Worksheetsதமிழ் மொழி மீள்பார்வை ஆண்டு 6 28102021
Total questions: 10
Worksheet time: 8mins
கீழே உள்ள செய்தி வாக்கியங்களில், சரியான பெயரெச்சம் உள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A.கவிதையை வாசித்த தியாகு மனம் கலங்கி நின்றான்.
B.மாங்காய் சாப்பிட புளிப்பாக இருக்கும்.
C.பழங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.
D.மேற்கல்வி தொடரும் மாணவர்களுக்கு அரசாங்கம் கல்வி உதவி நிதி
வழங்கியது.
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் படர்க்கைச் சொல்லை ஏற்றுள்ள வாக்கியத்தினைத் தெரிவு செய்க.
A.நீ வெற்றி அடைவது நிச்சயம்.
B.அவள் அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்வாள்.
C.உன்னுடைய புத்தகத்தை இரவல் கொடு.
D.நாளை நாம் சுற்றுலா செல்வோம்.
கீழ்காணும் செய்வினை, செயப்பாட்டுவினைகளில், சரியான இணை யாது?
செய்வினை - சிறுவன் குறட்பாக்களை ஓதினான்.
செயப்பாட்டுவினை - குறட்பாக்கள் சிறுவனால் ஓதப்பட்டன.
செய்வினை - காசுகள் சிறுவனால் சேர்க்கப்பட்டது.
செயப்பாட்டுவினை - சிறுவன் காசுகளைச் சேமித்தான்.
செய்வினை - பறவைகள் சிறகடித்துப் பறந்தன.
செயப்பாட்டுவினை - சிறகடித்துப் பறவைகள் பறக்கப்பட்டன.
செய்வினை - குரங்கு வாழைப்பழத்தைப் பறித்தது
செயப்பாட்டுவினை - குரங்கு வாழைப்பழத்தால் பறிக்கப்பட்டது.
தவறான இணையைத் தெர்வு செய்க.
படித்தனர் - பலர்பால்
விளையாடினாள் - பெண்பால்
வாங்கினான் - ஆண்பால்
கூவியது - பலவின்பால்
சொற்றொடர்களில், சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
A. இதுச் சரி
B. நடந்துச் செல்
C. அந்தப் பையன்
D. அவ்வளவுப் பெரிய
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில், வேற்றுமை உருபு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லைத் தேர்வு செய்க.
மகாபாரதக் கதையில் வறுமையோடு வாடிய தம் நண்பர் குசேலர்
தம்மிடம் யாசகம் கேட்கும் முன்பே அளவிட இயலாத அளவுக்குச்
செல்வத்தை வாரி வழங்கினார் கண்ணப்பிரான்.
கதையில்
வறுமையோடு
அளவுக்குச்
செல்வத்தை
பிரித்து எழுதுக. - தலைமையுரை
தலைவர் + உரை
தலைமை + யுரை
தலைமை + உரை
தலை + மையுரை
கொடுக்கப்பட்டுள்ள நேர்க்கூற்று வாக்கியத்துக்கு ஏற்ற சரியான அயற்கூற்று வாக்கியம் எது?
“நான் இன்று கூடுதல் வகுப்புக்கு வர இயலாது” என்று மணி நண்பனிடம் கூறினான்.
A. தான் இன்று கூடுதல் வகுப்பிற்கு வர இயலாது என மணி நண்பனிடம் கூறினான்.
B. மணி இன்று கூடுதல் வகுப்பிற்கு வர இயலாது என நண்பன் கூறினான்.
C. நண்பன் இன்று கூடுதல் வகுப்பிற்கு வர இயலாது என மணி கூறினான்.
D. தான் அன்று கூடுதல் வகுப்பிற்கு வர இயலாது என மணி நண்பனிடம் கூறினான்
கீழ்க்காண்பனவற்றுள் சரியானதைத் தெரிவு செய்க.
A. மெய் எழுத்துகள் - 12
B. உயிர் எழுத்துகள் - 18
C. உயிர் நெடில் எழுத்துகள் - 7
D. உயிர் குறில் எழுத்துகள் - 6
கீழ்க்காணும் படங்களுள் ஒன்றன்பாலைக் காட்டும் படத்தைத் தெரிவு செய்க.
