியது

a)

குடுகுடு

b)

சலசல

c)

மளமள

13.

தமிழரசு ____________வென தன் பள்ளிப் பாடங்களைச் செய்து முடித்துவிட்டு காற்பந்து பயிற்சிக்குச் சென்றான்

a)

சலசல

b)

மளமள

c)

குடுகுடு

14.

இரவு வேளையில் வானத்தில் ______________ என்று மின்னிய விண்மீன்களைக் கண்டு என் தங்கை மகிழ்ச்சி அடந்தாள்

a)

தகதக

b)

பளபள

c)

மினுமினு

15.

தாயின் முகத்தைக் கண்ட குழந்தை ___________ சிரித்தது

a)

பளபள

b)

தகதக

c)

கலகல

16.

திரு.சுந்தரம் தம் வீட்டில் திருடிய திருடனைச் சாட்டையால் ___________ என அடித்தார்

a)

நறநற

b)

பளீர்பளீர்

c)

பளார்பளார்

17.

_________ வென்று அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென்று கீழே விழுந்தான்.

a)

குடுகுடு

b)

கடுகடு

c)

பளீர்பளீர்

18.

ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் தெரியாத வளவன் ___________ என்று விழித்தான்

a)

மளமள

b)

நறநற

c)

திருதிரு

19.

அம்மா கூறிய கதையைக் கேட்ட மாலா ____________ வென சிரித்தாள்

a)

கலகல

b)

மளமள

c)

நறநற

20.

வீட்டு வேலைகளை ___________வென செய்து முடித்த அன்பரசி தன் பள்ளிப் பாடங்களைச் செய்யத் தொடங்கினாள்

a)

நறநற

b)

மளமள

c)

கலகல