wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நேர்கூற்று அயற்கூற்று

Total questions: 18

Worksheet time: 26mins

Name
Class
Date
1.

நேர்கூற்று சொல்லுக்கு ஏற்ற சரியான அயற்கூற்று சொல்லைத் தேர்ந்தெடுக.

நீ

a)

நான்

b)

நாங்கள்

c)

தன்

2.

நேர்கூற்று சொல்லுக்கு ஏற்ற சரியான அயற்கூற்று சொல்லைத் தேர்ந்தெடுக.

என்

a)

நீ

b)

தன்

c)

அவன்

3.

நேர்கூற்று சொல்லுக்கு ஏற்ற சரியான அயற்கூற்று சொல்லைத் தேர்ந்தெடுக.

நாளை

a)

நேற்று

b)

முன்னாள்

c)

மறுநாள்

4.

நேர்கூற்று சொல்லுக்கு ஏற்ற சரியான அயற்கூற்று சொல்லைத் தேர்ந்தெடுக.

நேற்று

a)

முன்னாள்

b)

நாளை

c)

மறுநாள்

5.

”ஐயா, நாளை மாலை வகுப்பிற்கு வரமுடியாது,”என்றால் கோமதி.

a)

நாளை மாலை வகுப்பிற்கு வரமுடியாது என்று கோமதி ஆசிரியரிடம் கூறினாள்.

b)

கோமதி ஆசிரியரிடம் தான் மறுநாள் மாலை வகுப்பிற்கு வரமுடியாது எனக் கூறினாள்.

c)

ஆசிரியர் கோமதியிடம் தான் மறுநாள் மாலை வகுப்பிற்கு வரமுடியாது என்றார்.

6.

”அக்கா, இந்தச் சட்டையை எனக்கு கொடுங்கள்,” என்று அமுதா கேட்டாள்.

a)

அமுதா அக்காவிடம் அந்தச் சட்டையைத் தனக்குக் கொடுக்கும்படி கேட்டாள்.

b)

அமுதா தன் அக்காவிற்கு அந்தச் சட்டையைக் கொடுக்கும்படி கேட்டாள்.

c)

அக்காள் அந்தச் சட்டையை அமுதாவுக்குக் கொடுக்கும்படி கேட்டாள்

7.

அயற்கூற்று வாக்கியத்தை நேர்கூற்று வாக்கியமாக மாற்றுக.

முன்னாள் அச்சிறுவன் மகிழுந்தில் அடிப்பட்டதாக மாலதி கூறினாள்.

a)

”நான் அச்சிறுவன் அடிப்ப்ட்டான்,” என்றாள் மாலதி .

b)

”நேற்று மாலதி மகிழுந்தில் அடிப்பட்டாள்,” என்றான் சிறுவன்.

c)

”நேற்று அச்சிறுவன் மகிழுந்தில் அடிப்பட்டான்,” என்றாள் மாலதி.

8.

அயற்கூற்று வாக்கியத்தை நேர்கூற்று வாக்கியமாக மாற்றுக.

தான் மறுநாள் வருவதாக முரளி கூறினான்.

a)

”தான் மீண்டும் அங்கு வருவதாக,” முரளி கூறினான்.

b)

”நான் நாளை மீண்டும் இங்கு வருவேன்,” என முரளி கூறினான்.

c)

”நான் நாளை மீண்டும் அங்கு வருவேன்,” என முரளி கூறினான்.

9.

"இவை" எனும் நேர்க்கூற்றுச் சொல்லை அயற்கூற்றில் மாற்றினால்....

a)

அங்கு

b)

அவை

c)

சுவை

d)

பங்கு

10.

”நேற்று என் அம்மா கோழி வருவல் சமைத்தார்,” என்று முத்து கமலிடம் கூறினான்.

மேற்கண்ட வாக்கியத்தை அயற்கூற்று வாக்கியமாக மாற்றிடுக

a)

இதற்கு முன்பு தன் அம்மா கோழி வருவல் சமைத்தார் என்று முத்து கமலிடம் கூறினான்.

b)

மறுநாள் தன் அம்மா கோழி வருவல் சமைத்தார் என்று முத்து கமலிடம் கூறினான்.

c)

முன்னாள் தன் அம்மா கோழி வருவல் சமைத்தார் என்று முத்து கமலிடம் கூறினான்.

11.

. “நாங்கள் மிகவும் களைத்து விட்டோம்” என்றனர் மாணவர்கள்

a)

அயற்கூற்று

b)

நேர்க்கூற்று

12.

கீழ்க்காணும் அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.


தனக்குக் கவிதை எழுதுவதில் மிகவும் விருப்பம் என குழலி கனிமொழியிடம் கூறினாள்.

a)

A. "கனிமொழி, தனக்குக் கவிதை எழுத மிகவும் விருப்பம்," என்று குழலி கூறினாள்.

b)

B. "கனிமொழி, நான் கவிதை எழுத மிகவும் விரும்புகிறேன்," என்றாள குழலி.

c)

C. "கனிமொழி, எனக்குக் கவிதை எழுதுவதில் மிகவும் விருப்பம்," என்றாள் குழலி.

13.

கொடுக்கப்பட்டுள்ள அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.


அப்பா பாலாவிடம் விரைவாக மகிழுந்தைக் கழுவும்படிக் கூறினார்.

a)

A. பாலா, ''அப்பா மகிழுந்தை விரைவாகக் கழுவு,'' எனக் கூறினார்.

b)

B. ''விரைவாகக் கழுவு,'' என பாலா அப்பாவிடம் கூறினார்.

c)

C. ''பாலா, விரைவாக மகிழுந்தைக் கழுவு,'' என அப்பா கூறினார்.

d)

D. ''விரைவாக மகிழுந்தைக் கழுவுங்கள் அப்பா,'' என பாலா கூறினான்.

14.

கனத்த மழை பெய்ததால் தன் கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டதாக சலீம் கூறினான்.

a)

நேர்க்கூற்று

b)

அயற்கூற்று

15.

"அதோ அந்த மரத்தில் ஏராளமான மாங்காய்கள் உள்ளன", என்றான் கபிலன்.

a)

நேர்க்கூற்று

b)

அயற்கூற்று

16.

குமுதா வாணியிடம் "இது உன் புத்தகமா?" என்று கேட்டாள்.

a)

இது வாணியுடையப் புத்தகமா என்று குமுதா கேட்டாள்.

b)

இது தன்னுடைய புத்தகமா என்று குமுதா வாணியிடம் கேட்டாள்.

c)

இப்புத்தகம் வாணியுடையதா என்று குமுதா கேட்டாள்.

17.

தன் வீட்டில் புதிதாக ஒரு நாய்க்குட்டி வாங்கியிருப்பதாக சிவபாலன் சங்கரனிடம் கூறினான்.

a)

நேர்க்கூற்று

b)

அயற்கூற்று

18.

1.பின்வரும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?


நான் என் வீட்டுப் பாடத்தைச் செய்து முடித்து விட்டேன், என்றாள் அமுதா.

a)

A. செய்தி வாக்கியம்

b)

B. அயற்கூற்று வாக்கியம்

c)

C. வினா வாக்கியம்

d)

D. நேர்க்கூற்று வாக்கியம்