wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

11th Tamil Unit 1 Test

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் உலகம் என்பதும் நான் என்பதும் தனித்தனியாக பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்கின்றன- கூறியவர் யார்?

a)

எர்னஸ்ட் காசிரர்

b)

பாப்லோ

c)

விட்மன்

2.

எழுத்து மொழியைக் காட்டிலும் எந்த மொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறது

a)

வழக்கு மொழி

b)

பேச்சு மொழி

c)

வட்டார மொழி

3.

"புல்லின் இதழ்கள்-"எழுதியவர் யார்?

a)

பாப்லோ நெரூடா

b)

மல்லார்மே

c)

வால்ட் விட்மன்

4.

வால்ட் விட்மன் எந்நாட்டை சார்ந்தவர்?

a)

அமெரிக்கா

b)

பிரான்ஸ்

c)

இத்தாலி

5.

ஸ்டெஃபான் மல்லார்மே எந்நாட்டைச் சார்ந்தவர்?

a)

இங்கிலாந்து

b)

பிரான்ஸ்

c)

அமெரிக்கா

6.

பாப்லோ நெருடா எந்நாட்டைச் சார்ந்தவர்?

a)

தென் அமெரக்கா

b)

இலங்கை

c)

ரஷ்யா

7.

தமிழின் கவிதையியல்-நூலின் ஆசிரியர் யார்?

a)

அ. நல்லதம்பி

b)

கா. சிவத்தம்பி

c)

வெ. ஸ்ரீராம்

8.

பேச்சு மொழியும் கவிதை மொழியும் எழுதிய இந்திரனின் இயற்பெயர் என்ன?

a)

ராஜேந்திரன்

b)

செயராமன்

c)

சங்கர்

9.

பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்-என்னும் நூலுக்காக இந்திரன் பெற்ற விருதின் பெயர் என்ன?

a)

பத்மஸ்ரீ

b)

பத்மவிபூஷன்

c)

சாகித்ய அகடமி

10.

இந்திரன் சாகித்ய அகாடமி விருதினை பெற்ற ஆண்டு என்ன?

a)

2010

b)

2011

c)

2012

11.

யுகத்தின் பாடலை இயற்றியவர் யார்?

a)

ரசூல் கம்சதேவ்

b)

மணியன்

c)

சு. வில்வரத்தினம்

12.

ஓர் இனத்தின் மையப்புள்ளியாக விளங்குவது

a)

பண்பாடு

b)

கலை

c)

மொழி

13.

தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடு இல்லாத பறவை என்று கூறியவர் யார்?

a)

புதுமைப்பித்தன்

b)

வில்வரத்தினம்

c)

ரசூல் கம்சதேவ்

14.

மரபுசார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கவிதைகளை.............. என்பர்

a)

மரபுக்கவிதைகள்

b)

புதுக்கவிதைகள்

c)

வெண்பா

15.

பாயிரம்............ வகைப்படும்

a)

3

b)

2

c)

4

16.

மாநகர்-இலக்கணக்குறிப்பு தருக

a)

உரிச்சொற்றொடர்

b)

தொழிற்பெயர்

c)

வினைத்தொகை

17.

கோடல்-இலக்கணக்குறிப்பு தருக

a)

தொழிற்பெயர்

b)

பண்புத்தொகை

c)

வியங்கோள் வினைமுற்று

18.

பவணந்தி முனிவர் நன்னூல் இயற்ற காரணம் யார்?

a)

இராசராச சோழன்

b)

சீயகங்கன்

c)

நாயக்கன்

19.

ஆறாம் திணை எழுதியவர் யார்?

a)

அ. முத்துலிங்கம்

b)

ஜெயபாலன்

c)

புதுமைப்பித்தன்

20.

நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யாக இருந்தால் அது.......,.. எனப்படும்

a)

உயிரீறு

b)

மெய்யீறு

c)

மெய்ம்முதல்

21.

நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் மெய்யாக இருந்தாலும் அதன் இறுதியில் நிற்கும் வடிவம் உயிர் என்பதால் அது.............. எனப்படும்.

a)

உயிரீறு

b)

மெய்யீறு

c)

உயிர் முதல்

22.

வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அது............ எனப்படும்.

a)

குற்றியலுகரம்

b)

உயிர் முதல்

c)

மெய்ம்முதல்

23.

வருமொழியின் முதலெழுத்து உயிர் மெய்யாக இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் மெய் என்பதால் அது ............... எனப்படும்.

a)

மெய்ம்முதல்

b)

வினைத் தொடர்

c)

ஆய்தத் தொடர்

24.

திருப்பாவை இயற்றியவர் யார்?

a)

காரைக்கால் அம்மையார்

b)

ஆண்டாள்

c)

மங்கையர்க்கரசி

25.

மொழி முதல் எழுத்துக்கள் எத்தனை?

a)

22

b)

26

c)

30