NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3
Total questions: 13
Worksheet time: 7mins
நாம் சிறு வயதில் கற்கும் கல்வியே அழியாமல் மனதில் பதியும்.
இக்கூற்றுக்குக் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
விளையும் பயிர் முளையில் தெரியும்
அறியுடையாரை அரசனும் விரும்பும்
இளமை கல்வி சிலை மேல் எழுத்து
மாறன் : பாடகர் எஸ்.பி.பாலாவின் மகன் சரணும் சிறப்பாகப் பாடுகிறாரே?
நாதன் :.........................................................................................
இளங்கன்று பயம் அறியாது
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
உரையாடலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
தம்பி : அம்மா,தம்பி என் பென்சிலைத் திருடி விட்டான்
அம்மா :சிறுபிள்ளை தானே.பரவாயில்லை
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
தீட்டின மரத்திலே கூர்பார்ப்பதா?
பாலன் : ஏன் கவலையாக இருக்கிறாய்?
சிவா : என் மகனுக்கு உடல் நலமில்லை.அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை.அதான்..........
பாலன் : இந்தா,முதலில் இந்தப் பணத்தைப் பணத்தைப் பெற்றுக் கொள்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை
அறிவுடையாரை அரசனும் விரும்பும்
கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
ஊருடன் கூடி வாழ்
ஒற்றுமையே பலம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
தனிமரம் தோப்பாகாது
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
என்ற திருக்குறள் அடிகள் உணர்த்தும் பழமொழி யாது?
தனிமரம் தோப்பாகாது
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
ஒற்றுமையே பலம
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
சூழலுக்கு ஏற்ற பழமொழி யாது?
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த வாணி சிரமப்பட்டுப் பட்டபடிப்பை முடித்தாள்.பல இடங்களில் வேலை தேடி அலைந்தாள் கிடைக்கவில்லை. உறவினர் ஒருவர் தம் நிறுவனத்தில் வேலை கொடுப்பதாகக் கூறியதும் என்ன வேலை என்று கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டாள்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
வெள்ளம் வருமுன் அணை போடு
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை
கொடுக்கப்பட்ட பழமொழியில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
உப்புக் கொடுத்தவரை
உப்பு வாங்கியவரை
உணவு கொடுத்தவரை
உணவு வாங்கியவரை
கொடுக்கப்பட்ட பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது
அறிவாளியாக இருப்பவளே ஆற்றல்மிக்கவளாகத் திகழ்வாள்
பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால் அச்செயல் சிறப்பாக முடிவுறும்.
நாம் தூய்மையைக் கடைபிடித்தால் நோயின்றி நலமாக வாழலாம்.
விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
குணா, நாதனின் ஏழ்மையைக் கண்டு மனமிரங்கி பல உதவிகள் செய்தார்.நாதன் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்ததும் கொஞ்சமும் நினைத்துப் பாராமல் அவரிடம் சண்டை போட்டான்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
குமார் : உன் தாத்தாவுக்கு என்ன வயது? மிகவும் இளமையாக இருக்கிறாரே?
தரணி :என் தாத்தாவுக்கு எழுபது வயதாகிறது.இன்னும் நோயின்றி சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.
சுத்தம் சுகம் தரும்
தனிமரம் தோப்பாகாது
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
கீழ்காணும் சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
டைகர் வூட் ஒரு சிறந்த கோல்ப் விளையாட்டளராகத் திகழ்கிறார்.அவர் சிறுவயது முதலே கோல்ப் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.பல போட்டிகளில் கலந்து தம் திறமையை வளர்த்துக் கொண்டார்.
இளமை கல்வி சிலை மேல் எழுத்து
விளையும் பயிர் முளையிலே தெரியும்
சிறுகக் கட்டி பெருக வாழ்.
ஒற்றுமையே பலம்
கீழ்காணும் உரையாடலுக்கு மிகப் பொருத்தமான பழமொழி யாது?
ராமு : உன் மகன் இந்த வயதிலும் சைக்கிலைக் கொண்டு சாகசங்களையெல்லாம் செய்கின்றானே!
மதி : அவனது எதிர்காலம் எப்படியிருக்குமென்று இதிலிருந்தே தெரிகிறது அல்லவா...
இளங்கன்று பயம் அறியாது
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
