wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 4

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வாக்கியத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

பிரபாகரன் __________________ படித்ததால் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.

a)

அன்றும் இன்றும்

b)

கண்ணும் கருத்துமாய்

c)

அரை குறை

d)

மேடு பள்ளம்

2.

"சில இடங்களில்" எனும் கருத்தை விளக்கும் இணைமொழியனத் தெரிவு செய்க.

a)

அல்லும் பகலும்

b)

ஆதி அந்தம்

c)

அங்கும் இங்கும்

d)

நன்மை தீமை

3.

குறளில் விடுபட்ட அடியைத் தெரிவு செய்க


புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

____________________________________________

a)

இழுக்கா இயன்றது அறம்

b)

தெய்வத்துள் வைக்கப் படும்

c)

இகழ்வாரை நோவது எவன்

d)

தோன்றலின் தோன்றாமை நன்று

4.

பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.


வேலை + ஐ =

a)

வேலைஐ

b)

வேஐ

c)

வேலைக்கு

d)

வேலையை

5.

பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.


குடும்பம் + ஓடு =

a)

குடும்பமோடு

b)

குடும்பத்தோடு

c)

குடும்பம்ஓடு

d)

குடும்போடு

6.

கோடிப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமையைக் குறிப்பிடுக.


கயல்விழி துணி துவைத்தாள்.

a)

1-வேற்றுமை உருபு

b)

2-வேற்றுமை உருபு

c)

3-வேற்றுமை உருபு

d)

4-வேற்றுமை உருபு

7.

பின்வரும் விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக.


" வாழ வேண்டிய அறநெறியில் வாழ்ந்தால் உலகம் நம்மை மதிக்கும்"

a)

அகர முதல

b)

வையத்துள் வாழ்வாங்கு

c)

ஞாலங் கருதினுங்

d)

நன்றி மறப்பது நன்றன்று

8.

அண்ணனின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான். அதனால், மனம் வருந்தினான்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

9.

கயல்விழி பழைய நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள். ஆனால், அதிலுள்ள சில படங்களும் செய்திகளும் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத் தன் தாயார் கூற அறிந்து வருந்தினாள்.

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

10.

சிறு _____________ பல் குத்த உதவும் .

a)

துரும்பும்

b)

கரும்பும்

c)

எறும்பும்

11.

சிகையலங்காரம் செய்யும் கலையை மதுமிதா முறையாகப் பயின்று பட்டம் பெற்றாள். சுயமாகக் கடை ஒன்றையும் வைத்து அக்கலையைச் சிறப்பாகச் செய்து வருகிறாள்.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

12.

அறிவியலில் சிறந்து விளங்கிய விமலன், தனது புத்தாக்க ஆற்றலைக் கொண்டு பல உருவாக்கங்களை உருவாக்கி, வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டான்.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

c)

சிக்கனம் சீரளிக்கும்

13.

வீண் செலவு செய்யாமல் பணத்தைச் சேமித்து வைத்த விமலாவிற்கு அப்பணம் அவளின் தம்பியின் அறுவை சிகிச்சைக்குப் பேருதவியாக இருந்தது.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

சிக்கனம் சீரளிக்கும்

c)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

14.

சாகில் தோட்ட மக்கள் அனைவரும் கொரோனா தொற்று நோயை விரட்டுவதில் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வெற்றி பெற்றனர்.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

15.

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும் என்ற கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சிக்கனம் சீரளிக்கும்