wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழழொழிகள் (படிவம் 5)

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

நாம் செய்கின்ற அறச்செயல்கள் நமக்குத் துன்பம் நேர்கின்ற பொழுது நம்மைக் காத்து நிற்கும்.

a)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.

b)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

c)

மனக்கவலை பலக் குறைவு

d)

தர்மம் தலை காக்கும்

2.

சிறந்த பண்புடையவரோடு சேரும் ஒருவர் அப்பண்பாளரின் தன்மைகளைப் பெற்று விளங்குவார்.

a)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.

b)

கெடுவான் கேடு நினைப்பான்

c)

மனக்கவலை பலக் குறைவு

d)

தர்மம் தலை காக்கும்

3.

மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான்.

a)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

b)

கெடுவான் கேடு நினைப்பான்

c)

மனக்கவலை பலக் குறைவு

d)

தர்மம் தலை காக்கும்

4.

வெளித்தோற்றத்தைக் கண்டு ஒன்றைச் சிறந்ததென எண்ணி ஏமாந்துவிடக்கூடாது.

a)

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

b)

கெடுவான் கேடு நினைப்பான்

c)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

d)

தர்மம் தலை காக்கும்

5.

நாம் நம் உயிரை எவ்வாறு போற்றிப் பாதுகாக்கின்றோமோ, அவ்வாறே உலகில் உள்ள எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும்

a)

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

b)

தர்மம் தலை காக்கும்

c)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

d)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

6.

முன்னர் நாம் செய்த செயலின் பயனைப் பின்னர் நாம் அடைவது உறுதியாகும். நன்மை செய்யின் நன்மை விளையும். தீமை செய்யின் தீமை விளையும்.

a)

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

b)

தர்மம் தலை காக்கும்

c)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

d)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

7.

நமக்குத் தேவையான செல்வம், அறிவு, அனுபவம் போன்றவற்றை முன்கூட்டியே பெற்றிருந்தால்தான் அவை நம் தேவைக்குப் பயன்படும்.

a)

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

b)

கெடுவான் கேடு நினைப்பான்

c)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

d)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

8.

நம்மிடம் உதவி கேட்கும் ஒருவருக்கு உதவுவதில் தவறில்லை. ஆனால், அவர் உதவி பெறும் பொருட்டுப் பிறரிடம் அவருக்காகப் பிணையாளியாக இருக்கக்கூடாது.

a)

சைகை அறியாதவன் சற்றும் அறியான்

b)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

c)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

d)

துணை போனாலும் பிணை போகாதே

9.

செய்கையைக் கொண்டோ முகத்தோற்றத்தைக் கண்டோ ஒருவரின் கருத்தை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அறிந்துகொள்ள முடியாதவர் எதையும் அறிந்துகொள்ள முடியாதவரே ஆவார்.

a)

சைகை அறியாதவன் சற்றும் அறியான்

b)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

c)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

d)

துணை போனாலும் பிணை போகாதே

10.

கவலைமிக்க மனத்தை உடையவரின் உடல் சோர்வடைவதால் ஒரு செயலை முனைப்புடன் செய்ய இயலாது. ஆகவே, மனக்கவலை உடையவர் வலுவிழந்தவராகவே கருதப்படுவார்.

a)

சைகை அறியாதவன் சற்றும் அறியான்

b)

கெடுவான் கேடு நினைப்பான்.

c)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

d)

மனக்கவலை பலக் குறைவு