wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 5

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடு.


வீரன் தன் முரட்டுக் குதிரையைப் _________________ என்று சாட்டையால் அடித்து அடக்கினான்.

a)

கடகட

b)

பளீர்பளீர்

c)

தடதட

d)

மடமட

2.

அன்பின் வழியில் நடந்துகொள்கின்ற மனிதர்கள்தாம் உயிருள்ளவர்கள். அன்பு இல்லாதவரின் உடம்பு வெறும் தோலால் போர்த்தப்பட்ட உடம்பாகக் கருதப்படுகின்றது.


மேலே கொடுக்கப்பட்டுள்ள பகுதியோடு தொடர்புள்ள திருக்குறளைத் தேர்ந்தெடு.

a)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

b)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

c)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

d)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

3.

எ + யானை =


சேர்த்தெழுதுக

a)

ஏயானை

b)

எய்யானை

c)

எவ்வானை

d)

எவ்யானை

4.

பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.


ஒரு கலையை அல்லது துறையைப் பற்றி முழுக்கப் படித்து அறிதல்.

a)

கை கூடுதல்

b)

ஈவிரக்கம்

c)

கரைத்துக் குடித்தல்

d)

தட்டிக் கழித்தல்

5.

வாய்மை எனும் சொல்லின் பொருள் என்ன?

a)

மாற்றம்

b)

உண்மை

c)

பொய்

d)

வண்ணம்

6.

சேர்த்தெழுதுக.


கண் + இமை =

a)

கண்இமை

b)

கண்ணிமை

c)

கணிமை

d)

கணீமை

7.

பிரித்தெழுதுக


கற்றணை

a)

கற்று + இணை

b)

கல் + இணை

c)

கல் + அணை

d)

கற்+ அணை

8.

சரியான இடைச்சொல்லைத் தேர்ந்தெடு.


பார்வதி வேகமாக ஓடினாள். _____________________ முதல் இடத்தைப் பெறவில்லை.

a)

எனவே

b)

ஆகவே

c)

இருப்பினும்

d)

ஏனென்றால்

9.

பிரித்தெழுதுக.


பொற்றோடு

a)

பொற் + றோடு

b)

பொன் + ஓடு

c)

பொன் + தோடு

d)

பொன் + ஆடு

10.

சினந்தேடி என்பதன் பொருள் யாது?

a)

கோபத்தை அடக்கிக் கொண்டு

b)

கோபத்தை வருவித்துக் கொண்டு

11.

சினம் என்பதன் பொருள்:

a)

கோபம்

b)

கவலை

12.

மருத்துவமனையிலிருந்து ................................. நலமே வீடு வந்து சேர்ந்தனர்.

a)

நன்மை தீமை

b)

அரை குறை

c)

கல்வி கேள்வி

d)

தாயும் சேயும்

13.

பவனேஷ் .............................களில் சிறந்து விளங்கியதால் அனைவரும் அவனைப் பாராட்டினர்.

a)

நன்மை தீமை

b)

கல்வி கேள்வி

c)

பேரும் புகழும்

d)

தாயும் சேயும்

14.

பின்வருவனவற்றுள் எவை உயர்திணையாகும்?

a)

நாய், மயில்

b)

கடவுள், பூமி

c)

முருகன், அப்பா

d)

தேவர், தாவரம்

15.

பின்வருவனவற்றுள் எஃது அஃறிணையைக் குறிக்கவில்லை?

a)

தோட்டக்காரர்

b)

மனித குரங்கு

c)

காவல்நாய்

d)

மாட்டு வண்டி

16.

பால் எத்தனை வகைப்படும்?

a)

3

b)

2

c)

5

d)

4

17.

விழைகின்றார் என்ற சொல் எக்காலத்தைக் குறிக்கின்றது?

a)

இறந்த காலம்

b)

நிகழ் காலம்

c)

எதிர் காலம்