NEW
Font size
Worksheetsநன்னெறிக்கல்வி ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
நாட்டிற்காகப் போராடிய தலைவர்களில் இவரும் ஒருவர்.
மாட் கிளாவ்
சுடிர்மான்
டத்தோ தேவகி கிருஷ்ணன்
முகமட் யூசோப்
நாட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டவர்களுக்கு நன்றி செலுத்தும் முறையல்ல.
மாலை சூட்டுதல்
விருது வழங்குதல்
பள்ளிக்குப் பெயர் சூட்டுதல்
வீட்டிற்கு விருந்துண்ண அழைத்தல்
துன் சம்பந்தன் அவர்கள் நாட்டின் ______________________ பெரும் பங்காற்றினார்.
பிள்ளைகள் வளர்ப்பில்
சுதந்திரப் போராட்டத்தில்
தோட்டங்களைச் சுத்தப்படுத்துவதில்
பொருளாதார வளர்ச்சியில்
கீழ்க்காண்பவர்களுள் விளையாட்டுத் துறையின் வழி நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர் பட்டியலில் அடங்காதவர்.
டத்தோ சோ சின் ஆன்
ரெந்தாப்
டான்ஶ்ரீ டத்தோ பஞ்ச் குணாளன்
டான்ஶ்ரீ டத்தோ டாக்டர் மணி ஜெகதீசன்
இவர் தம் வாழ்நாளைக் கலைத்துறைக்கே அர்ப்பணித்தவர்.
டத்தோ அன்வார் முசா
திரு. எஸ். குலசிங்கம்
துங்கு அப்துல் ரஹ்மான்
டான்ஶ்ரீ பி.ரம்லி
கூட்டுறவுத் தந்தை என அழைக்கப்படும் இவர் தோட்டப் பாட்டாளிகளுக்காத் தொண்டாற்றியவர்.
டத்தோ கு. பத்மநாபன்
டத்தோஶ்ரீ உத்தாமா ச.சாமிவேலு
துன் வீ.தி. சம்பந்தன்
டத்தோ ஆறுமுகம்
நாட்டின் பிரபலமானவர்களின் பங்களிப்பை மதிக்கும் போது ஏற்படும் உணர்வு அல்ல.
சஞ்சலம்
அன்பு
மகிழ்ச்சி
பெருமிதம்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
மேற்கண்ட திருக்குறள் உணர்த்தும் பண்பு யாது?
அன்பு
பரிவு
நன்றி
துணிவு
கீழ்க்காண்பனவற்றுள் எது நாட்டிற்குச் சேவையாற்றியவர்களின் பெயர் சூட்டப்பட்ட இடமாகும்.
கண் மருத்துவமனை, பெட்டாலிங் ஜெயா
செந்துல் தமிழ்ப்பள்ளி
இலகு இரயில் நிலையம் , பிரிக்பீல்ட்ஸ்
பெட்டோரானாஸ் இரட்டைக் கோபுரம்
இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட இடம் யாது?
அணு ஆய்வு நிலையம், பாங்கி
துணைவேந்தர் மண்டபம், மலாயா பல்கலைக்கழகம்
மலேசிய நாடாளுமன்றம், கோலாலும்பூர்
மெட்டேக்கா சதுக்கம், கோலாலும்பூர்
