wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கவிதைப் பொழில் புதிர்க்கேள்விகள்

Total questions: 28

Worksheet time: 27mins

Name
Class
Date
1.

நேற்றுத் திருந்தியவர் - உன்னை

நோக்கிப் பழகியவர்

ஊற்றுப் பெருக்கெனவே - இன்பம்

ஊறத் திளைக்கின்றார்


இக்கவிதை வரிகள் இடம்பெற்றுள்ள கவிதையின் மையக்கரு யாது

(a)  

2.

காற்றுக் கிடையினிலே - அலை

கத்தும் கடலினிலே

ஆட்டம் நடத்துகின்றார்! - நீயேன்

ஆழக் கிணற்றிலுள்ளாய்?


இவ்வரிகளில் முன்னேற்றத்திற்குத் தடையான காரணமாகக் கவிஞர் எதைக் குறிப்பிடுகிறார்?

4 lines
3.

நேற்றுத் திருந்தியவர் - உன்னை

நோக்கிப் பழகியவர்


உன்னை நோக்கிப் பழகியவர் என்பதன் பொருள் யாது?

4 lines
4.

தென்றல் விளையாடும் சோலை வனமெங்கள்

தேசமென்றே ஒன்றாய்க் கூடுங்கடி

குன்றினில் நின்றாடுங் கோல மயிலெனக்

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி


இக்கவிதைக் கண்ணியில் இடம்பெற்றுள்ள உருவக அணியைத் தெரிவு செய்க.

(a)  

5.

தோட்டப் புறத்தினில் தொட்ட இடத்தினில்

நொய்வமும் செம்பனை ஈயமெலாம்

பாட்டன் வியர்வை நீர் பட்ட சிறப்பென

பாடுங்கடி பாடி ஆடுங்கடி


கோடிடப்பட்ட சீரின் பொருள் யாது?

(a)  

6.

தோட்டப் புறத்தினில் தொட்ட இடத்தினில்

நொய்வமும் செம்பனை ஈயமெலாம்

பாட்டன் வியர்வை நீர் பட்ட சிறப்பென

பாடுங்கடி பாடி ஆடுங்கடி


கோடிடப்பட்ட சீர்களின் வழி கவிஞர் நமக்கு எதை உணர்த்துகிறார்?

4 lines
7.

தோட்டப் புறத்தினில் தொட்ட இடத்தினில்

நொய்வமும் செம்பனை ஈயமெலாம்

பாட்டன் வியர்வை நீர் பட்ட சிறப்பென

பாடுங்கடி பாடி ஆடுங்கடி


இக்கவிதைக் கண்ணியின் எதுகை என்ன?

(a)  

8.

வெட்ட வெளியினில் பட்ட மரமென

வேரற்றுப் போனதேன்


எனும் கவிதை அடியின் பொருள் என்ன?

4 lines
9.

கஞ்சிக் கின்றும் கையை ஏந்திக்

கடைவா சலிலே நிற்கின்றாய்


எனும் கவிதை அடிகளின் பொருள் என்ன?

4 lines
10.

கீழ்க்காணும் இணைகள் திரிபு அணிகளைக் குறிக்கின்றன. இவற்றுள் எது சரியான இணை?

a)

நிற்கின்றாய் - விற்கின்றாய்

b)

கண்டாயா - கொண்டாயா

c)

பாலை - கையில்

d)

நிற்கின்றாய் - இன்றிருப்பாய்

11.

ஈனவழிச் சென்றே நாளும்


இக்கவிதை வரிகள் இடம்பெற்றுள்ள கவிதையின் பாடுபொருள் யாது?

(a)  

12.

இவரது புனைப்பெயர் இரமி. இவர் என்ன கவிதை எழுதினார்?

(a)  

13.

இவர் கல்வி வளர்ச்சி எனும் பெருங்கொள்கையை உடையவர். இவர் புனைந்த கவிதையின் தலைப்பு என்ன?

(a)  

14.

எதுகை என்பது என்ன?

4 lines
15.

ஞானவழி நிற்பாய், நெஞ்சே

நல்லுப தேசம் இஃதே


இக்கவிதை வரிகளில், கவஞர் மனத்திற்கு கூறும் அறிவுரை என்ன?

4 lines
16.

சிறு புள்ளின ஓசையிலே எனும் கவிதை வரியின் பொருள் என்ன?

4 lines
17.

வான் நாடு விட்டுநகரும் முழுமதி என்பதன் பொருள் யாது?

4 lines
18.

காலை அழகு கவிதையின் மையக்கரு யாது

4 lines
19.

காலை அழகு கவிதையில் கிடைக்கப்பெற்ற படிப்பினை ஒன்றனைக் குறிப்பிடுக.

4 lines
20.

ஞான வழி கவிதையில் கவிஞர் கூறவரும் முதன்மைக் கருத்து என்ன?

4 lines
21.

தாமரை மொட்டுக்குள்ளே - அழகு

தங்கிக்‌ கிடக்குதடி!

சாமரை வீச்சினிலே - விரிந்து

சஞ்சலம்‌ போக்குதடி!


இக்கவிதை வரிகள் மூலம் கவிஞர் கூற வரும் கருத்து யாது?

4 lines
22.

காலம் பறக்குதடா என்ற கவிதையின் பாடுப் பொருள் யாது

(a)  

23.

______________ தமிழுக்குக் கிடைத்த முதல் நூலாகும்.

a)

திருக்குறள்

b)

எட்டுத்தொகை

c)

தொல்காப்பியம்

d)

நன்னூல்

24.

உயர்ந்தோர் வழி நிற்றல் எனும் மையக்கருவைக் கொண்ட கவிதை யாது?

(a)  

25.

கவிதைப் பொழில் புத்தகத்தில் மொத்தம் எத்துணைக் கவிதைகள் அடங்கியுள்ளன?

a)

11

b)

12

c)

13

d)

10

26.

மூவேந்தர்களின் காலத்தைப் பற்றி உணர்த்திய கவிதை எது?

(a)  

27.

மூத்த குடியினர் எனும் கவிதை வரியைக் கீழ்க்காணும் எந்த இலக்கிய வரலாற்றுச் செய்யுளுடன் கவிஞர் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்?

a)

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

b)

யாதும் ஊரே யாவரும் கேளீர்

தீதும் நன்றும் பிறர்தரா வாரயினும்

c)

கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே முந்தோன்றி

d)

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து

28.

தமிழர்களின் பொற்காலத்தைக் கவிஞர் நாளை நமதே கவிதையில் நன்கு விளக்கியுள்ளார். தமிழர்களின் பொற்காலம் எது?

a)

சங்க மருவிய காலம்

b)

தொல்காப்பியர் காலம்

c)

சங்க காலம்

d)

பக்தி இலக்கியக் காலம்