wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Pre link Module 15-குழந்தைக்கு தாய்பால் புகட்டுதலை கண்காணி

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

பிறந்த குழந்தை தாய்பால் குறைவாக குடிப்பதற்கு காரணம்

a)

குழந்தைக்கும் தாயின் மார்பகத்திற்கும் இடையில் உள்ள தவறான இணைப்பு.

b)

தேவையான வலிமையுடன் தாய்பால் குடிக்க இயலாததால்

c)

நோயின் போது குறைவாக அல்லது தாய்பால் அருந்துவது குறைக்கப்படுகிறது

d)

மேற்கூறிய அனைத்தும் சரி

2.

தாய் தாய்பால் கொடுப்பதில் உள்ள சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சில மார்பக தொடர்பான பிரச்சனைகள்.

a)

மார்பகத்தில் பால் குறைவாக இருப்பது

b)

மார்பக பால்கட்டி ,முலைக்காம்புகளில் புண்

c)

மேற்கூறிய அனைத்தும் சரி

d)

மேற்கூறிய அனைத்தும் தவறு

3.

குழந்தை பிறந்த உடன் தாய்பால் வழங்கப்படுவதை _______________ மூலம் உறுதி செய்யலாம்.

a)

தொலைபேசி வாயிலாக

b)

வீடுகள் பார்வையின் மூலம்

c)

அருகில் உள்ளவர்களை விசாரிக்கலாம்

d)

அனைத்தும் சரி

4.

பலவீனமான குழந்தைக்கு _____________________

a)

புட்டிபால் கொடுக்கலாம்.

b)

அடிக்கடி தாய்பால் கொடுக்கலாம்.

c)

தேவைபட்டால் தூக்கத்தில் இருந்து குழந்தையை எழுப்பி தாய்பால் கொடுக்கலாம்

5.

கங்காரு முறை கவனிப்பு என்றால் என்ன?

a)

தொட்டியில் கட்டி தூங்க வைப்பது

b)

அடிக்கடி தாய் பால் கொடுக்கும் முறை

c)

தாய் குழந்தையை உடலோடு சேர்த்து கதகதப்பாக வைத்துகொள்ளும் முறை

d)

மேற்கூறிய அனைத்தும் சரி

6.

குழந்தைக்கு எவ்வளவு கால நேரத்திற்கு ஒருமுறை பால் புகட்ட வேண்டும்?

a)

1 நாளுக்கு ஒரு முறை

b)

ஒரு நாளுக்கு 3 முறை

c)

விழித்துகொண்டு இருக்கும் போது

d)

1 அல்லது 2 மணிநேரத்திற்கு ஒரு முறை

7.

6 மாதத்திற்கு குறைவான குழந்தைக்கு தாய்பால் தவிர குழந்தைக்கு என்னவெல்லாம் கொடுக்கலாம்?

a)

தேன் கொடுப்பது ஆரோக்கியமானது

b)

மாட்டுப்பால் கொடுக்கலாம்

c)

தண்ணீர் கொடுக்கலாம்

d)

தாய்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்

8.

தாய்பால் ஊட்டும் பொழுது குழந்தையின் தலை சிறிது சாய்ந்து இருக்க வேண்டும் அது முன்பக்கமாகவா அல்லது பின்பக்கமாகவா?

a)

முன்பக்கமாக

b)

பின்பக்கமாக

9.

தாய் பால் ஊட்டும் பொழுது _________________ குழந்தையின் வாயில் இருப்பதை உறுதி செய்யவும்

a)

காம்பு பகுதி

b)

ஆரியோலாவின் பெரும்பகுதி(கருமை நிற பகுதி

c)

குழந்தையின் உதடு

d)

இவற்றில் எதுவும் இல்லை

10.

பலவீனமாக பிறந்த குழந்தை சரியாக பாலை உறிஞ்சி குடிக்க முடியவில்லை எனில் என்ன செய்யலாம்

a)

தாயின் பாலை தூய்மையான பாத்திரத்தில் சேகரித்து கொடுக்கலாம்

b)

புட்டிபால் கொடுக்கலாம்

c)

தண்ணீர் கொடுக்கலாம்

d)

அனைத்தும் சரி

11.

பாலை சேகரிப்பதற்கு முன் ,மார்பகமானது நன்றாக_________________

a)

சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு நன்றாக கழுவ வேண்டும்

b)

வெதுவெதுப்பான தண்ணீரை மார்பகம் மேல் ஊற்றவும்

c)

தண்ணீர் மட்டும் கொண்டு கழுவ வேண்டும்.

d)

அனைத்தும் சரி

12.

தாய்பால் கொடுக்கும் சமயத்தில், மார்பகம் கடினமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்

a)

வெதுவெதுப்பான டவலை மார்பகங்கள் மீது வைக்கலாம்

b)

சூடான தண்ணீரை மார்பங்கள் மீது ஊற்றலாம்

c)

குளிர்ந்த நீரில் காட்டலாம்

d)

அனைத்தும் சரி

13.

தூங்கி கொண்டிருக்கும் குழந்தைக்கு பால் கொடுப்பது?

a)

சரி

b)

தவறு

14.

தாய் பால் ஊட்டும்போது தாய்க்கு ஏற்படும் வலிக்கு காரணம்?

a)

தாய்பால் கட்டுவது

b)

குழந்தை அதிக அளவு பால் குடிப்பது

c)

பால் வற்றுவது

d)

அனைத்தும் சரி

15.

வலியுள்ள தாய்க்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள்?

a)

வீட்டில் உள்ள களிம்பை தடவச் சொல்ல்லவும்

b)

தாய் பால் ஊட்டுவதை நிறுத்த சொல்லவும்

c)

தாயை தாய்பால் கொடுக்க சொல்லி, வலிக்கு சிகிச்சை வழங்கவும்

d)

வலியை பொருத்த்து கொள்ள சொல்லவும்

16.

தாய்பால் ஊட்டுவதில் தாயானவள் ஒரு பிரச்சனையை சந்தித்தால் என்ன செய்ய வேண்டும்.

a)

வீட்டில் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்கவும்

b)

பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இருக்கலாம்

c)

பிரச்சனைக்காண காரணத்தை கண்டு பிடிக்கவும்,

d)

வலியை பொருத்த்து கொள்ள சொல்லவும்

17.

தாய்பால் ஊட்டுவதில் பிரச்சனைக்கு காரணம் குழந்தையின் பலவீனம் எனில், தாய்க்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள்.

a)

மார்பகத்தில் இருந்து பாலை எப்படி சேகரித்து ,குழந்தைக்கு ஊட்டுவது பற்றி சொல்லி கொடுப்பது.

b)

புட்டிபால் கொடுப்பது பற்றி சொல்லி கொடுப்பது.

c)

பாலை கொடுக்காமல் இருக்க சொல்வது

d)

அனைத்தும் சரி

18.

எத்தனை மணி நேரத்திற்கு சேகரித்த தாய்பால் மீண்டும் பயன்படுத்தலாம்?

a)

6 மணி நேரம்

b)

8 மணி நேரம்

c)

5 மணி நேரம்

d)

12 மணி நேரம்

19.

பிறந்த குழந்தை தாய்பாலை உறிஞ்சிகுடிப்பதற்க்கு கடினமாக இருந்தால், தாய்க்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள்.

a)

சேகரித்த பாலை சிறுது நாட்களுக்கு ஊட்ட சொல்வேன்

b)

கங்காரு தாய் பராமரிப்பு கொடுக்க அறிவுரை கொடுப்பேன்

c)

மேற்கூறிய இரண்டும் சரி

d)

மேற்கண்ட அனைத்தும் தவறு

20.

சேகரிக்க பட்ட பாலை 2-3 மணி நேரத்திற்கு பிறகும் குடிக்க வில்லை எனில் என்ன செய்ய வேண்டும்

a)

கண்டிப்பாக பால் கொடுக்க சொல்லவும்

b)

6 மணிநேரம் பிறகு முயற்சிக்கவும்

c)

ANM உதவுயுடன் SNCU-க்கு பரிந்துரைக்கவும்

d)

அனைத்தும் தவறு