wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி படிநிலை இரண்டுக்கான புதிர்ப்போட்டி

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

கோலம் அக்காவால் போடப்பட்டது? வாக்கியத்தில் இருக்கும் வேற்றுமை உருபு என்ன?

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

2.

அக்கட்டடம் சில நொடிகளுள் _______வென இடிந்து விழுந்தது.

சரியான இரட்டைக்கிளவி என்ன?

a)

மள மள

b)

மட மட

c)

தட தட

d)

சர சர

3.

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம். உலகநீதிக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.

a)

மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக் கூடாது

b)

நஞ்சுடைய பாம்புடன் ஒருநாளும் விளையாடக் கூடாது

c)

பயம் இல்லாமல், தனியாகப் பயணம் செய்யக்கூடாது.

4.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். வல்லவனுக்கு என்ற சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

a)

பலசாலி

b)

திறமைசாலி

5.

கடுக்காய் கொடுத்தல் எனும் மரபுத் தொடரின் பொருள் என்ன?

a)

உறுதி பூணுதல்

b)

உறுதியாக

c)

ஏமாற்றித் தப்புதல்

6.

திருவள்ளுவர் மொத்தம் எத்தனை திருக்குறள்களை இயற்றியுள்ளார்?

a)

1200

b)

1330

c)

1440

7.

இப்படத்தை உணர்த்தும் சரியான பழமொழி எது?

a)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

b)

ஆழம் அறியாமல் காலை விடாதே

c)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

8.

இப்படத்தை உணர்த்தும் இணைமொழியைத் தேர்ந்தெடுக.

a)

அருமை பெருமை

b)

பழக்க வழக்கம்

c)

ஆடிப்பாடி

9.

என் அம்மா மிகவும் அன்பானவர். _________ சில சமயங்களில் கண்டிப்பாக நடந்து கொள்வார்.

a)

எனவே

b)

ஆகவே

c)

மேலும்

d)

இருப்பினும்

10.

சரியான விடையைத் தெரிவு செய்க.

படைவீரன் ________யின் மீது ஏறிப் போருக்குச் சென்றான்.

a)

அவ்வானை

b)

அய்யானை

c)

அவ்யானை

11.

கடல் + அலை

சரியாகப் புணர்ந்து வந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

கடல் அலை

b)

கடலலை

12.

கீழ்காணும் படங்களில் தொழிற்பெயரைக் காட்டும் படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
13.

குறளின் முதல் அடியைப் பூர்த்தி செய்க.

_______________________________________

தோன்றலின் தோன்றாமை நன்று.

a)

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

b)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

c)

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

14.

சினைப்பெயர் என்றால் என்ன?

a)

ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது

b)

ஒரு பொருளின் பகுதிகளை அல்லது உறுப்புகளைக் குறிப்பது

c)

குணத்தை அல்லது பண்பைக் குறிப்பது

15.

அவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

வாக்கியத்தில் வரும் அவர்கள் எந்த வகை இடத்தைச் சேர்ந்தது?

a)

தன்னிலை

b)

முன்னிலை

c)

படர்க்கை

16.

மேலே உள்ள படத்தில் இருப்பவர்கள் நால்வர்கள் (சமயக்குரவர்) ஆவர் ஒருவரைத் தவிர..

a)

திருஞானசம்பந்தர்

b)

சுந்தரமூர்த்தி நாயனார்

c)

மாணிக்கவாசகர்

d)

சமண முனிவர்

17.

காலையுணவு. பிரித்தெழுக.

a)

காலை + உணவு

b)

காலை + யுணவு

c)

காலையு + ணவு

18.

சரியான இலக்கண மரபு கொண்ட சொற்றொடரைத் தேர்ந்தெடுக.

a)

ஒரு பூனை

b)

ஓர் பூனை

c)

அஃது பூனை

19.

வேற்றுமை உருபுகள் எத்தனை வகைப்படும்.

a)

9

b)

10

c)

7

d)

8

20.

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல். இப்பொருளை உணர்த்தும் சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

இலைமறை காய் போல

b)

காட்டு தீ போல

c)

சூரியனைக் கண்ட பனி போல

d)

அனலில் இட்ட மெழுகு போல