wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P5 வேற்றுமை quiz 1

Total questions: 21

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

கரடி அந்தப் பெரிய _______________________ வெளியே வந்தது.

a)

குகையை

b)

குகையிலிருந்து

c)

குகையின்

d)

குகைக்கு

2.

அன்னையர்களைச் மகிழ்விக்கச் சிறப்பு _______________________ அதிர்ஷ்டக் குலுக்கும் நடைபெற்றது.

a)

கலைநிகழ்ச்சிலிருந்து

b)

கலைநிகழ்ச்சின்

c)

கலைநிகழ்ச்சியுடன்

d)

கலைநிகழ்ச்சிக்கு

3.

மழை பெய்யப் போவதை அறிந்த ________________________ தாய் அவனை எச்சரித்தார்.

a)

அவனுடைய

b)

அவனை

c)

அவனுக்கு

d)

அவனால்

4.

அவர்கள் விண்வெளிக்கப்பலைப் பார்த்து, _______________________ நின்றார்கள்.

a)

அதிர்ச்சியில்

b)

அதிர்ச்சியிலிருந்து

c)

அதிர்ச்சியை

d)

அதிர்ச்சிக்கு

5.

மாணவர்த் தலைவன் வகுப்பு _________________________ அமைதியாக இருக்கச் சொன்னான்.

a)

மாணவர்களை

b)

மாணவர்களுடன்

c)

மாணவர்களே

d)

மாணவர்களின்

6.

ஓர் ஊரில் ஒரு காய்கறி வியாபாரி இருந்தாள். ___________ பெயர் சிங்காரி.

a)

அவளை

b)

அவளுடைய

c)

அவளால்

d)

அவளுக்கு

7.

அவள் தினமும் காய்கறித் தோட்டங்களுக்குச் சென்று வர, ஒரு_________________ வைத்திருந்தாள்.

a)

மாட்டு வண்டியை

b)

மாட்டு வண்டிக்கு

c)

மாட்டு வண்டியால்

d)

மாட்டு வண்டியின்

8.

சிங்காரி அதிகம் பணம் சம்பாதித்தாலும் கருமித்தனமாக இருந்தாள். ஆனால், அவளின் கணவன் சிங்காரம், அவளது ___________________ எதிரானவன்.

a)

குணத்தை

b)

குணத்தால்

c)

குணத்துக்கு

d)

குணம்

9.

சிங்காரம் கருமித்தனம் கொண்ட, தன் _______________ குணத்தை மாற்றப் பாடுப்பட்டான்.

a)

மனைவிக்கு

b)

மனைவியை

c)

மனைவியால்

d)

மனைவியின்

10.

பல நாட்கள் முயன்ற பிறகு _____________ எண்ணம் ஈடேறியது.

a)

சிங்காரத்தின்

b)

சிங்காரனே

c)

சிங்காரனை

d)

சிங்கரனோடு

11.

ஒரு நாள்_______________ தீப்பற்றியபோது, ஏழை வாடிக்கையாளர்கள் அவளைக் காப்பாற்றினர். அன்றிலிருந்து சிங்காரி, தனது கருமித்தனத்தை விட்டுவிட்டாள்.

a)

சந்தைக்கு

b)

சந்தையில்

c)

சந்தையை

d)

சந்தையால்

12.

நவீனா மாடி __________________ அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.

a)

படியில்

b)

படிக்கு

c)

படியின்

d)

படியை

13.

மலாலாவின் உலகம் போற்றும் ___________________ நோபல் பரிசு கிடைத்தது.

a)

சேவையால்

b)

சேவையின்

c)

சேவைக்கு

d)

சேவையினது

14.

____________________! அம்மா சொல்வதைக் கேள் என்று தாயார் கூறினார்.

a)

கண்ணனுக்கு

b)

கண்ணனிடம்

c)

கண்ணனை

d)

கண்ணா

15.

பள்ளியில் ___________________ ஆசிரியரும் இன நல்லிணக்க நாளைக் கொண்டாடினர்.

a)

மாணவர்களுக்கு

b)

மாணவர்களின்

c)

மாணவர்களோடு

d)

மாணவர்களை

16.

பேரங்காடியில் ________________ பையைத் பிடுங்கிகொண்டு திருடன் ஓடினான்.

a)

பெண்மணிக்கு

b)

பெண்மணியின்

c)

பெண்மணியால்

d)

பெண்மணியுடன்

17.

குணா _______________ சிறப்பாகப் பேசியதால் பரிசு பெற்றான்.

a)

மேடையில்

b)

மேடைக்கு

c)

மேடையின்

d)

மேடையால்

18.

மாலதி தன் _______________ மெதுவோட்டத்திற்குச் சென்றாள்.

a)

தம்பியுடன்

b)

தம்பியால்

c)

தம்பியை

d)

தம்பியிடம்

19.

________________ வந்த அறிவிப்பைக் கேட்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

a)

மன்னருடன்

b)

மன்னரின்

c)

மன்னரிடமிருந்து

d)

மன்னரால்

20.

சமூக மன்றங்கள் சிறுவர்களுக்கான கதை சொல்லும் ________________ நடத்துகின்றன.

a)

போட்டிக்கு

b)

போட்டியை

c)

போட்டியால்

d)

போட்டியின்

21.

இளையர்கள் வீரதீரம் நிறைந்த சாகச ________________ ஆதரவு அளிக்கின்றனர்.

a)

விளையாட்டுகளுடன்

b)

விளையாட்டுகளுக்கு

c)

விளையாட்டுகளில்

d)

விளையாட்டுகளை