NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 8mins
சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடு.
வீரன் தன் முரட்டுக் குதிரையைப் _________________ என்று சாட்டையால் அடித்து அடக்கினான்.
கடகட
பளீர்பளீர்
தடதட
மடமட
அன்பின் வழியில் நடந்துகொள்கின்ற மனிதர்கள்தாம் உயிருள்ளவர்கள். அன்பு இல்லாதவரின் உடம்பு வெறும் தோலால் போர்த்தப்பட்ட உடம்பாகக் கருதப்படுகின்றது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பகுதியோடு தொடர்புள்ள திருக்குறளைத் தேர்ந்தெடு.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
எ + யானை =
சேர்த்தெழுதுக
ஏயானை
எய்யானை
எவ்வானை
எவ்யானை
உலகநீதியின் பொருளைத் தேர்ந்தெடு
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக்கூடாது
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்
மனம் போகும் வழியெல்லாம் போக வேண்டும்
மனம் போல பொய் சொல்ல வேண்டாம்
பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.
ஒரு கலையை அல்லது துறையைப் பற்றி முழுக்கப் படித்து அறிதல்.
கை கூடுதல்
ஈவிரக்கம்
கரைத்துக் குடித்தல்
தட்டிக் கழித்தல்
வாய்மை எனும் சொல்லின் பொருள் என்ன?
மாற்றம்
உண்மை
பொய்
வண்ணம்
சேர்த்தெழுதுக.
கண் + இமை =
கண்இமை
கண்ணிமை
கணிமை
கணீமை
பிரித்தெழுதுக
கற்றணை
கற்று + இணை
கல் + இணை
கல் + அணை
கற்+ அணை
சரியான இடைச்சொல்லைத் தேர்ந்தெடு.
பார்வதி வேகமாக ஓடினாள். _____________________ முதல் இடத்தைப் பெறவில்லை.
எனவே
ஆகவே
இருப்பினும்
ஏனென்றால்
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
எனத் தொடங்கும் செய்யுளில் எந்த ஐம்பூதம் முதலாகக் குறிக்கப்படுகிறது?
காற்று
ஆகாயம்
நிலம்
நீர்
கம்பராமாயணத்தில் எத்தனை பாடல்கள் அமைந்துள்ளன?
ஆயிரம்
பத்தாயிரம்
பன்னிரெண்டாயிரம்
இருபதாயிரம்
பிரித்தெழுதுக.
பொற்றோடு
பொற் + றோடு
பொன் + ஓடு
பொன் + தோடு
பொன் + ஆடு
சூழலுக்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.
அண்ணன் உண்டியலில் சேமித்து வைத்தப் பணத்தைத் தம்பி எடுக்கும் தருணத்தில் அப்பாவிடம் பிடிபட்டான்.
கரைத்துக் குடித்தல்
பெயர் பொறித்தல்
திட்ட வட்டம்
கையும் களவுமாய்
சேர்த்தெழுதுக.
உள் + பூசல்
உள்பூசல்
உல்பூசல்
உட்பூசல்
உப்பூசல்
இடுக்கண் எனும் சொல்லின் பொருளைக் கண்டறி.
இடுங்கிய கண்
இன்பம்
துன்பம்
இரண்டு கண்
