wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி ஆண்டு 4

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

அண்ணனின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான். அதனால், மனம் வருந்தினான்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

2.

கயல்விழி பழைய நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள். ஆனால், அதிலுள்ள சில படங்களும் செய்திகளும் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத் தன் தாயார் கூற அறிந்து வருந்தினாள்.

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

3.

சிகையலங்காரம் செய்யும் கலையை மதுமிதா முறையாகப் பயின்று பட்டம் பெற்றாள். சுயமாகக் கடை ஒன்றையும் வைத்து அக்கலையைச் சிறப்பாகச் செய்து வருகிறாள்.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

4.

அறிவியலில் சிறந்து விளங்கிய விமலன், தனது புத்தாக்க ஆற்றலைக் கொண்டு பல உருவாக்கங்களை உருவாக்கி, வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டான்.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

c)

சிக்கனம் சீரளிக்கும்

5.

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும் என்ற கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சிக்கனம் சீரளிக்கும்

6.

இப்படத்திற்குப் பொருத்தமான பழமொழி எது ?

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

c)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

7.

' உலக அளவில் மிக நீளமான ஓவியங்களை வரைந்த தனி நபர்’ என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார், பரிமளகாந்த். 660 மீட்டர்- அதாவது 2166 அடி நீளத்திற்கு இவர் வரைந்த ஓவியங்கள் கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சென்னையை சேர்ந்தவரான பரிமளகாந்த் முழு நேர ஓவியர் அல்ல. கல்லூரி படிப்பின்போது பொழுதுபோக்காக ஓவியம் வரைவதில் ஈடுபட்டவர், வேலைக்கு சென்ற பிறகும் அதைத் தொடர்ந்து செய்தார். கின்னஸ் சாதனையாளராக அவருக்கு ஓவியம் வரைவதில் நாட்டம் உருவானது. நிறைய ஓவியங்களை வரைந்த நிலையில், பரிமளகாந்துக்கு வித்தியாசமாக ஓவியத்துறையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டிருக்கிறது. அந்த உந்துதலே கின்னஸ் சாதனையாக உருவாகியிருக்கிறது.


இச்சூழலுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

8.

சிறுவயது முதலே நீச்சல் பயிற்சியைக் கற்ற குமுதினி, இன்று பள்ளியைப் பிரதிநிதித்துப் பல போட்டிகளுக்குச் சென்று வாகை சூடுகிறாள்.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

9.

குற்றமுள்ள .........................

a)

நெஞ்சு குறுகுறுக்கும்

b)

நெஞ்சு பொறுபொறுக்கும்

10.

சிறு துரும்பும் ..........................

a)

பல் குத்த உதவும்

b)

கல் குத்த உதவும்

11.

காற்றுள்ள போதே........................

a)

காற்றிக் கொள்

b)

தூற்றிக் கொள்

12.

பல நாட்களாக பேச்சுப் போட்டிக்கு பயிற்சி எடுத்து வந்த கபிலன் அப்போட்டியில் முதல் நிலையில் வெற்றி பெற்றான்.

a)

சிறு துறும்பும் பல் குத்த உதவும்

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

c)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

13.

அறிவியலில் சிறந்து விளங்கிய விமலன், தனது புத்தாக்க ஆற்றலைக் கொண்டு பல உருவாக்கங்களை உருவாக்கி, வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டான்.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

c)

சிக்கனம் சீரளிக்கும்