wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் புதிர்ப்போட்டி (தளிர்த் தமிழ்விழா)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்.


கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்றக் கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.

a)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

b)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

c)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்


நற்றாள் தொழாஅர் எனின்.

2.

கொடுக்கப்பட்ட திருக்குறளை நிறைவு செய்க.

________________________________________

எண்ணுவம் என்பது இழுக்கு

a)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

b)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

c)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

3.

சூழலுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.

என் பெயர் முத்து. நான் ஓர் இராணுவ விமானி. நான் தினமும் இறைவனை வணங்க தவறியதில்லை.

a)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

b)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

c)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

4.

விடுபட்ட திருக்குறளைச் சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

_____________ முதற்றே உலகு.

a)

இறைவன்

b)

பகவான்

c)

பகவன்

5.

திருக்குறளை நிறைவு செய்க.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

____________________________

a)

நாளை மறப்பது நன்று

b)

அன்றே மறப்பது நன்று.

c)

அன்றே மறப்பது நல்லதல்ல.

6.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

a)

கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.

b)

கற்காதவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.

c)

கற்றவர்களும் கற்காதவர்களும் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.

7.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

கோடிடப்பட்ட சொல்லின் பொருள் யாது?

a)

குற்றம்

b)

அழகு

c)

சரி

8.

யாக்கும் இன்மை முயற்றின்மை

திருவினை புகுத்தி விடும் முயற்சி


திருக்குறளை சரியாக வரிசைப்படுத்துக.

a)

முயற்றின்மை முயற்சி திருவினை யாக்கும்

இன்மை புகுத்தி விடும்.

b)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை விடும் புகுத்தி

c)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

9.

திருவள்ளுவர் எத்தனை குறள்களை எழுதி உள்ளார்?

a)

1320

b)

1330

c)

1340

10.

திருவள்ளுவர் எழுதிய முதல் குறள் யாது?

a)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

b)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

c)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு