wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆனந்த் - செய்யுள் - அன்னை மொழியே

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

a)

அ) எந் + தமிழ் + நா

b)

ஆ) எந்த + தமிழ் + நா

c)

இ) எம் + தமிழ் + நா

d)

ஈ) எந்தம் + தமிழ் + நா

2.

ஐம்பெருங்காப்பியங்களுள் பொருந்தாததைத் தேர்க.

a)

அ) யசோதர காவியம்

b)

ஆ) சிலப்பதிகாரம்

c)

இ) மணிமேகலை

d)

ஈ) சீவக சிந்தாமணி

3.

உள்ளத்தில் கனல் மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடியது எது?

a)

அ) தேன்சிட்டு

b)

ஆ) வண்டு

c)

இ) தேனீ

d)

ஈ) வண்ணத்துப்பூச்சி

4.

“அன்னை மொழியே” என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர்

a)

அ) சேரன்

b)

ஆ) சோழன்

c)

இ) பாண்டியன்

d)

ஈ) பல்லவன்

5.

பொருந்தாதவற்றைக் கண்டறிக.

a)

அ) பாவியக்கொத்து

b)

ஆ) நூறாசிரியம்

c)

இ) தென்தமிழ்

d)

ஈ) பள்ளிப்பறவைகள்

6.

பொருந்தாதவற்றைக் கண்டறிக.

a)

அ) தமிழ்ச்சிட்டு

b)

ஆ) பள்ளிப்பறவைகள்

c)

இ) எண்சுவை எண்பது

d)

ஈ) உலகியல் நூறு

7.

பொருத்துக.
1. மாண்புகழ் – அ) சிலப்பதிகாரம்
2. மன்னும் – ஆ) திருக்குறள்
3. வடிவு – இ) பத்துப்பாட்டு
4. பாப்பத்தே – ஈ) மணிமேகலை

a)

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

b)

ஆ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ

c)

இ) 1.ஆ 2.இ 3.ஈ. 4.அ

d)

ஈ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

8.

‘அன்னை மொழியே’ கவிதை இடம் பெறும் நூல்

a)

அ) நூறாசிரியம்

b)

ஆ) கனிச்சாறு

c)

இ) எண்சுவை எண்பது

d)

ஈ) பாவியக்கொத்து

9.

“முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே”- என்று பாடியவர்

a)

அ) பெருஞ்சித்திரனார்

b)

ஆ) க.சச்சிதானந்தன்

c)

இ) வாணிதாசன்

d)

ஈ) கண்ண தாசன்

10.

“முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே” – என்று பாடியவர்

a)

அ) க.சச்சிதானந்தன்

b)

ஆ) துரை. மாணிக்கம்

c)

இ) வாணிதாசன்

d)

ஈ) முடியரசன்

11.

“நற்கணக்கே” என்பதில் சுட்டப்படும் நூல்கள் எத்தனை?

a)

அ) 18

b)

ஆ) 10

c)

இ) 8

d)

ஈ) 5

12.

“மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!” எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் எத்தனை?

a)

அ) ஐந்து

b)

ஆ) மூன்று

c)

இ) இரண்டு

d)

ஈ) எட்டு

13.

துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?

a)

அ) பெருஞ்சித்திரனார்

b)

ஆ) பெரியவன்கவிராயர்

c)

இ) தேவநேயப் பாவாணர்

d)

ஈ) தமிழண்ணல்

14.

பெருஞ்சித்திரனார் பாடலில் ‘பழமைக்குப் பழமை’ என்னும் பொருள் தரும் சொல்.

a)

அ) முன்னை முகிழ்ந்த

b)

ஆ) முன்னைக்கும் முன்னை

c)

இ) முன்னும் நினைவால்

d)

ஈ) முந்துற்றோம் யாண்டும்

15.

‘பாப்பத்தே எண் தொகையே’ – சரியான பொருளைக் கண்டறி.

a)

அ) பாடல் பத்து, எண் தொகை

b)

ஆ) பா பத்து, எட்டுத் தொகை

c)

இ) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

d)

ஈ) பத்தும் எட்டும்

16.

பெருஞ்சித்திரனாரின் ‘முந்துற்றோம் யாண்டும்’, ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ என்னும் இரு தலைப்பிலுள்ள பாடல்கள் எத்தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பெற்றன?

a)

அ) எண்சுவை எண்பது

b)

ஆ) உலகியல் நூறு

c)

இ) நூறாசிரியம்

d)

ஈ) கனிச்சாறு

17.

செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அது போல – பயின்று வரும் அணி

a)

அ) உவமையணி

b)

ஆ) உருவக அணி

c)

இ) எடுத்துக்காட்டு உவமையணி

d)

ஈ) தற்குறிப்பேற்றணி

18.

செந்தமிழ் – பிரித்து எழுதுக.

a)

அ) செந் + தமிழ்

b)

ஆ) செம் + தமிழ்

c)

இ) செ + தமிழ்

d)

ஈ) செம்மை + தமிழ்

19.

செந்தமிழ், செந்தாமரை ஆகிய சொற்களில் இடம் பெறும் இலக்கணக் குறிப்பைச் சுட்டுக.

a)

அ) பண்புத்தொகை

b)

ஆ) வினைத்தொகை

c)

இ) உம்மைத் தொகை

d)

ஈ) அன்மொழித்தொகை

20.

உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள – இவ்வடியில் காணும் நயம்

a)

அ) மோனை

b)

ஆ) எதுகை

c)

இ) முரண்

d)

ஈ) இயைபு

21.

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண் தொகையே! நற்கணக்கே
மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

இப்பாடலில் அமைந்த எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.

a)

அ) தென்னன்

b)

ஆ) மன்னும்

c)

இ) இன்ன றும்

d)

ஈ) இவையனைத்தும்

22.

‘அன்னை மொழியே’ என்னும் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர்

a)

அ) சுந்தரனார்

b)

ஆ) பாரதிதாசன்

c)

இ) பெருஞ்சித்திரனார்

d)

ஈ) பாவாணர்

23.

“சாகும் போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று பாடியவர் யார்?

a)

அ) பாரதிதாசன்

b)

ஆ) பெருஞ்சித்திரனார்

c)

இ) சச்சிதானந்தன்

d)

ஈ) ஆறுமுகநாவலர்

24.

பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் எது?

a)

அ) பாவியக்கொத்து

b)

ஆ) கனிச்சாறு

c)

இ) திருக்குறள் மெய்ப்பொருளுரை

d)

ஈ) உலகியல் நூறு

25.

தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் ஆசிரியர் யார்?

a)

அ) கண்ண தாசன்

b)

ஆ) பாரதிதாசன்

c)

இ) பெருஞ்சித்திரனார்

d)

ஈ) திரு.வி.க