NEW
Font size
Worksheetsஅறிவியல் விழா 2021
Total questions: 15
Worksheet time: 8mins
மேலே உள்ள படத்தை ஒட்டி உற்றறிதலைக் குறிப்பிடுக.
செடியின் வளர்ச்சிக்குத் தரமான உரம் போடப்பட்டுள்ளது.
செடியின் இலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
செடியின் கிளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
செடியின் இலைகளின் எண்ணிக்கையும் உயரமும் அதிகரிக்கிறது
படம், கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு எலியைக் குறிக்கிறது.
இரு நாட்களுக்குப் பிறகு எலி இறந்து விட்டது, காரணம்_____________
உணவில் கீரை இல்லை
கூண்டில் நீர் இல்லை
கூண்டில் உள்ள காற்று அதிக வெப்பமாக உள்ளது
எலிக்குக் காற்றுக் கிடைக்கவில்லை
அமுதன் ஒரு தாவரத்தின் எல்லா இலைகளுக்கும் எண்ணெய் பூசினான். அந்த தாவரத்தின் நிலை என்ன?
நீர் கிடைக்காமல் தாவரம் இறந்து விடும்
தாது உப்பு இல்லாமல் தாவரம் இறந்து விடும்
காற்று இல்லாமல் தாவரம் இறந்து விடும்
சூரிய ஒளி கிடைக்காமல் இறந்து விடும்
படம், மனிதனின் பல் வகையில் ஒன்றைக் குறிக்கிறது.
வெட்டுப்பல்
கோரைப்பல்
கடைவாய்ப்பல்
ஒட்டுப்பல்
கமலன், சிவப்பு மற்றும் பச்சை பந்துகளை நிறத்திற்கு ஏற்ப இரண்டு வெவ்வேறு பெட்டிகளில் போட்டான். அவன் பயன்படுத்திய அறிவியல் செயற்பாங்கைக் குறிப்பிடுக.
தொடர்புக் கொள்ளுதல்
ஊகித்தல்
வகைப்படுத்துதல்
உற்றறிதல்
சாலமண்டர் நீரில் இருக்கும்போது எப்படிச் சுவாசிக்கும்?
செவுளைக் கொண்டு
ஈரமான தோலைக் கொண்டு
நுரையீரலைக் கொண்டு
சுவாசத் துளையைக் கொண்டு
ஒரு வெட்டுக்கிளியின் உடல் பகுதி நீருக்குள் அமிழ்த்தப்பட்டு, தலை மட்டும் வெளியே தெரியும் படி விடப்பட்டது. அவ்வெட்டுக்கிளி சில நிமிடங்களில் இறந்து விட்டது. ஏன்?
இறுக்கமாகப் பிடிக்கப்பட்டிருந்ததால்
அதன் சுவாச உறுப்பு வயிற்றுப் பகுதியில் உள்ளதால்
அது செவுளைக் கொண்டு சுவாசிப்பதால்
அதற்கு உணவு கிடைக்காத்தால்
பின்வரும் விலங்குகளுள் எது குளிர் இரத்த விலங்காகும்?
யானை
முதலை
குரங்கு
முயல்
பின்வரும் விலங்குகளுள் எது முதுகெலும்பு இல்லாதது?
கடலாமை
மலைப்பாம்பு
தலாப்பியா
பூரான்
படம், ஓர் உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையைக் காட்டுகின்றது.
ஏன் உணவகத்தில் மேற்காணும் செயலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது?
நீரிழிவு நோய் உண்டாகும்
காற்றுத்தூய்மைக் கேடு உண்டாகும்
நுரையீரல் புற்றுநோய் உண்டாகும்
காவல் அதிகாரி கண்டிப்பார்.
மனிதன் மூச்சுக்காற்றை உள்ளிழுக்கும் போது, அந்தக் காற்றில் ______________ உயிர்களியும் ____________ கரிவளியும் இருக்கும்.
குறைவான, அதிகமான
அதிகமான, அதிகமான
அதிகமான, குறைவான
குறைவான, குறைவான
ஒளிச்சேர்க்கையின் வழி தாவரங்கள் எதை வெளியிடுகின்றன?
உயிர்வளி
நீர்
பச்சையம்
கரிவளி
பின்வருவனவற்றுள் எந்தப் பொருள் ஒளி பிரதிபலிப்பின் கோட்பாட்டில் இயங்குகின்றது?
மூக்குக்கண்ணாடி
பல்வண்ணக் காட்சிக் கருவி
உருப்பெருக்காடி
தொலைநோக்காடி
பின்வருவனவற்றுள் எது ஒளியின் தன்மை அல்ல?
ஒளி விலகிச் செல்லும்
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்
ஒளி பிரதிபலிக்கும்
ஒளி திசையை மாற்றும்
ஊடகம் என்பது எத்தனை நிலைகளில் இருக்கு?
9
7
5
3
